Saturday, December 6, 2008

ஒரு அவசர அறிவிப்பு...!!!

இது தமிழ்நதி அக்காவிடமிருந்து வந்த அறிவிப்பு ஒன்று.நேற்று விடுமுறையில் இருந்ததால இணையத்துக்கு வர முடியவில்லை இன்றும் இப்பொழுதுதான் வர முடிந்தது...


அன்பு நண்பர்களுக்கு,

இலங்கையில் பல்லாண்டுகளாகத் தொடரும் போருள் சிக்கி அவதியுறும்
தமிழ்மக்கள் குறித்த விழிப்புணர்வையும் நிரந்தர விடிவையும் வேண்டி,
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்
கவிஞர்கள் எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9
மணியிலிருந்து மாலை 5 மணிவரை மெரினா கடற்கரை காந்தி சிலையருகில் கூடி ஒரு
கண்டனக் கவியரங்கம் நடத்தவிருப்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கக்
கூடும். இந்நிகழ்வு குறித்த கூடுதல் கவனத்திற்காக உங்கள் அனைவரது
ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். உங்கள் இணையத் தளங்களில்
இந்நிகழ்வைப் பற்றி ஒரு அறிவித்தலையோ பதிவினையோ இடுவதின் வழியாக அதனைச்
சாத்தியப்படுத்தலாம். வார்த்தைகளன்றி வேறேதுமற்ற நாம் செய்யக்கூடியது
அது ஒன்றுதான் அல்லவா?


நட்புடன்
தமி்ழ் கவிஞர்கள் கூட்டமைப்பு

குறிப்பாக...!
உங்கள் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி...

4 comments:

Thamiz Priyan said...

மக்களின் துன்பங்கள் தீர பிரார்த்திக்கின்றோம்.

தமிழ் said...

இறைவனிடம்
இறைஞ்சுவோம்
ஈழ மக்களின்
மனங்களில்
மகிழ்ச்சி மலர

சென்ஷி said...

தகவலுக்கு நன்றி நண்பா..

மக்களின் துன்பங்கள் தீர்வதற்கான பிரார்த்தனையில் நானும் பங்கேற்கின்றேன்.

Anonymous said...

நன்றி நண்பா..............