Tuesday, April 29, 2008

கொலுசுகளின் சில்மிஷம்...

*
நீ இல்லாத நாட்களில்
உன்னைப்பற்றி பேசுகின்றன
நீ இருக்கிற நாட்களில்
உனக்காக பேசுகின்றன
நாம் சேர்ந்திருக்கும் நாட்களில்
நம்மோடு பேசுகின்றன
என் கொலுசுகள்
எப்படி பிரிவேன்
நீ கொடுத்த கொலுசுகளை...

*
நாள் முழுவதும்
என்னோடு இருந்தாலும்
நீ வந்ததும் தான்
சத்தமிட தொடங்குகின்றன
என்கொலுசுகள் நான்
அது வரையும் சேர்த்து வைத்த
எல்லா மௌனங்களையும் சேர்த்து...

*
என் பாதங்களுக்கு என்னாயிற்று
ஒரு நிமிடம் இருப்பதில்லை
நீ கொடுத்த கொலுசுகளை பிரிந்து
கழுவுவதற்காக கழற்றினாலும்
குறு குறுத்துப்போகிறது
நீ என்னருகில் இல்லாத நாடகளில்...


*
எப்படித்தெரியும்
என்னுடைய கொலுசுகளின் சத்தம்
என்று கேட்டால்
உனக்கே உரிய சிரிப்போடு சொல்கிறாய்
"அவை சத்தமிடுவதும் பாடுவதும்
என் பெயர் சொல்லித்தானே"
போடா...
உனக்கும் தெரிந்துவிட்டதா
என்கொலுசுகளின் பாஷை...

24 comments:

மங்களூர் சிவா said...

கலக்கற மாப்பி!!

மங்களூர் சிவா said...

/
வேற்று கிரகத்தின் இளவரசன்... ஒரு பெண்மையிடம் தோற்றவன்... வாழ்வதற்காய் பூமிக்கு வந்தவன்...
/

நல்ல அறிமுகம்!!!!

தமிழன்-கறுப்பி... said...

///கலக்கற மாப்பி!!///

நானா போங்க தல என்ன ரொம்பத்தான் புகழ்றிங்க...

தமிழன்-கறுப்பி... said...

\\\\\/
வேற்று கிரகத்தின் இளவரசன்... ஒரு பெண்மையிடம் தோற்றவன்... வாழ்வதற்காய் பூமிக்கு வந்தவன்...
/

நல்ல அறிமுகம்!!!!/\\\\


நன்றி நன்றி சிவா...

{அது யாரோ தமிழன்னு ஒருத்தருப்பா :))

ரசிகன் said...

//நீ இல்லாத நாட்களில்
உன்னைப்பற்றி பேசுகின்றன
நீ இருக்கிற நாட்களில்
உனக்காக பேசுகின்றன
நாம் சேர்ந்திருக்கும் நாட்களில்
நம்மோடு பேசுகின்றன
என் கொலுசுகள்//

அடடா.. கலக்கல்தான் போங்க:))

ரசிகன் said...

//உனக்கே உரிய சிரிப்போடு சொல்கிறாய்
"அவை சத்தமிடுவதும் பாடுவதும்
என் பெயர் சொல்லித்தானே"
போடா...
உனக்கும் தெரிந்துவிட்டதா
என்கொலுசுகளின் பாஷை..//

அவ்வ்வ்வ்வ்....
ரசனையா எழுதியிருக்கிங்க மாமேய்.. வாழ்த்துக்கள். தொடருங்க:)

தமிழன்-கறுப்பி... said...

ரசிகன்...said...

\\\//நீ இல்லாத நாட்களில்
உன்னைப்பற்றி பேசுகின்றன
நீ இருக்கிற நாட்களில்
உனக்காக பேசுகின்றன
நாம் சேர்ந்திருக்கும் நாட்களில்
நம்மோடு பேசுகின்றன
என் கொலுசுகள்//

அடடா.. கலக்கல்தான் போங்க:))\\\

கொலுசுகள் எனக்கு ரொம்பப்பிடிக்கும் தல...

நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

ரசிகன்...said...

\\\//உனக்கே உரிய சிரிப்போடு சொல்கிறாய்
"அவை சத்தமிடுவதும் பாடுவதும்
என் பெயர் சொல்லித்தானே"
போடா...
உனக்கும் தெரிந்துவிட்டதா
என்கொலுசுகளின் பாஷை..//

அவ்வ்வ்வ்வ்....
ரசனையா எழுதியிருக்கிங்க மாமேய்.. வாழ்த்துக்கள். தொடருங்க:)\\\

நன்றி ரசிகன் உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...

தினேஷ் said...

நல்ல அறிமுகம்... கனமான கவிதைகள் அருமை...

தினேஷ்

தமிழன்-கறுப்பி... said...

///நல்ல அறிமுகம்... கனமான கவிதைகள் அருமை...

தினேஷ்///

நன்றி தினேஷ் தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...

புகழன் said...

அட நீங்களுமா தமிழன்
நல்லாவே எழுதுறீங்க
இன்னும் நிறைய எழுதுங்கள்

எவ்வளவு எழுதினாலும் தீராத இலக்கியம் கவிதை அதிலும் காதல் கவிதை

இறக்குவானை நிர்ஷன் said...

//நீ இல்லாத நாட்களில்
உன்னைப்பற்றி பேசுகின்றன
நீ இருக்கிற நாட்களில்
உனக்காக பேசுகின்றன
நாம் சேர்ந்திருக்கும் நாட்களில்
நம்மோடு பேசுகின்றன
என் கொலுசுகள்//

நன்றாயிருக்கிறது. உங்களுடைய அறிமுகத்தைப் பார்த்து அதிகமாகவே யோசித்தேன். எப்படி இவ்வாறானதொரு அறிமுகம் எழுதத் தோன்றியது?

தமிழன்-கறுப்பி... said...

///அட நீங்களுமா தமிழன்
நல்லாவே எழுதுறீங்க
இன்னும் நிறைய எழுதுங்கள்

எவ்வளவு எழுதினாலும் தீராத இலக்கியம் கவிதை அதிலும் காதல் கவிதை///


வாங்க புகழன் பரீட்சை எல்லாம் முடிந்ததா... எப்படி இருந்தது

நன்றி உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

///அட நீங்களுமா தமிழன்
நல்லாவே எழுதுறீங்க
இன்னும் நிறைய எழுதுங்கள்///

நானேதான்...
(எழுத மட்டும்தான் முடியுது...)

தமிழன்-கறுப்பி... said...

\\\\//நீ இல்லாத நாட்களில்
உன்னைப்பற்றி பேசுகின்றன
நீ இருக்கிற நாட்களில்
உனக்காக பேசுகின்றன
நாம் சேர்ந்திருக்கும் நாட்களில்
நம்மோடு பேசுகின்றன
என் கொலுசுகள்//

நன்றாயிருக்கிறது. உங்களுடைய அறிமுகத்தைப் பார்த்து அதிகமாகவே யோசித்தேன். எப்படி இவ்வாறானதொரு அறிமுகம் எழுதத் தோன்றியது?\\\

வாங்க நிர்ஷன்.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...


அவ்வளவு யோசிக்கிற மாதிரியா இருக்கிறது அந்த அறிமுகம்... அது பற்றி பேசினால் நிறையப்பேசலாம...ஒரு பதிவே எழுதலாம் அதனால பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்...

நிஜமா நல்லவன் said...

கொஞ்சம் மெதுவா இந்த பக்கம் வந்ததால நான் சொல்ல வேண்டியதை எல்லாம் எல்லோரும் சொல்லிட்டாங்கப்பா.

கலக்கல் தமிழரே.

நிஜமா நல்லவன் said...

