Monday, August 24, 2009

And, Now...






எப்பொழுதும் தீராத சொற்களோடு
எழுதுபவனொருவன் இருந்தான் என்னிடம்
ஏகாந்தம் மிகுகிற நேரங்களிலெல்லாம்
என்னுள் நிரம்புகிற சொற்களை வரைந்து கொண்டிருப்பான்,

எழுதி எழுதி எழுதித்தீராமல்
இருந்தது அவளுக்கான சொற்கள்.

எதிர்பாராததொரு மத்தியானத்தில்
என்னை மறந்து விடென்று விலகிப்போனாள்.

சொற்கள் நிரம்பித்திணற,
இப்பொழுது...
காணாமல் போனான் எழுதுபவன்!


பின்குறிப்புகள்:

ஆயில்யன்

தல

ரொம்ப நல்லவரு

ஜமால்

சென்னை ஆச்சி.



எப்பூடி..

Friday, August 14, 2009

பல்லிகள் உலாவுகிற அறை...




பூச்சி...

மல்லாந்து கிடக்கிற கரப்பான் பூச்சியின்
காற்றில் அலைகிற கால்களைப்போல
நூலிழைப்பிரியத்திற்காய் காத்திருக்கிறதெனது காலம்,

பழக்கமில்லாத தெருவில் உறுமுகிற நாயொன்றின்-
சாயலோடு என்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
சுவர் மீது விழித்திருக்கிற பல்லி,

அது அசையாமல் வைத்திருக்கிற வாலின் இலக்கு
எதிரேயிருக்கிற பூச்சியை குறி வைத்திருக்கிறது
விலகுதலுக்கு காத்திருக்கிறது பூச்சி,

வினாடிகளை சப்திக்கிற கடிகாரம்
பரலோகத்திலிருக்கிற பிதாக்களை எழுப்பிக்கொண்டிருக்கிறது
பல்லி பூச்சியை கவ்வுகிற வினாடியில்...

என்னை கடந்து போகிறது காலம்!



பின் குறிப்புகள்:

பல்லியும், பூச்சியும், கரப்பான்களும் பலவகைப் படிமங்களுக்கு அடிகோல்கிற விசயங்கள். மீதமிருக்கிற போதையோடு உறங்கப்போகையில் பல்லிகள் பற்றி எழுகிற சொற்களை எழுதி வைக்கத்தவறிவிடுகிறது எனது சோம்பல் அல்லது அலட்சியம்.

பல்லி முட்டைகள், கறுப்பு எச்சங்கள், அடிக்கடி பேசிச்செல்கிற பல்லிச்சத்தங்கள் என இருக்கும் என்னுடைய அறை. அப்பொழுதெல்லாம் பல்லிகளை கவனிப்பதற்கே நேரம் இருப்பதில்லை இப்பொழுது பல்லிகள் கனவில் வேறு வருகிறது ஆனால் பல்லிகளை காண்பதுதான் அரிதாயிருக்கிறது.மேசையிலிருக்கிற கொப்பிகளின் மேல் புணர்கிற பல்லிகளைக்கூட கவனித்ததில்லை என்னுடைய இரவுகள்.அந்த அளவுக்கு இரவுகளை களவாடியிருந்ததவள் நினைவுகள்.

கடந்த இரவில் குடித்துவைத்த தேத்தண்ணிக்கிளாசை சரிக்கிற சாம்பல் நிறப்பல்லி ஒவ்வொரு காலையிலும் என் கண்களில் படும். பல நாட்களை நான் கொஞ்சம் பெரிய அளவில் பயமுறுத்துவது போல் பார்க்கிற அந்த பல்லிக்கான புன்முறுவல் அல்லது வசையோடு தொடங்கியிருக்கிறேன்.ஆனால் ஒரு போதும் அதனை தாக்க முயன்றதில்லை.

இந்த சொற்களை எழுதிக்கொண்டிருக்கையில் கூட காதல், பெண்மை, காமம், குற்றவுணர்வு பயம், என நிறைய விசயங்கள் வந்து போயிற்று. இந்தசொற்களுனுக்கான புரிதல்களை உங்களிடமே விட்டுவிடுகிறேன்!

பல்லிகள் எப்பொழுதும் பேசுவவதில்லை.எப்பொழுதாவது பேசுகின்றன அப்பொழுது அவை பயமுறுத்தவும் செய்கின்றன.

தொடர்ந்து பல்லிகள் பேசுவதை கேட்கலாம்.


picture: http://www.redbubble.com/

Friday, August 7, 2009

பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகள் - 01





தேகம் திமிர் பிடித்தலைந்து கொண்டிருக்கிற காலமிது
பிடிமானமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது மனது
கட்டிப்போடுகிற பிரியங்கள் கொண்டென்னை இறுகப்பற்றிக்கொள்
உனக்கான யதார்த்தங்களை சுமந்தலைகிறதெனது உயிர்
என்னை கையாள்கிற நிதானங்கள் உனக்கிருக்கிறதாய்
உனது பற்றுதலுக்கு காத்திருக்கிறதெனது கணங்கள்
காலம் இனிய பதிலொன்றை சொல்லக்கூடும்
நீ என்னை காதலிக்காமல் இருந்து விடாதே.

____________________________________________________

பார்க்கிற பெண்களோடெல்லாம் தனகிக்கொண்டு திரிந்த என்னோடு தனகுகிறவளாக வந்த ராட்சஸி, மயக்கம் தருகிற கறுப்பு நிறமென காலத்தை கடத்திக்கொண்டு போகிற அழகுகளோடு எனக்குள் வரையப்பட்டிருந்த பெண்மைய உருவெடுத்து நடமாடினாள்.

காலம் நானறிய என் வாழ்வை கொண்டாடத்தொடங்கிய நாட்களின் தொடக்கமிது பரவசங்களை புதிது புதிதாய் அறிமுகம் செய்து கொண்டே இருந்தாள் அவள். இது வரை எழுதப்பட்ட என் வாழ்வின் வாசனை மிகுந்த நாட்குறிப்புகளுக்கு சொந்தக்காரியாய் அவளிருக்கிறாள்.

ஞாபகங்கள் தின்று கொண்டிருக்கிற எனக்குள் இருந்து பெருகிக்கொண்டிருக்கிற சொற்களை எழுதத் தொடங்கியிருக்கிறேன் இது இத்தோடு முடிந்து விடுகிற விசயம் போல் தெரியவில்லை இதன் முடிவில் அல்லது ஏதோவொரு பகுதியல் உங்களுக்கு கறுப்பியை அறிமுகப்படுத்துவேன்.


picture:photographersdirect.com

Thursday, August 6, 2009

சுவாரஸ்யமில்லாத பதிவு...

என்ன கேட்டாலும் சலிக்காமல் செய்து கொடுக்கிற அன்பானவர். அட பாவிகளா நாந்தானா கிடைச்சேன் என்று கேட்டாலும் என் அறுவைகளுக்கெல்லாம் கழுத்தைக்கொடுத்து விட்டு சிரித்தபடி இருக்கிற தல தமிழ்பிரியன் மூலமாக கிடைத்திருந்தது ஒரு சந்தர்ப்பம். ஆனால் அதை எப்படி பயன் படுத்துவதென்று தெரியவில்லை அனேகமாய் எனக்கு தெரிந்த அனைவரும் ஏதோ ஒரு வரிடமிருந்து இந்து பகிர்வை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.


எனக்கு புதிதாய் யாரையும் தெரியவில்லை நேரமில்லாததும் என் அடிப்படை இயல்புகளில் ஒன்றான மிகு சோம்பலையும் தவிர்க்க முடியாததில் அதிகம் படிக்கவும் முடிவதில்லை இணையத்தில், அதனால் பல பதிவர்களை தவற விட்டுக்கொண்டிருக்கிறேன்.


பழையவர்களை திரும்ப எழுத அழைப்பதற்காகத்தான் இந்த சந்தர்ப்பத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன் யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத படிக்கு நேரம் சதி செய்திருக்கிறது ஆனால் மனதுக்குள் நிறையப்பேரை நினைத்திருந்தேன்.இதில் முக்கியமான ஒரு பதிவர் அண்ணன் செந்தழல்ரவிதான்.





