Sunday, February 22, 2009

நிகழ் குறிப்புகள்...

\\
என்னுடைய சோகக்கவிதைகள்
வரவேற்கப்படுகின்றன...
காதலில் சோகமும் சுகம்தான் இல்லலையா?
எனக்கிருக்கிற காதல் தோல்வியை
ஒப்புக்கொள்ள முடிந்த எனக்கு
அக்காவுக்கு இருக்கிற காதல் தோல்வியை
சொல்ல முடிவதில்லை!
தவறுகள்;
ஆண்களிலும் இருக்கலாம் அல்லது
உங்களிலும் இருக்கலாம்,
இன்னும் சிலதைப்பேசலாம்!

புரிதல்களும் கட்டுடைப்புகளும்
எழுதிவைக்கப்படடிருக்கிறது...
அக்காவின் வாழ்க்கை அப்படியே இருக்கிறது!



\\
யுத்தநிறுத்தம்,
கண்டனப்பேரணி,
அடையாள உண்ணாவிரதம்,
அறிக்கைகள்,
அங்கங்கே தீக்குளிப்புகள்,
சில கவிதைகள்,
பல உரையாடல்கள்,
தீர்வுகளேயற்ற ஆய்வுகள்,
தலைவர்கள் வலியுறுத்தல்,
இன்னும்
சில தற்கொலைத்தாக்குதல்கள்
என பலதும் நிகழலாம்
கடைசித்தமிழன் உயிரோடிருக்கும் வரை!

________________________________________________________________

தல தமிழ் பிரியன் விடுமுறைக்கு ஊருக்கு போய்வந்து திரும்ப வலையுலகோடு இணைந்திருப்பதும் முதல் மொக்கையை வெற்றிகரமாக வலையேற்றியிருப்பதும் உங்களுக்கு தெரிந்தவிசயம். வந்ததும் வராததுமாய் கடமை உணர்ச்சியோடு ஜோதியில் ஐக்கியமாகிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள்! தவிர எனக்கு பல நாட்களாக பிரச்சனை கொடுத்துக்கொண்டிருந்த தளத்தின் வடிவத்தை மாற்றி இப்போதிருக்கிற மீயுருவை(அப்படின்னா டெம்பளேட்தானே)செய்து கொடுத்தமைக்கு நன்றிகளும்.

நேற்றைக்கு முன்தினத்திலிருந்து தளத்தின் தொழில்நுட்ப வேலைகளை அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

தொழில் நுட்ப உதவி தேவைப்படுபவர்கள் என்னை மின்னஞ்சல் மூலமாக அணுகவும் தரகு கூலியை தவிர மற்றய எல்லாம் இலவசமாக தொழில்நுட்ப வல்லுனர் தமிழ் பிரியனால் செய்து கொடுக்கப்படும்.

6 comments:

Thamiz Priyan said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புதியவன் said...

//மீயுருவை(அப்படின்னா டெம்பளேட்தானே)//

இது புதுசா இருக்குதே...

Divyapriya said...

முதல் கவிதை அருமை...

ஹேமா said...

தமிழன்,அக்காவைப் பற்றி,அதுவும் என்னவோ கவலையாகச் சொல்ல வந்து...

Unknown said...

hahahaha:)))

MSK / Saravana said...

இரண்டு கவிதைகளும் இரண்டு பரிணாமம்.. நிகழ்வின் யதார்த்தம் கசக்கிறது..