Friday, November 30, 2007

கடிதங்களுக்குப்பதிலாக...1


அனுப்பியிருந்தவை 01

வந்திருந்தவை இப்படியிருந்தால் அனுப்பியிருந்தவை அதைவிட மேலே ஒரு படி போயிருந்தது படித்துதான் பாருங்கள் இதில் ஒரு வருத்தம் என்னவென்றால் என்னால் தொடர்ச்சியாக அவற்றைப்படிக்க முடியவில்லை என்பதுதான் இருந்தாலும் பரவாயில்லை இனி திருட்டுத்தனமாக கிடைக்கும் சந்தர்ப்பங்களில் முடிந்தவரை படித்துவிடுகிறேன்...



*நான் என்ன ஆறுதல் சொல்ல உனக்கு

உன் நினைவுகள்தானே துணை எனக்கு

இப்பொழுது எப்படியிருக்கிறாய் கண்ணம்மா

உன்னை பார்த்துக்கொள்

உடம்பை அலட்டிக்கொள்ளாதே

கொஞ்சம்பொறு வந்துவிடுகிறேன்

அதுவரையும் நான் எப்பொழுதும்

உன்பக்கத்திலேயே இருப்பேன்

நம் நினைவுகளினூடே...


*தீபாவளியா

நீ என்னருகில் இருந்த

நாட்களை விட விசேசமாக

வேறெந்த நாட்கள்

இருக்கமுடியும் எனக்கு...


*சிதைந்துகொண்டிருந்த என்னை

செதுக்கியவள் நீ

என் மரியாதைக்குரிய தேவதையே

நான் உன் நிமித்தம் வாழ்கின்றவன்...



*பிரிவின் தூரம்

நாள் ஒரு வாரம்

நீ தரும் நேசம்

உயிரின் சுவாசம்

உன் நினைவுகள் என்னில்

தென்றலாய் வீசும்

அன்பே என்னை உன் எல்லைவரை

அழைத்துப்போகிறாயா...?





*என்னை மன்னித்துவிடு தமிழ்



உன்னை கோபப்பட எனக்கு உரிமையில்லையா



இங்கே நான் தனித்திருக்கிறேன்



என்னை தவிக்க விட்டுவிடாதே...



*நீ என்ன நினைக்கிறாய்

என்பதுஎனக்குத் தெரியாது ஆனால்

நான் உன்னைத்தான்

நினைததுக்கொண்டிருக்கிறேன்

எனக்கான நேரத்தை ஒதுக்குவதில்

உனக்கு சிரமம் இருக்கிறதோ அல்லது

அவசியம் ஏற்படவில்லையோ...

No comments: