Saturday, February 2, 2008

கடிதங்களுக்குப்பதிலாக...2

வந்திருந்தவை...2

* ஒரு ரயில் நிலையத்தில்
சரியான நேரத்திற்கு வந்திறங்கிய
ஆகாய விமானத்தைப்போல
எத்தனை பெரிய சேதத்தை
ஏற்படுத்திவிட்டாய் என்னுள்ளே!
எப்பொழுதுசீர் செய்யப்போகிறாய்...?

*என்ன ராஜா...
இந்த நேரத்தில்...
இப்பொழுது கோவிலுக்கு
மாலை கட்டிக்கொண்டிருக்கிறேன்
நான் கோர்த்துக்கொண்டிருப்பது பூக்களல்ல
உன் ஞாபகங்கள்தான்...

* ஒரு உயிர்
இன்னொரு உயிருக்காக போராடுவது
காதல் அல்லது பிரசவம்...
உன்னைப்பெற்ற பொழுது
உன் அன்னை கொண்ட வேதனையை
இப்பொழுது நீயெனக்கு
தந்து கொண்டிருக்கிறாய்...


( இது ஒரு தனி நபர் விசயம் என்பதால் இடையிடையே சில தகவல்களை தராமல் விட்டிருக்கிறேன் அவை தகவல்கள் அல்ல இரு காதல் நெஞ்சங்கள் பரிமாறிக்கொண்ட உணர்வுகள்... அவர்களது பிரிவின் வேதனையை அங்கே எழுதியிருந்தார்கள் இல்லையில்லை அழுதிருந்தார்கள்... அதனால் அவற்றை தவிர்த்து விட்டேன்...)

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//ஒரு ரயில் நிலையத்தில்
சரியான நேரத்திற்கு வந்திறங்கிய
ஆகாய விமானத்தைப்போல//

சுவாரசியமான வித்தியாசமான உவமை..நன்று..