Monday, September 8, 2008

நானும்,நினைவுகளும்...!

சரி செய்யாமல் இருக்கிற படுக்கை
காய்ந்து போன மீதங்களோடு
தேநீர் கோப்பைகள்
கலைந்து கிடக்கிற அறையில்
நின்று போன சுவர்க்கடிகாரம்,
கழுவாமல் இருக்கிற ஆடைகளின் குவியல்
குழம்பிக்கிடக்கிற மேசையில் புத்தகங்கள்
நிரம்பிக்கிடக்கிற சாம்பல் தட்டில்
அணைந்து கிடக்கிற சிகரெட்டுகள்
தூசு படிந்திருக்கிற கம்பியுட்டரைச்சுற்றி
சிதறிக்கிடக்கிற 'சிடி'கள்...

பலதும்...
உன் வருகைகளற்ற
நாட்களைப்பற்றி பேசுகின்றன

அறை சரி செய்யப்படலாம்
நிகழ்வுகள் மாறக்கூடும்...
நானும்,நினைவுகளும்?!

16 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டூ :))

ஆயில்யன் said...

//பலதும்...
உன் வருகைகளற்ற
நாட்களைப்பற்றி பேசுகின்றன//

:(((

வர மாட்டாங்களா??????

குடுகுடுப்பை said...

என்னமோ சொல்றீங்க,வேற நினைவுகளை உருவாக்குங்க

MSK / Saravana said...

//அறை சரி செய்யப்படலாம்
நிகழ்வுகள் மாறக்கூடும்...
நானும்,நினைவுகளும்?!//

நினைவுகளை கொன்று விட்டால் தப்பிக்கலாம்..

கிரி said...

//சரி செய்யாமல் இருக்கிற படுக்கை
காய்ந்து போன மீதங்களோடு
தேநீர் கோப்பைகள்
கலைந்து கிடக்கிற அறையில்
நின்று போன சுவர்க்கடிகாரம்,
கழுவாமல் இருக்கிற ஆடைகளின் குவியல்
குழம்பிக்கிடக்கிற மேசையில் புத்தகங்கள்
நிரம்பிக்கிடக்கிற சாம்பல் தட்டில்
அணைந்து கிடக்கிற சிகரெட்டுகள்
தூசு படிந்திருக்கிற கம்பியுட்டரைச்சுற்றி
சிதறிக்கிடக்கிற 'சிடி'கள்...//

கலக்கல்..சூப்பரா எழுதி இருக்கீங்க

Kumiththa said...

Very nice poem thamilan:)

ச.பிரேம்குமார் said...

//பலதும்...
உன் வருகைகளற்ற
நாட்களைப்பற்றி பேசுகின்றன

அறை சரி செய்யப்படலாம்
நிகழ்வுகள் மாறக்கூடும்...
நானும்,நினைவுகளும்?!
//

அருமை

Unknown said...

நல்லாருக்கு அண்ணா..!! :)

Thamiz Priyan said...

நீங்களும் நினைவுகளும் எப்போதும் உடன் தானே வரும்... ;) அதோடு அந்த உங்களவளும் வர வாழ்த்து(க்)கள்!

Kavinaya said...

நல்ல கவிதை... :)

//வேற நினைவுகளை உருவாக்குங்க//

அதேதான் சொல்ல வந்தேன்...

Anonymous said...

வரிகள் ஒவ்வொன்றும் காட்சியாய் கண்முன் விரிகிறது,
அழகான எழுத்துக்கள் தமிழன்:-)

Anonymous said...

\\பலதும்...
உன் வருகைகளற்ற
நாட்களைப்பற்றி பேசுகின்றன

அறை சரி செய்யப்படலாம்
நிகழ்வுகள் மாறக்கூடும்...
நானும்,நினைவுகளும்?!\\

நிகழ்வுகளுடன் நினைவுகளும் மாறினால் நல்லது, மாறுமா??

priyamudanprabu said...

அறை சரி செய்யப்படலாம்
நிகழ்வுகள் மாறக்கூடும்...
நானும்,நினைவுகளும்?!/
///////////

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்க்கும்
மாறவே மாறாது

Kumiththa said...

You are tagged!

காரூரன் said...

please contact me karurang@yahoo.ca as you requested

எவனோ ஒருவன் said...

கவிதை மிக அழகு