Tuesday, February 19, 2008

காதல் வாரம்...




*

எனக்கும் உனக்கும் இடையில்

எதுவுமே இல்லை

காதலைத்தவிர...

*

காதல் என்னை

கடந்தும் உள்ளேயும் இருக்கிறது

ஆதலால் அது

கடவுள் ஆகியது...


*

காதல் வாரம் பதிவுக்கு

கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்

திரும்பத்திரும்ப உன்பெயரைத்தவிர

வேறெதுவும் எழுத முடியவில்லை

இரவு முழுவதும்...


காதல் வாழ்க...காதல் வாழ்க...காதல் வாழ்க...


* இந்த ஏழு நாட்களும் தனியே புலம்பியதில் (புலம்புவது இந்த ஏழு நாட்கள் மடடும்தான் என்றில்லை ஒவ்வொரு நாளும்தான்...) இருந்து சின்னச்சின்னதாய் சிலதை இங்கே உங்களுக்கு புலம்பியிருக்கிறேன் கோபப்படாமல் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் - இல்லை நாங்கள் பொறுக்க மாடடோம் என்கிற அன்புள்ளங்கள் வந்து கும்மிவிட்டுப் போகலாம் எவ்வளவோ தாங்கிட்டோம் இதை தாங்க மாட்டமா என்ன...



4 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

எனக்கும் உனக்கும் இடையில்


எதுவுமே இல்லை


காதலைத்தவிர...

இந்த வரிகள் நன்றாயிருக்கின்றன. அடிக்கடி உங்களுடைய கவிதைகளையும் பிரசுரிக்கலாமே?

தமிழன்-கறுப்பி... said...

நன்றி நிர்ஷன் தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்

ஆனால் ஏதோ ஒன்று புரியவில்லை...

நவீன் ப்ரகாஷ் said...

//எனக்கும் உனக்கும் இடையில்
எதுவுமே இல்லை
காதலைத்தவிர...//

:))அழகு !!

தமிழன்-கறுப்பி... said...

காதல் அழகான விடயம்தானே

நன்றி அண்ணன்...