Tuesday, February 17, 2009

அடையாளமில்லாத இரவுகள்...





தேசம்,
காதல்,
தேகம்
காமம்,
கட்டுடைப்பு,
குடும்பம்,
பாசம்,
பணம்,
பாவம்,
புண்ணியம்,
சமுதாயம்...!
சுழல்கிற கனவுகளில் இப்பொழுதெல்லாம்;
இரவுகளை அடையாளம் காண்பது கடினமாயிருக்கிறது,
பெருந்துயர் நிரம்பியதொரு நாவலுக்கான
அடிப்படையாயிருக்கிற குழப்பங்களில்
திணறிக்கொண்டிருக்கிறது மூளை...

சிதறுவதற்கு முன் எழுதிவிடலாம்
சில கவிதைகளையேனும்!

13 comments:

Divyapriya said...

அழகான கவிதை...கடைசி இரண்டு வரிகள் அருமை....

பாச மலர் / Paasa Malar said...

குழப்பங்கள் பற்றிய வர்ணனை நன்று..

தமிழன்-கறுப்பி... said...

Divyapriya said...
\\
அழகான கவிதை...கடைசி இரண்டு வரிகள் அருமை....
\\
நன்றி திவ்யப்ரியா இதை இன்னும் வீரியத்தோடு சொல்லலாம் போல இருக்கிறது இப்பொழுது...
ஆனால் இப்படி பிறகு எழுதலாம் பிறகு எழுதலாம் என்று விட்டுப்போனவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதில் சொற்களை சேகரித்துவிடலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறேன்...

தமிழன்-கறுப்பி... said...

பாச மலர் said...
\\
குழப்பங்கள் பற்றிய வர்ணனை நன்று..
\\
நன்றி...

Anonymous said...

கடைசி இரு வரிகள் கவிதையின் வீர்யத்தை உள்ளடக்கியவை.

Anonymous said...

முடிவு ஸூப்பரு

Anonymous said...

அடையாளமில்லாத இரவுகளை நல்லாவே அடையாளாபடுத்தியிருக்கீங்க...

ஹேமா said...

தமிழன் இரவுகள் இப்போவெல்லாம் விடியாமல் நீண்டு இன்னும் இருளாய்.மனம் கனக்கக் குழம்பியிருக்கிறீங்க.குழம்பினாலும் தெளிந்தாலும் நாங்களேதான்.வழியில்லை தமிழன்.

நசரேயன் said...

நல்லா இருக்கு

தமிழ் மதுரம் said...

சிதறுவதற்கு முன் எழுதிவிடலாம்
சில கவிதைகளையேனும்!//

அருமையான சொல்லாடல்.... இனியும் சிதற என்ன இருக்கு???

அமிர்தவர்ஷினி அம்மா said...

சுழல்கிற கனவுகளில் இப்பொழுதெல்லாம்;
இரவுகளை அடையாளம் காண்பது கடினமாயிருக்கிறது,

அருமை.

தமிழன்-கறுப்பி... said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே...

MSK / Saravana said...

//சுழல்கிற கனவுகளில் இப்பொழுதெல்லாம்;
இரவுகளை அடையாளம் காண்பது கடினமாயிருக்கிறது,
பெருந்துயர் நிரம்பியதொரு நாவலுக்கான
அடிப்படையாயிருக்கிற குழப்பங்களில்
திணறிக்கொண்டிருக்கிறது மூளை...//

அட்டகாசம்ன்னா..
எனக்கும் கொஞ்ச காலம் முன் இப்படிதான் இருந்தது..