Wednesday, February 13, 2008

காதல் வாரம்...




  • என்னை தேடிக்கொணடிருக்கையில்
    உன்னை கண்டு கொண்டேன்- இப்பொழுது நான்
    என்னை தேடுவதில்லை...


  • சில நாட்களாய்
    என் தனிமையை காணவில்லை
    என்னைச் சற்றியும் யாரும் இல்லை
    உன் நினைவுகளைத்தவிர...


  • தேவதையே
    வரம் தரவேண்டாம்
    விமோசனம் கொடு - உன் நினைவுகளுடனேயே
    வாழக்கடவது என்று...



  • நான் வாசிக்கிற கவிதைகள்
    உன்னை ஞாபகப்படுத்துகிறது
    நான் எழுதுகிற கவிதைகள்
    உன்னைச் சார்ந்திருக்கிறது
    நான் எழுதப்போகும் கவிதைகள்
    உனக்காக காத்திருக்கிறது
    வார்த்தைகளை எப்பொழுது தருவாய்...

No comments: