Tuesday, March 4, 2008

சுஜாதா...




தோற்றம்- 03-05-1935.

மறைவு - 27-02-2008.


நான் ஒரு முறையாவது நேரில் சந்தித்து விட வேண்டும் என்று நினைத்திருந்த மனிதர்களுள் சுஜாதாவும் ஒருவர் நான் வாசிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து என் கைகளுக்கு வந்து போயிருக்கிறது சுஜாதாவுடைய எழுத்துகள் ஆரம்பத்தில் அட நல்லாயிருக்கே என்று படித்தாலும் போகப்போக தேடித்தேடி வாசிக்கும் அளவுக்கு ரசிகனாகிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்...

எப்படித்தான் இந்த மனுஷன் இப்படியெல்லாம் எழுதுகிறாரோ என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன் எத்தனை வயது இந்த ஆளுக்கு இப்படி இவ்வளவு விசயங்களை படிக்கவும் எழுதவும் எப்படிமுடிகிறது என்று ஒரு விதமாய் பெருமையும் வியப்புமாய் அவரை ரசித்திருக்கிறேன்...

அவர் மறைந்துவிட்டார் என்கிற தகவலை நான் அறிந்ததே அது நடந்து முந்று நாட்களின் பினர்தான் ஆனாலும் உடனடியாக நான் பதிவொன்றும் எழுதவில்லை ஏனோ தெரியவில்லை அவருடைய எழுத்தை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை என்றாலும் அவற்றைப்பற்றி பதிவெழுத எவ்வளவோ இருந்தும் இப்படி சுஜாதா சார்ந்த என் முதல் பதிவே அவருடைய மறைவு பற்றியதாக அமைந்துவிட்டதே என்கிற வருத்தமும் இன்றுவரை எதுவும் எழுதவில்லை ஆனாலும் அவரின் மறைவு குறித்த நினைவு என் குறிப்புகளில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவு...

சுஜாதா நம்மை விட்டு மறைந்திருக்கலாம் ஆனால் அவருடைய பெயரும் எழுத்தும் தமிழின் வரலாற்றில் காலத்தால் மறைக்க முடியாதது...

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.