Wednesday, March 5, 2008

அலைகள் ஓய்வதில்லை...





"மேரி போலாமா..."
ம்...
" விச்சு போலாமா..."
ம்..
" மேரி போலாமா..."
ம்...
"விச்சு போலாமா..."
ம்...
என்ன பார்க்கிறீர்கள் அலைகள் ஓய்வதில்லை படம் பர்த்ததிலிருந்து மனதில் இருக்கிற காட்சிகளில் இதுவும் ஒன்று படம் முழுவதுமே மனதில் இருந்தாலும் சில காட்சிள் அழகான கவிதைகளாக அடிக்கடி நினைவில் வருபவை... ராதா (மேரி) ஒரு தேவதை போல இயல்பான காதலியின் உருவமாக மனதில் பதிந்துவிட கார்த்திக் (விச்சு) அதே இயல்பில் காதலானக காட்டப்பட்டிருப்பதும் படம் பார்ப்பவர்களுக்கு தங்கள் காதலை திரையில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவது என்னவோ உண்மைதான். இது என்ன எங்கள் ஊரில் இந்தப்படம் முலம் சேர்ந்த காதலும் கூட இருக்கிறது,நான் பிறப்பதற்கு முதலே படம் வந்திருந்தாலும் முதல் தடைவை பார்க்கும் பொழுதே பிடித்துப்போன, மனதில் பதிந்து விட்ட படங்களில் இதுவும் ஒன்று அது ஏனோ தெரியவில்லை அலைகள் ஓய்வதில்லை படம் எனக்குள் ஏற்படுத்திய உணர்வும் எனக்கு புரியவில்லை...
இப்படி படம் 1981 ல் வந்திருந்தாலும் அதன்பிறகு வந்த எல்லா தலைமுறை இளைஞர்களுக்கும் இந்தப்படம் படித்திருந்தது என்பது மறுப்பதற்கல்ல ஆகவே எனக்கும் பிடித்துப்போனதில் வியப்பேதும் இல்லையே படம் பார்ப்பதற்கு முதலே பாடல்கள் பல முறை கேட்டிருந்ததாலும், அவை பிடித்த பாடல்களின் வரிசையில் முதல் இடஞ்களில் இருந்ததாலும், படம் பார்க்கையிலேயே பாடல் காட்சிகள் அழகாக மனதில் பதிந்துவிடுகிறது...
பாரதிராஜா காதலை அற்புதமாக காடசிப்படுத்துவார் என்றால் மணிவண்ணன் கதையை ஒரு கவிதையாகவே எழுதிருப்பார் இது போதாதென்று வைரமுத்து பொங்கி பிரவகித்திருப்பார் இவர்கள் மட்டும்தானா காதலை கொண்டாடுவார்கள் எனக்கென்ன காதல் தெரியாதா என்பது போல (அவருடைய தயாரிப்பில வந்த படம்வேறு) படம்முழுவதும் காதலை இசையாகஇழையவிட்டிருப்பார் இளையராஜா...
மொத்தத்தில் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு முறையேனும் அவரவர் கடந்த காலத்தையோ அல்லது நிகழ் காலத்தையோ ஞாபகப்படுத்தியிருக்கும் என்பது உண்மை. அத்தோடு காதல் என்பது எப்போதும் ஒரே மாதிரியே இருக்கிறது என்பதற்கு அலைகள் ஓய்வதில்லை படம் எல்லோருக்கும் பிடித்துப்போனதும் அது இத்தனை வருடங்களுக்கு பிறகும் ரசிக்கப்படுகிறது என்பதுமே நல்ல சாடசியாகிவிடுகிறது.
மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு இந்தப்படம் நிறையப்பிடிக்கும. இந்தப்படம் எனக்கு பார்க்கக் கிடைத்தது நான் 11ம் ஆண்டு படிக்கும்பொழுது என்று நினைக்கிறேன் கிடைத்ததும் ஒரு முழுமையான தரமான "Videocassette" அதனால் இருந்த இடத்தை விட்டு நகராமல் பார்த்து முடித்துதான் நகர்ந்தேன் படம்முடிந்த பிறகும் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன் படம் பார்த்தது பக்கத்து வீட்டில் என்றபடியால் அவர்களுடைய பல விதமான கிண்டல்களும்கேட்க வேண்டியிருந்தது
"ஆஆ... வயசுதானே அதுதான் அசையாமல் இருந்து பார்க்கிறான்..."
"யாரடா அது எங்களுக்கும் சொல்லன்..."
"என்னடா மயங்கி விட்டாய் போல இருக்கு"
"அதெல்லாம் சரி வரும் ஒண்டையும் யோசிக்காதை..."
என பல விதமான கதைகளை பக்கத்து வீட்டு "அன்ரி" சொன்னாலும் நான் எதற்கும் பதில் சொல்லவில்லை ஆனால் அவரும் படத்தை முழுவதுமாய் ரசித்து பார்த்தார் என்பது வேறுவிசயம்...
அது சரி இப்ப ஏன் இதைப்பற்றி சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா அது ஒன்றுமில்லை திங்கட்கிழமை கலைஞர் தொலைக்காட்சியில் போட்டதால திரும்பவும் ஒருமுறை இந்தப்படத்தை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது அதனால்தான்.
காதல் அதன் அலைகள் ஓய்வதில்லைதானே...

No comments: