Friday, July 24, 2009

நடுத்தரங்களின் விளிம்பு...




மிகுசலிப்பும்,
சொற்ப எதிர்பார்ப்புகளும்,
என கழிகிற நாட்கள் பழகிவிட்டது!
நடுஇரவின் தூக்கமின்மைகளையும்
குற்றவுணர்வுகளின் தடுமாற்றங்களையும்,
மற்றவைகளையும் தவிர்க்கத்தெரியவில்லை,
பொறுப்புகளும் நகர்கிற வயதும்
முரண்களில் இருப்பதை
நீங்கள் உணராமலிருப்தையும்,
என்மீதான அவர்கள் நம்பிக்கைளையும்,
தெறித்துக்கொண்டிருக்கிற என்
குறிமீதான சாபங்களையும் ஏற்றுக்கொள்கிறேன்
இல்லாத புனிதங்களின் துணையோடு,
அது வரையும் நீ என்னை சந்திக்காமலிரு!

Tuesday, July 21, 2009

முடியாத கனவு...





மூச்சுவாங்கிய மார்புகள் அதிர
குதித்துக்கொண்டாடிய மலை முகடும்
காசியப்ப ராசனின் நீராடும் தடாகமும் என
முகில் தழுவிய மலை உச்சியில்
மஞ்சள் தேவதையாய்
உன்னை முத்தமிடத்தூண்டிய நீயும்
என்னை இயங்காது தகர்த்த சூழ்நிலையும்
நெடுநாட்களாய்
நீராடும் நீயும், மலையும், சில பறவைகளும்
என கனவில் விரட்டுவன...

அந்த இரவு முழுவதும் என்னோடே இருந்தாய்
உதடுகள் அடக்கிய வார்த்தைகள் முழுவதும்
வெப்பம் நிரம்பிய உள்ளங்ககைளிரண்டில் புரிவித்தாய்
அப்பொழுதில் உன் விரல்களும் நகங்களும் பேசின.

விடிகிறது என்கிற பொழுதுகளில் எழுப்பி
வளைவுகள் வரரை முன்னேறிய என்
கனவினை கலைத்தாய் அந்த
கனவு இன்னமும் முடியவேயில்லை...



பின்குறிப்புகள்:

\\
மலைகளில் காணாமல் போன தேவதைகள் எழுத காரணமாயிருந்தது இந்த வரிகள் மட்டுமே ஆனால் இந்த வரிகளுக்கு ஒரு சிறுகுறிப்பை எழுதலாம் என்று எழுதுகையில் அது ஒரு நீளமான கதையாகிற்று.

\\
அதில் இவள்தான் நிஜம்.

\\
நன்றி இங்கே பெயர் சொல்ல விரும்பாத குண்டம்மாவுக்கு.

Monday, July 6, 2009

ரணகளக்குறிப்புகள் அல்லது கொட்டாவிகள்...!

புனைவு.

இரு
நூற்று
நாற்பத்து
ஏழு
எழுத்துக்களும்,
புதிய சொற்களும்
அல்லது, மிக
பழைய சொற்களும்.


புரிதலின் இல்லாமை

எனக்கும்,
உனக்கும்,
அவர்களுக்கும்,
நிறைய
வித்தியாசங்களிருக்கிறது
ஒரேயொரு
ஒற்றுமை இருக்கிறது.



தலைவர் வருகிறார்


தமிழின தலைவர்..
தமிழக முதல்வர்..
டாக்டர்..
தலைவர்...
நமது தலைவர் தொலைக்காட்சியில்...!



சமாதான இலங்கை.

வடக்கின் வசந்தம்,
அதிகாரப்பகிர்வு,
நாடுகடந்த அரசு,
போடா அரைலூசு
இடைத்தங்கல் முகாமில
இல்லையடா கக்கூசு!



கொட்டாவிகள்

இசம்,
தத்துவம்,
இலக்கியம்,
தலித்தியம்,
பார்ப்பனீயம்,
மார்க்கசியம்,
உலகமயம்,
எல்லாம் பேசும்
உண்ட மயக்கம்!


எழுத்துலகம்

சந்திப்பு,
ஒன்று கூடல்,
கூட்டம்,
பாசறை,
முகவுரை,
பொழிப்புரை,
தொகுப்புரை,
பழிப்புரை.


தெரியாதது

எனக்கு
எல்லாம்
தெரியும்
உனக்கு
எதுவும்
தெரியாது

இருவருக்கும்
வாழ்க்கை
தெரியாது.

இலக்கியம்

தமிழ்,
ஆங்கிலம்,
லத்தீன்,
பிரெஞ்சு,
எல்லலாம் வாசித்திருக்கிறாய்
வாழ்க்கையும்
மனிதர்களும் தவிர.

வாசகன்

செயமோகன்,
சுயமோகி,
இணையம்,
இலக்கிய நோய்கள்,
பதிவுகள்,
பின்னூட்ட குசுக்கள்,
சாரு,
சைக்கோ,
பாட்டு,
பக்கவாத்தியங்கள்,
கூத்தாடிகள்,
நடுவர்கள்,
தமிழ்மணம்,
ஆனந்தவிகடன்,
பிரபலங்கள்,
எல்லோரும் இருக்கிறார்கள்
என்னைத்தவிர.


புதுக்கவிதை

கொண்டையில பூக்காடு
கூடையில கருவாடு
பு--யில மயிர்க்காடு
பொத்தி வச்சு பூப்போடு
நாட்டுல படும் பாடு
நக்கி தின்று புகழ் பாடு
சோத்துக்கு பெரும்பாடு
இலக்கியம் ஒரு கேடு
இது ஒரு புதுக்கவிதை
இதை நீ கவட்டுக்குள் வை.


சின்னத்திரை...

நடன நிகழ்ச்சிகள்
நெடுந்தொடர்கள்
நிறையப்பெண்கள்
நிறையக்கதைகள்
நிறைய விளம்பரங்கள்
திரும்பத்
திரும்பத்
திரும்பத்
திரும்பத்
திரும்ப பெண்கள்,

நேற்று அவள்
இன்றைக்கு இவள்
நாளைக்கு மற்றவள்
மற்றொருநாள் இன்னொருத்தி
இன்னொரு நாள் அவளும் இவளும்

வாரம் முழுவதும் கனவுகள்

வாழ்க சின்னத்திரை,
வாழ்க தமிழ் தொலைக்காட்சி,
ஒழிக குறிகள்.


எழுத மறந்த குறிப்பு:

நாங்களும் இருக்கமுல்ல(நானும் ரவுடிதான்)

எப்பூடி...!

Thursday, July 2, 2009

நெற்றிக்கண்களும் குற்றங்களும்...!








*
செண்பகப்பாண்டியர்களும்
நக்கீரர்களும்
நெற்றிக்கண்களும்
இருந்து கொள்ள,
இருப்புக்கு அலைவது
தருமிகள்தான்.


*

அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி
சங்கதனை கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ
எம் கவியை ஆராய்ந்து சொல்லத்தக்கவன்?
_____________________

சங்கறுப்பது எங்கள் குலம்
சங்கரனார்க்கேது குலம் - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை!


பின்குறிப்பு:

1)
சண்டைகளும் சச்சரவுகளுமாய் இருக்கிறது இலக்கியச்சூழல்.இந்த 'சீனை" எந்தச்சண்டைக்கென்றாலும் பொருத்திப்பார்த்துக்கொள்க அது உங்கள் வாசிப்புக்கும் கற்பனைக்குமானது மற்றும்படி இது ஒரு இலக்கிய கும்மி.