Saturday, February 2, 2008

கடிதங்களுக்குப்பதிலாக...2

அனுப்பியிருந்தவை...2

*உன்னோடு கதைக்காமல் இருக்க முடியாதா
என்று கேட்கிறாய்
ஏனிப்படி சுற்றி வளைக்கிறாய்
சுவாசிக்காதே என்று
நேரடியாகவே சொல்லு...

*அடடா...
இதெல்லாம் கேட்டு வாங்க வேண்டியிருக்கிறது
எங்கே மறைத்து வைத்திருந்தாய்
இத்தனை காதலையும்
இன்னும் எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறாய்
என்னை கொடுமை கெய்ய
காதலில் கொடுமை
காதல் தானே...

*நீ என் தோள்களில் சாய்கிறாய் என்றால்
என் ஆயுள் முழுவதும் தாங்குகிறேன்
நீ என் மார்போடு தூங்குகிறாய் என்றால்
என் இரவுகள் முழுவதும் தருகிறேன்
உன்னோடு வருவதானால் இந்த
உலகத்தை விட்டும் வருகிறேன்...


* எந்த கடவுளுக்கு மாலை கட்டினாய்
உன் மாலைகளுக்காகவே
கடவுளும் காதலிக்கக்கூடும்
சொல்லி வை
நீ மாலையிடுவதும்
உன் தோள்களில் மாலையிடுவதும்
நான் மட்டும்தான் என்று...

* வாரந்தோறும் நீ கட்டும்
மாலைழுக்காகவே
காத்திருக்கின்றன தெய்வங்கள்
அது சரி...
எனக்கு எப்பொழுது மாலையிடுகிறாய்...
காத்திருப்பது
நானும்தான்...

2 comments:

Kumiththa said...

Very good thoughts! I like the style of writing...neenga eluthina sms thane..hehehe..

தமிழன்-கறுப்பி... said...

///Very good thoughts! I like the style of writing...neenga eluthina sms thane..hehehe..///

அதெப்படி கண்டு பிடிச்சிங்க குமித்தா

நன்றி... நன்றி...