Wednesday, August 6, 2008

சிதறிக் கிடந்த சொற்களை சேர்த்ததில்...!

கடந்த பதிவுக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது என் சார்ந்த கூற்று...

*
சொல்லாவிட்டாலும்
சொல்ல முடியாவிட்டாலும்
சோகம் சுகமானதுதான்
அவை உன்னைச்சாந்தல்லவா
இருக்கிறது...!

*
நிரந்தரமாக உன்னையும்
தற்காலிகமாக உன் நினைவுகளையும்
பிரிநதுவிடத்தான் முடிகிறது
மறந்து விட இல்லை...!

*
கனவுகளை விட்டுச்சென்ற
உனக்கு என்
தூக்கத்தை எடுத்துச்சென்றது
நினைவு வரவேயில்லை...!


*
உன்னோடு பழகுகையில்
உலகத்துக்கு புதியவனாக்கினாய்
பின்பொரு நாளில் உனக்கும்...!


*
கொடுத்து வைத்தது என் காதல்
அது உன்னிடம் வந்திருக்கிறது
கொடுத்து வைக்கவில்லை நான்...!


*
நீயும் காதலிக்கையில்
எப்பொழுதாவதுதான்
உன்னோடு இருந்திருக்கிறேன்
இப்பொழுது
உன்னோடு மட்டுமே இருக்கிறேன்...!


*
உன் நினைவுகளை
விட்டுச்சென்றதிலும்
என் உயிரை
எடுத்துப்போயிருக்கலாம்...!


*
சில நாட்களாக
எதையும் எழுத முடியவில்லை
உன் பெயரைத்தவிர...!


*
உண்மைதான்
பிரிவுக்கு பின்னர்தான்
நிறையக் காதலிக்க முடிகிறது
உன்னை...!

33 comments:

Thamiz Priyan said...

பிரிவிற்குப் பின் தான் காதலின் வேகம் அதிகமாகுமாமே!... சொல்லக் கேள்வி தான்..... :)

Thamiz Priyan said...

//சில நாட்களாக
எதையும் எழுத முடியவில்லை
உன் பெயரைத்தவிர...!///
:)

Kumiththa said...

அனுபவித்து எழுதி இருக்கீங்க:)

Naveen Kumar said...

பிரிவின் தவிப்பு ஒவ்வொரு வரியிலும்:((

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Divyapriya said...

பிரிவின் வழியை இதை விட அழகாக சொல்ல முடியாது…

Unknown said...

//சொல்லாவிட்டாலும்
சொல்ல முடியாவிட்டாலும்
சோகம் சுகமானதுதான்
அவை உன்னைச்சாந்தல்லவா
இருக்கிறது...!//
ஆமாம் அண்ணா..!! :-((

Unknown said...

//உன்னோடு பழகுகையில்
உலகத்துக்கு புதியவனாக்கினாய்
பின்பொரு நாளில் உனக்கும்...!//
:-((
//நீயும் காதலிக்கையில்
எப்பொழுதாவதுதான்
உன்னோடு இருந்திருக்கிறேன்
இப்பொழுது
உன்னோடு மட்டுமே இருக்கிறேன்..!//
Superb..!! :-)

Unknown said...

//உன் நினைவுகளை
விட்டுச்சென்றதிலும்
என் உயிரை
எடுத்துப்போயிருக்கலாம்...!
*
சில நாட்களாக
எதையும் எழுத முடியவில்லை
உன் பெயரைத்தவிர...!
*
உண்மைதான்
பிரிவுக்கு பின்னர்தான்
நிறையக் காதலிக்க முடிகிறது
உன்னை...!//

நல்லா இருக்கு அண்ணா கவிதை..!! :-))

Kavinaya said...

//உன்னோடு பழகுகையில்
உலகத்துக்கு புதியவனாக்கினாய்
பின்பொரு நாளில் உனக்கும்...!
*
கொடுத்து வைத்தது என் காதல்
அது உன்னிடம் வந்திருக்கிறது
கொடுத்து வைக்கவில்லை நான்...!
*
சில நாட்களாக
எதையும் எழுத முடியவில்லை
உன் பெயரைத்தவிர...!//

அருமை, அருமை!

