Monday, June 2, 2008

காதல் கோலங்கள்...

*
கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே

வந்துவிடுகின்றன எறும்புகள் என்று

சலித்துக்கொள்கிறாய் நீ

அவற்றுக்குத்தானே தெரியும்

அவை வெறும் கோல மாவு அல்ல

ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது...


*
நீ போட்டு முடித்த கோலத்தில்

கோலம் போட்டிருந்தன உன்

நெற்றியோரத்திலிருந்து விழுந்த

வியர்வைப்பொட்டுகள்...


*
மார்கழியின் அதிகாலைகளில்

நீ போடுகிற கோலத்தையும்

கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு

யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்

ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது

சூரியன்...

53 comments:

Divya said...

\\மார்கழியின் அதிகாலைகளில்

நீ போடுகிற கோலத்தையும்

கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு

யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்

ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது

சூரியன்...\\



அருமை அருமை:)))

ரசிகன் said...

//கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே

வந்துவிடுகின்றன எறும்புகள் என்று

சலித்துக்கொள்கிறாய் நீ

அவற்றுக்குத்தானே தெரியும்

அவை வெறும் கோல மாவு அல்ல

ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது...
//

அவ்வ்வ்வ்..... கலக்கல்:))

ரசிகன் said...

//நீ போட்டு முடித்த கோலத்தில்

கோலம் போட்டிருந்தன உன்

நெற்றியோரத்திலிருந்து விழுந்த

வியர்வைப்பொட்டுகள்...//

கவிதை.. கவிதை.,.:)

ரசிகன் said...

//மார்கழியின் அதிகாலைகளில்

நீ போடுகிற கோலத்தையும்

கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு

யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்

ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது

சூரியன்...//

இதை ரொம்பவே ரசித்தேன். அருமை:)

Ramya Ramani said...

\\நீ போட்டு முடித்த கோலத்தில்

கோலம் போட்டிருந்தன உன்

நெற்றியோரத்திலிருந்து விழுந்த

வியர்வைப்பொட்டுகள்...\\

Wow :)

ஜி said...

Irandavathu kavithai Arumai :))

Saranya S said...

Good one! The second stanza is especially nice. Nalla kavidhai.

Sanjai Gandhi said...

//கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே

வந்துவிடுகின்றன எறும்புகள் என்று

சலித்துக்கொள்கிறாய் நீ

அவற்றுக்குத்தானே தெரியும்

அவை வெறும் கோல மாவு அல்ல

ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது...//

ச்ச... இபோ எல்லாம் யார் யாருக்கு போட்டியா வரதுனே வெவஸ்தை இல்லாம போச்சிப்பா. :P


*
//நீ போட்டு முடித்த கோலத்தில்

கோலம் போட்டிருந்தன உன்

நெற்றியோரத்திலிருந்து விழுந்த

வியர்வைப்பொட்டுகள்...//

சூப்பரு... எப்டி தான் இப்டி எல்லாம் யோசிக்கிறிங்களோ? :)


*
மார்கழியின் அதிகாலைகளில்

நீ போடுகிற கோலத்தையும்

கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு

யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்

ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது

சூரியன்//

சோ.. சார் தினமும் அலாரம் வச்சி எழறிங்கனு சொல்லுங்க :P

.... கவிதை நல்லா இருக்கு நண்பரே....

Thamiz Priyan said...

டெஸ்ட் கமெண்ட்.. 1

Thamiz Priyan said...

டெஸ்ட் கமெண்ட் 2

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் கொஞ்சம் பொறுங்க ...

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா சொன்னது...

///\மார்கழியின் அதிகாலைகளில்
நீ போடுகிற கோலத்தையும்
கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு
யார் முதலில் வருவதென்பதில் - என்னிடம்
ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது
சூரியன்...\\

அருமை அருமை:)))///

வாங்க மேடம்...
நன்றி உங்கள் கருத்துக்கு...

ஆமா...நிஜமா நல்லாருக்கா:)?

தமிழன்-கறுப்பி... said...

\\\//கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே

வந்துவிடுகின்றன எறும்புகள் என்று

சலித்துக்கொள்கிறாய் நீ

அவற்றுக்குத்தானே தெரியும்

அவை வெறும் கோல மாவு அல்ல

ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது...
//
அவ்வ்வ்வ்..... கலக்கல்:))\\\

வாங்க மாம்ஸ் ஆளைப்பாக்க முடியல நல்லாருக்கிங்களா...

என்ன ரொம்ப கடிக்கறேனோ:)

தமிழன்-கறுப்பி... said...

ரசிகன்...said...

\\\//நீ போட்டு முடித்த கோலத்தில்

கோலம் போட்டிருந்தன உன்

நெற்றியோரத்திலிருந்து விழுந்த

வியர்வைப்பொட்டுகள்...//

கவிதை.. கவிதை.,.:)\\\

நன்றி.. நன்றி.:)

கொஞ்சம் ஓவரா புலம்புறனோ...

தமிழன்-கறுப்பி... said...

ரசிகன் சொன்னது...

//மார்கழியின் அதிகாலைகளில்
நீ போடுகிற கோலத்தையும்
கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு
யார் முதலில் வருவதென்பதில் - என்னிடம்
ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது
சூரியன்...//

இதை ரொம்பவே ரசித்தேன். அருமை
///

நல்லாருந்திச்சா மாம்ஸ் நன்றி நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

ramya ramani...said...

\நீ போட்டு முடித்த கோலத்தில்

கோலம் போட்டிருந்தன உன்

நெற்றியோரத்திலிருந்து விழுந்த

வியர்வைப்பொட்டுகள்...\\

Wow :)///

நன்றிங்க..:)

தமிழன்-கறுப்பி... said...

ஜி சொன்னது...

///Irandavathu kavithai Arumai :))/

நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

saranya said...

///Good one! The second stanza is especially nice. Nalla kavidhai.///

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

அடிக்கடி வாங்க...

தமிழன்-கறுப்பி... said...

sanjai...said
//கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே.........//

ச்ச... இபோ எல்லாம் யார் யாருக்கு போட்டியா வரதுனே வெவஸ்தை இல்லாம போச்சிப்பா. :P
////

என்ன செய்ய சஞ்ஜய்,
அவள் என்ன செய்தாலும் அது அழகாகத்தானே இருக்கிறது...

தமிழன்-கறுப்பி... said...

sanjai said...

//நீ போட்டு முடித்த கோலத்தில்

கோலம் போட்டிருந்தன உன்

நெற்றியோரத்திலிருந்து விழுந்த

வியர்வைப்பொட்டுகள்...//

சூப்பரு... எப்டி தான் இப்டி எல்லாம் யோசிக்கிறிங்களோ? :)///

இதுல யோசிக்கிறதுக்க என்னங்க இருக்க அவ என்ன செய்யுறாளோ அதை அப்படியே உங்களுக்க பிடிச்மாதிரி எழுதிட்டா வந்திடுச்சு கவிதை...))


///சோ.. சார் தினமும் அலாரம் வச்சி எழறிங்கனு சொல்லுங்க :P

.... கவிதை நல்லா இருக்கு நண்பரே....///

அலாரம் எல்லாம வேண்டாம் தல அதெல்லாம் அதுவா நடக்கும....

நன்றி சஞ்ஜய் உங்னள் வருகைக்கும் உற்சாகமான கருத்துக்களுக்கும்....

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பரியன் சொன்னது...

//டெஸ்ட் கமெண்ட்.. 1
டெஸ்ட் கமெண்ட் 2//

நன்றி தமிழ் பரியன்....

உங்கள் உதவிக்கு...

Shwetha Robert said...

Very cute poem:-)

Divya said...

\\அருமை அருமை:)))///

வாங்க மேடம்...
நன்றி உங்கள் கருத்துக்கு...

ஆமா...நிஜமா நல்லாருக்கா:)?\\


உங்க மேல சத்தியமா கவிதை ரொம்ப நல்லாயிருக்கு ,தமிழன்:))))

தமிழன்-கறுப்பி... said...

ஷ்வேதா...சொன்னது..

///Very cute poem:-)///

நன்றி நன்றி..:)

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா சொன்னது...

///\அருமை அருமை:)))///

வாங்க மேடம்...
நன்றி உங்கள் கருத்துக்கு...

ஆமா...நிஜமா நல்லாருக்கா:)?\\

உங்க மேல சத்தியமா கவிதை ரொம்ப நல்லாயிருக்கு ,தமிழன்:))))
///

ஹையோ இப்படி அநியாயமா எம்மேல பொய் சத்தியம் பண்ணிட்டிங்களே...:))

நன்றி திவ்யா உங்கள் ரசனைக்கு...

Kumiththa said...

Very nice kavithai...eppi ippidi ellam yosikkiringa..Superb!

Anonymous said...

மார்கழி அதிகாலையில படுத்து தூங்காம..உங்களுக்கு எதுக்கு இந்த கோலம் பார்க்கிற வேலை ;)

அழகான எண்ணங்கள்..

தமிழன்-கறுப்பி... said...

தூயா சொன்னது...

///மார்கழி அதிகாலையில படுத்து தூங்காம..உங்களுக்கு எதுக்கு இந்த கோலம் பார்க்கிற வேலை ;)

அழகான எண்ணங்கள்..///

காதல் அழகான விடயம் தானே தூயா...:)

நன்றி தூயா வருகைக்கும் கருத்துக்களுக்கும்...

நவீன் ப்ரகாஷ் said...

மார்கழியின் அதிகாலைகளில்

நீ போடுகிற கோலத்தையும்

//கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு

யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்

ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது

சூரியன்...//

மிக அழகு தமிழன்...
கவிதைக் கோலங்கள் தொடரட்டும்...:)))

புகழன் said...

//
நீ போட்டு முடித்த கோலத்தில்

கோலம் போட்டிருந்தன உன்

நெற்றியோரத்திலிருந்து விழுந்த

வியர்வைப்பொட்டுகள்...

//

அழகான வரிகள்
மிகவும் பிடித்திருந்தது.
கவிதைகள் அனைத்தும் அருமை
தொடர்ந்து எழுதுங்கள்.

மங்களூர் சிவா said...

\\மார்கழியின் அதிகாலைகளில்

நீ போடுகிற கோலத்தையும்

கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு

யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்

ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது

சூரியன்...
\\

ஏன் அப்பு நாமதான்(!?!?) ராத்திரியே வந்து உக்காந்திருக்கோமே!!!

அப்புறம் எப்பிடி????

:))))))))))))

மங்களூர் சிவா said...

/
Thooya said...
மார்கழி அதிகாலையில படுத்து தூங்காம..உங்களுக்கு எதுக்கு இந்த கோலம் பார்க்கிற வேலை ;)
/

ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்



நாம பாக்கலைனா வேற எவனாவது பாக்க வந்துடுவானே :((

ஸோ நமளே போயிடுவோம் கோலம் பாக்கிறதுக்கு :))))

கோகுலன் said...

வாவ்.. நல்ல கவிதை..

மூன்றுமே நல்லாயிருக்கு..

//நீ போட்டு முடித்த கோலத்தில்

கோலம் போட்டிருந்தன உன்

நெற்றியோரத்திலிருந்து விழுந்த

வியர்வைப்பொட்டுகள்...
//

மிகவும் ரசித்தேன்.. வாழ்த்துக்கள்.

கோகுலன் said...

வாவ்.. நல்ல கவிதை..

மூன்றுமே நல்லாயிருக்கு..

//நீ போட்டு முடித்த கோலத்தில்

கோலம் போட்டிருந்தன உன்

நெற்றியோரத்திலிருந்து விழுந்த

வியர்வைப்பொட்டுகள்...
//

மிகவும் ரசித்தேன்.. வாழ்த்துக்கள்.

தமிழன்-கறுப்பி... said...

நவீன் ப்ரகாஷ் சொன்னது...

///மிக அழகு தமிழன்...
கவிதைக் கோலங்கள் தொடரட்டும்...:)))///

நன்றி நவீன் அண்ணன்..உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும...

தமிழன்-கறுப்பி... said...

புகழன்...சொன்னது....

//
நீ போட்டு முடித்த கோலத்தில்

கோலம் போட்டிருந்தன உன்

நெற்றியோரத்திலிருந்து விழுந்த

வியர்வைப்பொட்டுகள்...

//

அழகான வரிகள்
மிகவும் பிடித்திருந்தது.
கவிதைகள் அனைத்தும் அருமை
தொடர்ந்து எழுதுங்கள்.///

நன்றி புகழன், தொடர்ந்தும் உங்களை கொடுமைப்படுத்துவம்ல அதுல குறையிருக்காது...:))

தமிழன்-கறுப்பி... said...

கோகுலன்...சொன்னது...

///வாவ்.. நல்ல கவிதை..

மூன்றுமே நல்லாயிருக்கு..

//நீ போட்டு முடித்த கோலத்தில்

கோலம் போட்டிருந்தன உன்

நெற்றியோரத்திலிருந்து விழுந்த

வியர்வைப்பொட்டுகள்...
//

மிகவும் ரசித்தேன்.. வாழ்த்துக்கள்///

நன்றி கோகுலன் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்......

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா...சொன்னது...

///....ஏன் அப்பு நாமதான்(!?!?) ராத்திரியே வந்து உக்காந்திருக்கோமே!!!

அப்புறம் எப்பிடி????

:))))))))))))\\\

அண்ணே நீங்க எப்பவாச்சும் நைட்டுல நிதானமா இருந்திருக்கிறிங்களா..இந்த பொய்தானே வேணாங்கிறது...:)))

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா...சொன்னது...

\\\/
Thooya said...
மார்கழி அதிகாலையில படுத்து தூங்காம..உங்களுக்கு எதுக்கு இந்த கோலம் பார்க்கிற வேலை ;)
/

ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

நாம பாக்கலைனா வேற எவனாவது பாக்க வந்துடுவானே :((

ஸோ நமளே போயிடுவோம் கோலம் பாக்கிறதுக்கு :))))\\\

தல...என்ன தல...:)?

தமிழன்-கறுப்பி... said...

குமித்தா...சொன்னது....

///Very nice kavithai...eppi ippidi ellam yosikkiringa..Superb!///

நன்றி குமித்தா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...நான் எங்கங்க யோசிக்கிறது... மனசுல தோனுற கண்ணுல பட்ட விசயத்தைதான் எழுதியிருக்கேன்...:)

Anonymous said...

//காதல் அழகான விடயம் தானே தூயா...:)
//

ம்ம்ம் அதைவிட்டுடலாம்.
உங்க எண்ணன் அழகா இருக்கு...:)

ஜொள்ளுப்பாண்டி said...

அஹா தமிழன்..
என்ன ஒரு அழகான காதல் கவிதைஸ்... என்னாங்க ஒரு பெண்மையிடம் தோற்றவன்னு போட்டு இருக்கீய..?? ஓண்ணுகிட்டே தோத்ததுக்கே இந்த ரேஞ்சுக்கு எழுதறீயன்னா நீங்க இன்னமும் சூப்பரா எழுத என்ன பண்ணனும்னு நான் சொல்லி தரணுமா என்ன..?

;))))))))

[ ச்ச்சும்மா தமாசி.. கோச்சுகிடாதீய.. சரியா..? ]

ஜொள்ளுப்பாண்டி said...

//அவற்றுக்குத்தானே தெரியும்

அவை வெறும் கோல மாவு அல்ல

ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது... //

அண்ணாத்தே இங்கதான் நம்ம பசங்க தப்பு பண்ணறாங்கணா... இப்படி தேவதை அது இதுன்னு சும்மா ஏத்திவிடறதால தான் தேவதை எல்லாம் ரெக்கை மொளச்சு பறந்து போய்டுதுகப்பூ...

;))))))))))))

தமிழன்-கறுப்பி... said...

தூயா...சொன்னது...

