Tuesday, September 27, 2011

எழுதிப்பார்த்தல் அல்லது இருப்பை உறுதிப்படுத்துதல்.

இணையத்தில் நான்றிந்த எல்லோரும் எங்கேயாவது எதையாவது எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இணையமும் எதையாவது புதிது புதிதாக அவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.


Facebook_ல் கணக்கை தொடங்க எவ்வளவோ சந்தர்ப்பம் இருந்தும் சத்தம் இல்லாமல் இருந்தேன். நண்பன் ஒருவனின் அழைப்புக்கு பிறகு சரி அப்படி என்னதான் இதிலே இருக்கிறதென்று உள்ளே நுழைந்து பார்த்தால், உரில இல்லாத ஆட்களே இல்லையென்றமாதிரி எல்லோரையம் பார்க்க முடிந்தது. 2010 இன் தொடக்கத்தில் ஆச்சரியப்படத்தக்க வகையில் எல்லோருமே இருந்தார்கள் பிறகு மெல்ல மெல்ல சிலர் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதாவது ரிவிட்டரிலும் இடைக்கிடை face book வந்து போவதற்கே முடியாமல் இருக்கிறது எனக்கு. எப்படி Facebook, twitter, Google buzz, Google + என்று எல்லாவற்றிலும் கணக்கு வைதிருக்கவும் பராமரிக்கவும், இயங்கவும் முடிகிறது. எப்பொழுதும் நிரம்பிக்கிடக்கிறது Google Buzz தற்செய்லாக நுழைந்தால் படு ஆரவாரமாக இருக்கிறார்கள் தோழர்கள் அதிலும் பெரும்பாலும் காணக்கிடைப்பதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த நண்பர்கள் பலரும் அங்கே இருக்கிறார்கள்.


இதைக்குறித்து இரண்டு மூன்று முறை எழுதி பிறகு எனக்கெதுக்கு,என்று பகிராமல் அப்படியே விட்டுட்டன்.இங்கே சொல்வதற்கு நிறைய இருந்தாலும் இப்பொழுது நான் சொல்ல வந்தது வேறு.


உண்மையில் எழுதாமல் இருப்பதிலும் பகிராமல் இருப்பதில்தான் சிக்கலே இருக்கலாம்.ஆக எதையாவது எழுதியே ஆகவேண்டும், எழுதுதல் என்பது நீங்கள் படித்தேயாகவேண்டும் என்பதற்கானவை அல்ல என்றாலும் எதையாவது பொதுவில் வைப்பது இருப்பை உறுதிப்படுத்துதல் என்றாகிறது. இஃது இந்த தனியே அலைகிற, அடைதல் கிடைக்காத ஆன்மாவொன்றின் மீளுதல்களாய் இருக்கலாம்.


எவ்வளவுதான் முயன்றாலும் ஒன்றிவிட முடியாத மனிதர்களே என்னை சூழ்ந்திருக்கிறார்கள், இது என்னுடைய பிழையாகவும் இருக்கலாம். சும்மா இருத்தலை வெறுக்கவும் அதை தவிர வேறெதையும் செய்யவும் முடியாத ஒரு தவிப்பையும் தருகிறது இந்த சூழல். மேலதிகமாய் எதையும் செய்ய உந்துவதில்லை உடலும், மனமும். புதிதாக சில விசயங்களை செய்து பாக்கலாம் என்றிருக்கிறேன், நாட்களை 'வழமை' என்பதாக வைத்திருப்பதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது?! எப்டியும் போகிற நாள்தான், ஆனால் அது நான் கடக்கிற நாளாக வேண்டும். இதுவொன்றும் அவ்வளவு சாதாரணமாக இருக்க முடியாது என்றும் தோன்றுகிறது, நாளை மற்றுமொரு நாள்தானே!


இப்போதைக்கு மெய்நிகரில் வாழப்பழகி விட்டிருக்கிற இந்த உடலும் மனமும் உண்மையை வெகு சமீபமாக பார்க்கையில் திணறிவிடக்கூடும், இந்த நாட்கள் தருகிற அசௌகரியம் பயம் தருவதாய் இருக்கிறது. ஒரே மாதிரியான நாட்களும் சலிப்பும் ஒருவிதமான கடுகடுப்பை எப்பொதும் கொண்டிருக்கிறன. மிக மந்தமான பிரக்ஞையோடிருக்கிற இந்த நாட்கள் இப்போதைக்கு கேவலமாகத்தெரிந்தாலும் பின்பொரு உன்னதமான பொழுதில் மென் முறுவலை வரவழைக்கக்கூடியவை என்று நம்புகிறேன். நம்புவோமாக.


இங்கே எழுதப்படுபவைகள் எல்லாம் எனக்காக நான் செய்பவை.எழுதுதல் என்பது எனக்காக நான் செய்வதாகத்தான் எப்பொழுதும் இருக்கும். உனக்கான திருப்தியை, சொறிதலை எதிர்பார்த்து நீ இன்னொருவனின் உலகத்துக்குள் நுழைய முடியாது வீணாக ஒரு அருமையான இலக்கியத்தை இழப்பதற்கு முயற்சிக்காமலிருப்பது உனது சந்ததிகளுக்கு நல்லது.

____________________________________________________________________


பொதுவில் சில :

#
திலீபனைப்பற்றி குறிப்பை எழுதியே ஆகவேண்டும் என்பதில் ஒரு அலுப்பாயிருக்கிறது. அவன் சின்ன வயசிலயே மனசில ஊறிப்போன ஒருத்தன். உங்களைப்போல அல்லது உங்களிலும் பார்க்க அவனை வெகு,வெகு அருகாமையில் நான் உணர்ந்திருக்கிறேன்.


#
தணிக்கைக்குழுவுக்கான எல்லைக்கோடுகளை சாதாரணமாக அகலம் பண்ணிக் கொண்டிருக்கிறது ஹிந்தி சினிமா, தமிழில் ஏன் இவ்வளவு திணறல் இந்த போலி அளவீடுகளை, பாதி மறைத்தலை இன்னும் எவ்வளவு காலத்துக்கு செய்யப்போகிறோம்.


#
The Piano Teacher - இந்தப்படத்துல நடிக்கிறப்போ அந்த நடிகைக்கு வயது அண்ணளவாக 50இருக்கலாம் : படம் குறித்து எதையாவது சொல்லியே ஆகவேண்டும் என்பதற்கு.


#

இந்தி சினிமா எவ்வளவு அழகிகளை கொண்டிருக்கிறது,சமீபத்தில் பாத்த அழகிகளுள் ஒருத்தி.




Radhika Apte @ Shor in the City as sapna.



#
The Dirty Picture - டிசம்பருக்கு வரப்போகிற படம் ட்ரெய்லரே கலங்குது வித்யாபாலனுக்கும், இந்த படம் சொல்லப்போகிற கதைக்கு சொந்தக்காரிக்கும் என் மனதளவில் இருக்கிற வித்தியாசத்தை உணர முடிகிறது.அந்த கண்ணகளும் நிறமும்.





#
ஒரு
கவிதையை எழுதி இருக்கலாம்
அதை எழுதத்தெரிந்தால்
அல்லது சொற்கள் கிடைத்தால்
அலையும் இந்த சொற்கள்
இலகுவில் வரிசைக்குள் வருவதில்லை.


______________________________________________________________

இந்த பகிர்வு சொல்லும் விசயம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் இலக்கியத்தில் இடிவிழ.

_________________________________________


மிகுதி நேரமும் சூழலும் கிடைக்கும்பொழுது.