Tuesday, April 8, 2008

அனுப்பியிருந்தவை...


*
நீ சொல்ல மாட்டாய் என்று
எனக்கு தெரியும் தமிழ்
நீ காலை வணக்கம் சொல்லும்பொழுதே
உன்னை கட்டிக்கொண்டு
அழ வேண்டும் போலதான் இருந்தது
முழுக வேண்டும் என்று வேறு சொன்னாயா
கோபம் வேறு மாதிரி ஆகியிருந்தது.... ஆனால்
உன்னோடு உடனே கதைக்க வேண்டும்
என்று நினைத்தவற்றை கதைத்து முடித்தேன்
என் நம்பிக்கைகளை
நீயே இல்லாமல் செய்கிறாய்
சில நேரங்களில் அதனால்தான்
வார்த்தைகள் தடம்மாறி வெளிவந்தன...


*
என்னடா...
நானும் உன்னைதத்தான் அழைத்துக்கொண்டிருந்தேன்
என்ன செய்கிறாய் கடிதம் எழுது
வேறென்ன விஷேசம்
ராஜபார்வை என்றொருபடம் அதில்
மழையோடு தொடங்கும் ஒரு பாடல்...







*
என்னடா...
வீட்டுக்கு போகிறாயா
கடிதம் அனுப்படா குட்டி
மாமனுக்கு உன்னை
பார்க்க வேண்டும்
போல இருக்கடா...


*
அது சரி...
கொல்கிறாயே "கிழவி"
கொஞ்சம் பொறு வந்து விடுகிறேன்
காலம் முழுதும் உன்
கைகளுக்குள் வாழ்வதற்கு
கறுப்பி...
உன்னால் முடியும் தம்பி படம்
இதழில் கதையெழுதும் நேரம் பாடல்
கேட்டுப்பார்...


*
என்னடா...
வேலையா இல்லையென்றால்
நன்றாக நித்திரை கொண்டு எழும்பி
பிள்ளையார் சுழி போடுங்கோ
என...




*
ம்ம்ம்...
கன நேரம் வேலை செய்யாதே அதிலென்ன
எதுவுமே தெரியாமல் எனக்கு
இரசாயனவியல் பாடம் எழுதித்தந்து அதில்
என்னை அழவும் வைத்த
என் செல்லத்துக்கு உதவி செய்யாமல் இருப்பேனா
குறைத்திருக்கிறேன் கவலைப்படாதே...
நிறுத்தி விடுவேன்...


*
என்னம்மா...
மனதை லேசாக விடு...
காற்றாடி வேலை செய்யவில்லையா
ஜன்னலையும் மனதையும் திறந்துவைத்துக்கொள்..
தனியே இருக்கும் தருணங்கள்
சுமைகள்தான் பார்த்தாயா
அமைதியான இடத்தில் இருந்து
விருப்பமான எதையாவது செய்து கொள்...
என்ன புத்தகம் வைத்திருக்கிறாய்...


*
என்ன...
எப்படி இருக்கிறாய் அன்பே...
வேலைக்குப் போக தயாராகி விட்டாயா- நான்
உனக்கு கடிதம் அனுப்ப வேண்டும்
அதற்கொரு முகவரி கொடு
நீ எப்பொழுது அனுப்புகிறாய்...


*
ஹாஹா...
நான் முட்டாள்கள்
தினத்தைப்பற்றி யோசிக்கவேயில்லை....
முட்டாள்கள் மட்டுமே
தங்கள் நாளைப்பற்றி யோசிக்கிறார்கள் ஆகவே
நீ அவதானமாக இருக்க வேண்டும்...
அத்துடன் முன்கூட்டிய வாழ்த்துக்கள்
உன்னுடைய நாளுக்காக..
(நன்றி அன்பே ஞாபகப்படுத்தியதற்கு...)


*
என்னடா...
சாப்பிட்டு விட்டாயா
அவசரமாய் ஒரு
முத்தம் தந்து உதவ முடியுமா
இங்கே ஒரு ஜீவன்
சாகும் தருவாயில் இருக்கிறது...


4 comments:

நிஜமா நல்லவன் said...

நல்லா அனுப்பி இருக்கப்பா:)

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் சொன்னது...

///நல்லா அனுப்பி இருக்கப்பா:)///



ஹே..! அது நானில்லப்பா:)

நிஜமா நல்லவன் said...

///தமிழன்... said...
ஹே..! அது நானில்லப்பா:)///



அப்ப மண்டபமா?

தமிழன்-கறுப்பி... said...

///தமிழன்... said...
ஹே..! அது நானில்லப்பா:)///

அப்ப மண்டபமா?///

? )))))))