இது மட்டுமல்ல இளமைக்காலங்கள் என்று ஒரு தொடர் பதிவுக்கும் என்னை அழைத்திருந்தார் அந்த பதிவையும் எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேனேயொழிய எழுதவில்லை( இதை தானேய்யா மூணு மாதமா சொல்லுற). இதை ஒரு சில குறிப்புகள், புகைப்படங்களோடு தரலாம் என நினைத்திருக்கிறேன் ஆனால் புகைப்படங்களும் உறுதியான தகவல்களும் எனக்கின்னும் கிடைக்கவில்லை அவ்வளவுதான் இதுக்கான காரணம்.

முடிந்தவரை ஞானசம்பந்தர் கலைமன்றம் பற்றி முழுமையான ஆவணமாக அதனை எழுத நினைத்திருக்கிறேன் அதனால இந்த இளைமைக்காலங்கள் தொடர் பதிவை எழுதுறதுக்கு எனக்கு பதிலாக நிஜமா நல்லவைனை மேடைக்கு அழைக்கிறேன், அண்ணன் கொசுவத்தி சுத்துறதுல நெம்ப திறமையான ஆள் என்பது அவரது பதிவுகளை படிச்ச ஆக்களுக்கு தெரியும் அழகா feel பண்ணி எழுதுவார்.

பணி நிமித்தம் வேறு இடத்துக்கு மாற்றலாக வேண்டிய காரணம் இருப்பதால் இன்றொடு இணையத்தொடர்புகள் சில நாட்களுக்கு இருக்காதென்று உங்களுக்கெல்லாம் நல்ல செய்தி சொல்லி இருக்கும் தமிழ்பிரியன் படிக்க வேண்டும் என்பதற்காகவே அவசரமாய் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

*நேற்றெழுதிய பதிவு,ஆனா சோகம் என்னன்னா அதை இப்பொழுதுதான் பதிவாக்க முடிந்திருக்கிறது.


சவுதி வாழ்க்கையில் எனக்கிருக்கிற ஒரே வரவு இணையம்தான். இணையம் மூலம்தான் வேறொரு உலகம் எனக்கு கிடைத்திருக்கிறது.முன்னர் இருந்த நிலையிலிருந்து வெகுவாக மாறியிருக்கிறேன் இது பற்றி பின்னர்.ஏற்கனவே இருக்கனிற ஜமாலன்,முபாரக்(இவர்கள் இருவரும் இங்கே இருப்பது எனக்கு கிடைத்த சந்தர்ப்பம், அவர்களுக்கு அமைந்த கொடுமை)மற்றும் gulftamilan ஆகியோரோடு ரௌத்ரனும் அருகே வந்து சேர்ந்திருக்கிறார். இவருக்கு என்னை விட வயது அதிகமிருக்குமென்று நினைத்தேன் பெயர்தான் ரௌத்ரனே ஒழிய மென்மையாய் பெண்களுக்கு மிகப்பிடிக்கிற தோற்றத்தில் கலரும் மீசையுமாய் கலக்கலாய் இருக்கிறார்.

)

Gulftamilan -
பழைய காலம் முதலான வலைப்பூ வாசகர் பல பதிவர்களுக்கு மறந்து போன அவர்கள் பதிவுகளை கூட நினைவில் வைத்திருக்கிற ஒருவர்.


விதண்டாவாதம்:

இவனுக்கெல்லாம் ஒரு பதிவர்ங்கிற அங்கீகாரத்தை கொடுத்தா பதிவே எழுதாம பதிவு போடுறான் பாருய்யா என்று நிறைய குத்துகள் வரும் என்ன செய்வது மக்கள் நேரமின்மை சதி செய்து விட்டது.(எழுத தெரியவில்லை என்பதை வேறெப்படி சொல்ல)


*விருது கொடுத்த அண்ணனுக்கு நன்றிகள்.