Friday, January 21, 2011

நிகழ் குறிப்பு.

காலப்பெரு நதியில்...
நம் இருத்தலுக்கான புள்ளி நகர்ந்துகொண்டேயிருக்கிறது
கை மீறுகிற எல்லாம்
நாம் எழுதாமல்விட்ட புரட்சியாய் இருக்கலாம்
உனக்குப்புரியாத மொழிகளில் எழுதுவதில்
எனக்கு நம்பிக்கை இருப்பதில்லை...

உன் பாதுகாப்பான பெரு நகரங்களுக்கு
என்னை அழைத்துப்போ அவை
எங்காவது பனி விழுகிற நிலப்பரப்புகளில் இருக்கட்டும்.

உண்மையைச் சொல்லப்போனால்...


எல்லா தத்துவங்களையும்
பேசவும் வாசிக்கவும் தெரிகிறது
ஒருபிடி உதவியை...
விடிய விடிய யோசிக்கவேண்டியிருக்கிறது.

__________________________________________________

குறிப்பு: கடல் கடந்த இலக்கியம் என்பதும் இந்த சொற்கூட்டத்துக்கு வைக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்று.

1 comment: