Friday, December 24, 2010

தம்பி நீ சின்னப்பிள்ளை இல்லை, உனக்கு வயது காணும்.

24.12.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரமேஸ்...

நேற்று காலமை வரைக்கும் நினைவிலிருந்த இந்த நாள், இன்றைக்கு காலமை வரும்போது மறந்து போட்டுது. காலமை call எடுத்து எனக்கு இண்டைக்கு பிறந்தநாள் என்று சொல்லி 'என்னடா செய்யுற இவ்வளவு நேரமும்' என்கிற தோரணையில் சண்டைபோடுகிற அவளிடம் என்ன சொல்ல. அந்த நேரத்தில் எனக்கு சொல்லக்கிடைத்தது அல்லது நிகழ்ந்தது
i love you mama என்பதுதான்...சரி (இந்த சரி என்கிற விதம் கூட ஒரு தனியாய் இருக்கும்) என்று சிரித்துக்கொண்டு பக்கத்தில் நின்ற அக்காவிடம் i love you வாம் சொல்வதை கேட்டு நானும் சிரித்துக்கொண்டேன்.

அம்மா உன் கடவுள்கள் உனக்குத்தராததை உன் மகன் தரும்படிக்கு அவன் காலம் கூட இருக்கட்டும். உன் கடவுள்களிடம் பிரார்த்தனை செய்து கொள் நான் ஊருக்கு வரும் நாள் கெதியில் வந்து சேரட்டும் என்பதாக. I misssss you mamma.



என்னுடைய,

எல்லா இரகசியங்களையும் அறிந்திருக்கிறய்

பலவீனங்களும் தெரிந்திருக்கிறது உனக்கு

அதிகமான என் தவறுகளையும் கண்டுகொள்கிறாய்

பெரும்பாலும் அசௌகரியங்களையே நான் தந்திருக்கக்கூடும்...

இருந்தும் மிகச்சிலவான என் சரிகள்

போதுமானவையாய் இருக்கிறது உனக்கு.




பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா - என்னணை செய்யுற _________ _______ ஒருவிதமான செல்லம் கொஞ்சுகிற எழுத முடியாத அந்த பரவச மொழியை இங்கே இடைவெளிகளாய் விட்டிருக்கிறேன்.(காதலில் அது புச்சுக்குட்டி என்தைப்போல ஆரம்பிக்கலாம்)அதை எனக்கிங்கே எழுதத்தெரியவில்லை. I love you mamma.

___________________________________________________

#
சரிந்த எழுத்துக்களில் இருக்கிற இந்த வரிகளை நான் எழுதக்கூடிய இன்னொரு உறவும் எனக்கிருந்தது.அந்த உறவின் நினைவுகள் இந்தக்கணங்களில் வருவதை தவிர்க்க முடியாதலில் எழுதிய குறிப்பு இது.

#
எல்லா உறவுகளும் வெறுத்துப்போகிறது. அப்படி நிபந்தனைகளற்ற எந்த அன்பும் இருக்க முடியாது என்று பெரிய படம் காட்டிக்கொண்டு திரிந்தாலும் பல உறவுகளை மறக்கவோ இழக்கவோ முடிவதில்லை பெரும்பாலும் குற்றவுணர்வே என்னை தின்று செரிக்கும்படியாக இருக்கிறது. என்னுடைய ஒரிஜினல் இதுவாகத்தான் இருக்கக்கூடும்.

#
தலைப்பு கடைசியாக அம்மா எனக்கெழுதிய கடிதத்தின் வரிகள்.இப்பொழுதும் அடிக்கடி சொல்கிற விசயம்தான்.

2 comments:

ஆயில்யன் said...

//பல உறவுகளை மறக்கவோ இழக்கவோ முடிவதில்லை//

எனக்கு உம்மிடத்தில் இருப்பது போல ! :)

திரும்பவும் இந்த வரிகளை திரும்ப சொல்லிக்கொள்கிறேன்

தம்பி நீ சின்னப்பிள்ளை இல்லை :))

தமிழன்-கறுப்பி... said...

நன்றி பாண்டி அண்ணே...