
மிகுசலிப்பும்,
சொற்ப எதிர்பார்ப்புகளும்,
என கழிகிற நாட்கள் பழகிவிட்டது!
நடுஇரவின் தூக்கமின்மைகளையும்
குற்றவுணர்வுகளின் தடுமாற்றங்களையும்,
மற்றவைகளையும் தவிர்க்கத்தெரியவில்லை,
பொறுப்புகளும் நகர்கிற வயதும்
முரண்களில் இருப்பதை
நீங்கள் உணராமலிருப்தையும்,
என்மீதான அவர்கள் நம்பிக்கைளையும்,
தெறித்துக்கொண்டிருக்கிற என்
குறிமீதான சாபங்களையும் ஏற்றுக்கொள்கிறேன்
இல்லாத புனிதங்களின் துணையோடு,
அது வரையும் நீ என்னை சந்திக்காமலிரு!