ஹேமா said...

தமிழன் வணக்கம்.காற்றைப் போல காதல்.எதையும் செய்யும்.எப்படியும் மாறும்...மாற்றும்.
கடவுளுக்குச் சம்மான சக்தி காதல் என்று சொல்லலாமா?

Divya said...

\\உண்மைதான்
பிரிவுக்கு பின்னர்தான்
நிறையக் காதலிக்க முடிகிறது
உன்னை...!\\

:((
இது உண்மைதானோ??

Divya said...

\\நிரந்தரமாக உன்னையும்
தற்காலிகமாக உன் நினைவுகளையும்
பிரிநதுவிடத்தான் முடிகிறது
மறந்து விட இல்லை...!\\


மீண்டும் படித்த தூண்டின இந்த வரிகள்....அர்த்தமுள்ள உண்மை வரிகள் தமிழன்!

Divya said...

\\உன் நினைவுகளை
விட்டுச்சென்றதிலும்
என் உயிரை
எடுத்துப்போயிருக்கலாம்...!\\

மனதை கணமாக்கும் வார்த்தைகள்.

Divya said...

பிரிவின் வலியை ஒவ்வொரு வரியும் ஆழமாக உணர்த்துகிறது.

ஏனோ இந்த கவிதை மனதை...மிகவும் பாதித்தது.

நல்லா எழுதியிருக்கிறீங்க தமிழன்:)

Mathu said...

உணர்வுபூர்வமாக எழுதி உள்ளீர்கள். கவிதை நன்றாக இருக்கிறது! :)

sukan said...

//உண்மைதான்
பிரிவுக்கு பின்னர்தான்
நிறையக் காதலிக்க முடிகிறது
உன்னை...!//

உறவுகளை பிரியும் போது அதன் தாக்கங்கள் இணைந்திருந்த பொழுதுகளை விட அதிகமானதாக இருப்பது உண்மையே.


//உன்னோடு பழகுகையில்
உலகத்துக்கு புதியவனாக்கினாய்
பின்பொரு நாளில் உனக்கும்...!//

இயல்பா வருது உங்களுக்கு

thamizhparavai said...

//உண்மைதான்
பிரிவுக்கு பின்னர்தான்
நிறையக் காதலிக்க முடிகிறது
உன்னை...!//

ச‌த்திய‌மான‌ வ‌ரிக‌ள் த‌மிழ‌ன்...(ஆனா இங்க‌ நிறையப் பேரு பிரிவுக்குப் பின்ன‌ர்தான் நிறைய‌ப் பேரைக் காத‌லிக்கிறாய்ங்க...)
//உன்னோடு பழகுகையில்
உலகத்துக்கு புதியவனாக்கினாய்
பின்பொரு நாளில் உனக்கும்...!//
பொட்டிலடித்தாற்போல் வார்த்தைகள்.. வாழ்த்துக்கள் தமிழன்...

Shwetha Robert said...

Awesome tamilan:)

a feel good poem, very nice:))))

MSK / Saravana said...

//சில நாட்களாக
எதையும் எழுத முடியவில்லை
உன் பெயரைத்தவிர...!//

பகிர்ந்து கொள்ள என்னிடம் இப்போது மிஞ்சி இருப்பது மௌனமும் நெஞ்சுக்குள் அடைத்துகொண்டுவிட்ட சோகமுமும் மட்டுமே..

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\
பிரிவிற்குப் பின் தான் காதலின் வேகம் அதிகமாகுமாமே!... சொல்லக் கேள்வி தான்..... :)
\

அண்ணே இது எனக்கு தெரியாதண்ணே ஆனா அப்படித்தான் சொல்றாய்ங்க...:)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\
//சில நாட்களாக
எதையும் எழுத முடியவில்லை
உன் பெயரைத்தவிர...!///
:)
\
ஒரு காலத்தில் அவள் பெயரை மட்டுமே கிறுக்கிக்கொண்டிருந்தேன் இப்ப அவளைப்பத்தி புலம்பிக் கொண்டிருக்கிறேன்...
நன்றி அண்ணன்

தமிழன்-கறுப்பி... said...

Kumiththa said...
\
அனுபவித்து எழுதி இருக்கீங்க:)
\
அனுபவம்தான்...
நன்றி

Naveen Kumar said...
\
பிரிவின் தவிப்பு ஒவ்வொரு வரியிலும்:((
\

ம்ம்ம்...
நன்றி முதல் வருகைக்கு...

தமிழன்-கறுப்பி... said...

@ விஜய்...

நன்றி விஜய்...

@ Divyapriya
\
பிரிவின் வழியை இதை விட அழகாக சொல்ல முடியாது…
\
நன்றி திவ்யப்பிரியா...

தமிழன்-கறுப்பி... said...

@ Sri...

நன்றி ஸ்ரீ வருகைக்கும் கருத்துக்களுக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

@ கவிநயா...

நன்றி கவிநயா...

@ ஹேமா...

வாங்கோ ஹேமா..
கடவுளைப்பற்றி எனக்கு தெரியாது!காதல் அது அற்புதங்களை நிகழ்த்தவல்லது அப்படியெண்டு சொல்லுகினம்...:)

தமிழன்-கறுப்பி... said...

@ Divya
\\உண்மைதான்
பிரிவுக்கு பின்னர்தான்
நிறையக் காதலிக்க முடிகிறது
உன்னை...!\\
:((
இது உண்மைதானோ??
\\

உண்மைதான் அவளை கேட்கும் பொழுது இருந்ததை விட என்னை மறுதலித்த பின்புதான் காதல் என்னை ஆக்கிரமித்திருந்தது முழுதாக...

@ Divya
\\நிரந்தரமாக உன்னையும்
தற்காலிகமாக உன் நினைவுகளையும்
பிரிநதுவிடத்தான் முடிகிறது
மறந்து விட இல்லை...!\\

மீண்டும் படித்த தூண்டின இந்த வரிகள்....அர்த்தமுள்ள உண்மை வரிகள் தமிழன்!
\\
ம்ம்ம்...

@ Divya
\\உன் நினைவுகளை
விட்டுச்சென்றதிலும்
என் உயிரை
எடுத்துப்போயிருக்கலாம்...!\\

மனதை கணமாக்கும் வார்த்தைகள்.
\\\

கனமாகிப்போன மனதின் வார்த்தைகள்...

@ Divya
\
பிரிவின் வலியை ஒவ்வொரு வரியும் ஆழமாக உணர்த்துகிறது.

ஏனோ இந்த கவிதை மனதை...மிகவும் பாதித்தது.

நல்லா எழுதியிருக்கிறீங்க தமிழன்:)
\

பாதிக்கப்பட்டவன் எழுதியதாலோ..:)

நன்றி திவ்யா...!

தமிழன்-கறுப்பி... said...

@ mathu..

நன்றி மது...

@ நர்மதா...

பிரிவில்தானே புரிகிறது அவை...
நன்றி நர்மதா...

தமிழன்-கறுப்பி... said...

@ தமிழ் பறவை...

என்னால அது முடியலை பாக்கலாம்.;)

நன்றி தமிழ் பறவை...

@ Shwetha Robert
நன்றி ஸ்வேதா...

@ M.Saravana Kumar...

அன்புக்கு நன்றி சரவணகுமார்...

மஹாராஜா said...

romba nalla irukku.

ஜியா said...

//நிரந்தரமாக உன்னையும்
தற்காலிகமாக உன் நினைவுகளையும்
பிரிநதுவிடத்தான் முடிகிறது
மறந்து விட இல்லை...!
//

:)))

pirivu valithaan

Anonymous said...

கனவுகளை விட்டுச்சென்ற
உனக்கு என்
தூக்கத்தை எடுத்துச்சென்றது
நினைவு வரவேயில்லை...!


Azhaga irukunga indha kavidhai

எவனோ ஒருவன் said...

//கொடுத்து வைத்தது என் காதல்
அது உன்னிடம் வந்திருக்கிறது
கொடுத்து வைக்கவில்லை நான்...!//

உண்மை தான்..