//மங்களூர் சிவா said...
கலக்கற மாப்பி!!//



இது சென்ஷி போடுற கமெண்ட் ஆச்சே. காப்பி அடிச்சி போட்டுட்டியா சிவா?

Divya said...

அட அட......சூப்பரோ சூப்பர் கொஞ்சும் கொலுசு கவிதை!!

ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு கவிதை!!

\\நீ இல்லாத நாட்களில்
உன்னைப்பற்றி பேசுகின்றன
நீ இருக்கிற நாட்களில்
உனக்காக பேசுகின்றன
நாம் சேர்ந்திருக்கும் நாட்களில்
நம்மோடு பேசுகின்றன
என் கொலுசுகள்
எப்படி பிரிவேன்
நீ கொடுத்த கொலுசுகளை...\

ரொம்ப பிடித்திருக்கிறது இவ்வரிகள்!

பாராட்டுக்கள்!!

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன்...said..


///கொஞ்சம் மெதுவா இந்த பக்கம் வந்ததால நான் சொல்ல வேண்டியதை எல்லாம் எல்லோரும் சொல்லிட்டாங்கப்பா.

கலக்கல் தமிழரே.///

வாங்க நல்லவரே... சந்தோசம்:)
நீங்க நம்ம கூட இருந்தா ஒரு நல்லவர் நம்மளோட இருக்கிற கெத்து நம்மளுக்கு...:)

நன்றி நிஜமா நல்லவன்

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன்...said...

\\\\//மங்களூர் சிவா said...
கலக்கற மாப்பி!!//

இது சென்ஷி போடுற கமெண்ட் ஆச்சே. காப்பி அடிச்சி போட்டுட்டியா சிவா?\\\\

சென்ஷி நம்ம பக்கம இதுவரைக்கும் வரலையில்லை அதான் சிவாண்ண அப்படி கமென்ட் போட்டிருக்காரு...

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா...Said...

/////அட அட......சூப்பரோ சூப்பர் கொஞ்சும் கொலுசு கவிதை!!

ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு கவிதை!!

\\நீ இல்லாத நாட்களில்
உன்னைப்பற்றி பேசுகின்றன
நீ இருக்கிற நாட்களில்
உனக்காக பேசுகின்றன
நாம் சேர்ந்திருக்கும் நாட்களில்
நம்மோடு பேசுகின்றன
என் கொலுசுகள்
எப்படி பிரிவேன்
நீ கொடுத்த கொலுசுகளை...\

ரொம்ப பிடித்திருக்கிறது இவ்வரிகள்!

பாராட்டுக்கள்!!////

குளிர்ந்திடுச்சு மாஸ்டர் நீங்க வந்து பாராட்டினதுல...

கொலுசுகள் எனக்கு நிறையப்பிடிக்கும் அதனால கொலுசுகள் பற்றி இன்னும் புலம்புவேன்...

நன்றி திவ்யா உங்கள் வருகைக்கும் தருகைக்கும்...

ஜொள்ளுப்பாண்டி said...

அட அட அட என்னா இது... கொலுச வச்சு காதல் கும்மியடிச்சு இருக்கீயளே தமிழ்... படிக்கிறப்போ மனசெல்லாம் ஜல் ஜல் ஜல்....

;)))))))

தமிழன்-கறுப்பி... said...

ஜொள்ளுப்பாண்டி சொன்னது....

///அட அட அட என்னா இது... கொலுச வச்சு காதல் கும்மியடிச்சு இருக்கீயளே தமிழ்... படிக்கிறப்போ மனசெல்லாம் ஜல் ஜல் ஜல்....

;)))))))///


நன்றி பாண்டியண்ணே உங்க வருகைக்கும் ரசனையான கருத்துக்கும்...:)

Naveen Kumar said...

கலக்கலுக்கிறீங்க நண்பா,
சான்ஸே இல்ல....அருமை, அருமை:))