Friday, February 7, 2014

பாடல் 1 - புனைவை சாத்தியப்படுத்தும் உனது எல்லையில்லா கருணைக்கு.





எல்லோரும் முடிந்து போனதாய் நம்பிய 
ஒரு துயரத்தின் பாடலை மற்றொரு முடிவிலிருந்து
தொடங்கி வைத்திருக்கிறாய்  நீ...
தவிர்க்க முடியாத எனது முன்னைய காலங்களை
நினைவினடுக்குகளிலிருந்து கிளறி எடுத்து
கோப்பைகளில் நிரப்பிக்கொண்டிருக்கிறேன்  
மதுவும் போதையும் தீராததாகவே இருக்கிறது
உனது நினைவுகளைப்போல .

திரும்புதலுக்கான பாடல்கள் குறித்த குறிப்புகள் :
 ( திருத்தியும், விரிவாகவும் மீள எழுதப்படக்கூடிவை) 

போன மாதத்தின் கடைசி வாரத்தில் போதை கலையுமொரு பின்னிரவில் எழுதிப்பார்த்த இந்தச்சொற்களை இன்றைக்கு பகிர்ந்திருக்கிறேன்.பாடலின் எல்லாக்காரணங்களும் இந்தப்பக்கங்களில்  எழுதப்பட்டிருக்கும் பெரும்பாலான சொற்களை தனதாக வைத்திருக்கும் அவள் மட்டும்தான். 

பாடலுக்கான படம்; முன்பொரு முறை கொண்டாடிய சோகம் பற்றிய பதிவிலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி - Google.


நீ எப்பொழுதும்  அற்பதங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறாய் உனது இந்தச்சொற்களை நீ இருக்கும் ஒரு பொழுதில் இந்தக்கடையிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.


பாடல்கள்;
மீண்டும் இந்த புலம்பல்களின் பக்கங்களை தூசு தட்டிக்கொடுத்திருக்கும் அதே எந்த மொழிதலிலும் சமன் செய்து விட முடியாத எனது கறுப்பியின் காதலுக்கு.

1 comment:

swetha chandra sekaran said...

hi, m fan of ur writings... :) ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தமும் உணர்வும் கலவையாக.. என் தமிழ் மேம்பட உங்கள் பதிவுகள் உதவுகிறது... நன்றி!!