Monday, November 22, 2010

இந்த கோதாரிக்கு பெயர் கவிதை...

அவநம்பிக்கைளின் மொத்த இருளும் அறையில் இருக்க
எல்லாக்கடவுள்களும் என்னை பழிவாங்க காத்திருக்கும் இந்த இரவில்...

நானொரு துர்க்கனவிலிருந்து விழித்தெழுந்திருக்கலாம்
ஈரம் தொடையிடுக்கில் வழிய போர்வையைச்சரிசெய்தவாறு
நானொரு கவிதையை குறித்து யோசிக்க தொடங்குகிறேன்...

மிகப்புனிதமான சொற்களைக்கொண்டு
உருக்கமானதொரு கதையை எழுதி முடிக்கையில்
நான் யோனிகளை மறந்தவனாகிறேன்...

மேலும்,

இல்லாத சமாதானம் குறித்தும்
சாமானியர்களின் நில அபகரிப்பை நொந்தும்.
துயரங்களை சுமந்தலைகிற பாடல் பாடுகிறவர்களின்
புதிய ஒன்றுகூடல்கள் இருப்பதையும்
இலக்கிய பரமாத்மாக்களின் புதிய அவதாரங்களையிட்டும்
இணையச்சுவர்களில் எழுதி வளர்கிற மொழியை வியந்தும்
இன்னும் எல்லாவற்றையும்
உங்களைப்போலவே செய்து கொள்ளக்கூடும்.

நானிதை எழுதிக்கொண்டிருக்கிற நேரம்...

நீங்கள்
எல்லா விதிகளையும்
எல்லைகளையும்
அதிகாரத்தையும்
குறிகளையும்
இயலாமைகளையும்
சபிக்கும்படிக்கு

சாத்தான் உங்களோடு இருக்கும் படியாக
இல்லாத கடவுள்களை வேண்டிக்கொள்கிறேன்...

ஆமென்.



__________________________________________________


பிந்திய குறிப்பு :

இப்பொழுது இருக்கிற மனோநிலைக்கும் இந்த வரிகளுக்கும் இடையிலான இடைவெளி இந்த தலைப்புக்கான காரணமாயிருக்கலாம்.

3 comments:

Thamira said...

முடியல.. -2

Lover Veronica said...

Vow.... cool Imagination

தமிழன்-கறுப்பி... said...

நன்றி நண்பர்களே,

ஆதி அதேதான் முயடில.. :)