//காதல் அழகான விடயம் தானே தூயா...:)//

ம்ம்ம் அதைவிட்டுடலாம்.
உங்க எண்ணன் அழகா இருக்கு...:)//

அழகான விடயங்களை சிந்திக்கையில் எண்ணங்களும் அழகாகத்தான் வெளிப்படும் தூயா:)
நன்றி Chef உங்கள் மீள்வருகைக்கும் கருத்துக்கும்..

தமிழன்-கறுப்பி... said...

ஜொள்ளுப்பாண்டி சொன்னது...

///அஹா தமிழன்..
என்ன ஒரு அழகான காதல் கவிதைஸ்... என்னாங்க ஒரு பெண்மையிடம் தோற்றவன்னு போட்டு இருக்கீய..?? ஓண்ணுகிட்டே தோத்ததுக்கே இந்த ரேஞ்சுக்கு எழுதறீயன்னா நீங்க இன்னமும் சூப்பரா எழுத என்ன பண்ணனும்னு நான் சொல்லி தரணுமா என்ன..?

;))))))))

[ ச்ச்சும்மா தமாசி.. கோச்சுகிடாதீய.. சரியா..? ]///

:)
புரியுது புரியுது...நொந்து நூலாகிடனும்னு நினைக்கிறிங்க நல்லாயிருங்கப்பு நல்லாயிருங்க...:)

தமிழன்-கறுப்பி... said...

ஜொள்ளுப்பாண்டி சொன்னது...

\\\//அவற்றுக்குத்தானே தெரியும்

அவை வெறும் கோல மாவு அல்ல

ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது... //

அண்ணாத்தே இங்கதான் நம்ம பசங்க தப்பு பண்ணறாங்கணா... இப்படி தேவதை அது இதுன்னு சும்மா ஏத்திவிடறதால தான் தேவதை எல்லாம் ரெக்கை மொளச்சு பறந்து போய்டுதுகப்பூ...

;))))))))))))///


என்ன இப்படி சொல்லிட்டிங்க?? அதுகள்லாம் பாவம் ரொம்ப நல்லதுங்க...:)!
பசங்கதான் தப்பா அணுகி பறக்க வச்சுடறாங்க...:)

நிஜமா நல்லவன் said...

தமிழன்... said...
நிஜமா நல்லவன் சொன்னது....

///தமிழன்... said...
me the first...:)///

தமிழன் அண்ணா இங்கயும் நீங்க தான் பர்ஸ்ட்ட்டா?///

அட பாவி மனுஷா நான் உங்களுக்கு எண்ணனா....
(இதெல்லாம் சரியா சொல்லிடுங்க ஆனா நம்ம பக்கம் தலை வச்சும் படுக்காதிங்க:))

நிஜமா நல்லவன் said...

49

நிஜமா நல்லவன் said...

50

தமிழன்-கறுப்பி... said...

நிஜமா நல்லவன் நொன்னது...

///தமிழன்... said...
நிஜமா நல்லவன் சொன்னது....

///தமிழன்... said...
me the first...:)///

தமிழன் அண்ணா இங்கயும் நீங்க தான் பர்ஸ்ட்ட்டா?///

அட பாவி மனுஷா நான் உங்களுக்கு எண்ணனா....
(இதெல்லாம் சரியா சொல்லிடுங்க ஆனா நம்ம பக்கம் தலை வச்சும் படுக்காதிங்க:))///

///49

50///
அட பாவி மனுஷா அதை கொண்டு வந்து இங்க போட்டிருக்கியே இது உனக்கே நியாயமா நிஜமா நல்லவா...

நன்றி நன்றி உங்கள் வருகைக்கும் கைப்பற்றிக்கொண்ட 50 வது ஓட்டத்துக்கும்...

கிரி said...

//மார்கழியின் அதிகாலைகளில்

நீ போடுகிற கோலத்தையும்

கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு

யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்

ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது

சூரியன்...//

நல்ல இருக்குங்க

இளைய நிலா said...

உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை..

வாழ்த்துகள்...

நட்புடன்
சந்திரன்

நாடோடி இலக்கியன் said...

//மார்கழியின் அதிகாலைகளில்

நீ போடுகிற கோலத்தையும்

கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு

யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்

ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது

சூரியன்...//

அருமை.....!