Saturday, March 8, 2008

மகளிர்தின வாழ்த்துக்கள்...

*
பூமிக்கு
தேவதை என்கிற
அழகான வார்த்தையை தந்தது
பெண்மை...

*
பூமி
இன்னமும் பூக்கள்
தருவதற்கு காரணம்
பெண்மை...

*
ஒரு புள்ளியில்
பிரபஞ்சமாய்
பிரபஞ்சம்
ஒரு புள்ளியாய்
பெண்மை...


பெண்மையைப்பற்றி நான் என்ன சொல்வது, பெண்மையை பேசுகிற அளவுக்கு நான் இன்னமும் அதனை முழுதாய் உணரவில்லை என்பதோடு அது மிகப்பரந்த அர்த்தமும் சக்தியும் கொண்டது என்பதால் வாழ்த்துக்கள் மட்டுமே என்னால் தர முடியும்

உலகத்தில் உள்ள அனைத்து பெண்மைக்கும் என்னுடைய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்...

No comments: