Thursday, April 16, 2009

சாபம்...!








வேறெதுவும் சொல்ல முடியாத வேளைகளில் புரிகிறது
வாழ்வு மீதான பிடிப்பென்பதும் இருத்தலென்பதும்

நானென்பது
எனக்கு இலக்கியமும் தெரியாது,
தத்துவமும் தெரியாது,

வாழ்தல் என்பதென் தப்பித்தல்களும்
இருத்தல் என்பதென் பிரயத்தனங்களும்
என் மறைவுக்கு பின்னர் எழுதப்படும்
எதுவுமில்லாத பின்குறிப்புகளும்.

நீங்கள்...
விதிக்கப்படாது தொடர்கிற சாபமென
தேடிப்படித்தெழுதுவீர்கள்
திரிக்கப்பட்ட வரலாறுகளையும்,
இன்ன பிறவைகளையும்.

இப்பொழுது எழுதிக்கொள்ளுங்கள்
ஆதிக்குடிகளின் அழிவும்
அரிதார(அதிகார) புருஷர்களின் வலியுறுத்தல்களும்
காணாமல் போன கடவுளர்களும் என்பதாக!



பின்குறிப்பு:

\\
நானொரு போலி,பின்குறிப்புகள் தேவைப்படுகிற நீங்களும்.

\\
மிகத்தாமதமானதொரு பிரதிபலிப்பும் சொல்ல விரும்பாத குறிப்புகளும்.

\\
காலம் நல்ல மாற்றங்களை கொண்டு வரும்போல் தெரிகிறது,இரண்டு தலைமுறைகளின் வாழ்நாட்கள் இப்படித்தான் தீர்ந்து போயிருக்கிறது.


*படங்கள் தமிழ்வின் இணையத்தளம்

3 comments:

Poornima Saravana kumar said...

வேறெதுவும் சொல்ல முடியாத வேளைகளில் புரிகிறது
வாழ்வு மீதான பிடிப்பென்பதும் இருத்தலென்பதும்
//

நிதர்சனமான உண்மை!

யாத்ரா said...

மனம் கனக்கிறது.

Tech Shankar said...

தமிழனாகப் பிறப்பது நாம் அடைந்த சாபம்தான்.

எங்கே சென்றாலும் உதைக்கிறாங்க.

நமக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்.