Showing posts with label ஒரு தொலைபேசியிலிருந்து. Show all posts
Showing posts with label ஒரு தொலைபேசியிலிருந்து. Show all posts

Friday, April 17, 2009

தலைப்புகளற்ற குறிப்புகள் - 17-04-2009

\\
படபடப்பாய் இருக்கிறது நாட்கள் இதுக்கு என்ன தீர்வென்று அய்யனாரைத்தான் கேட்கவேண்டும்.அவரே சந்தோஷின் குறுந்தகவலைப்பற்றி இனிமேல்தான் யோசிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ஆனால் எனக்கென்னமோ அய்யனார் எழுதுவது மயக்கம் தருவதாய்தான் இருக்கிறது. அய்னாரோடு சேர்ந்து தண்ணி அடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது சந்தர்ப்பம் கிடைகுமென்று நினைக்கிறேன்(கிடைக்குமா?) அந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமான மொட்டை மாடி அமைவதுதான் நிச்சயமில்லாத விசயம். தல நாவல் எழுத ஆரம்பிச்சிட்டதா சொல்லியிருக்கு சீக்கிரமே பதிவுலகை புரட்டிப்போடப்போகிற நான் திரும்பத்திரும்ப வாசிக்கப்போகிற நாவலை எதிர்பார்க்கலாம். சீக்கிரம் எழுதுங்க அய்யனார். தாமதமான பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துக்களையும் இங்கே சொல்லிக்கொள்வது மகிழ்சிக்குரிய விசயம்.

\\
பதிவுலகம் பேசப்போகிற இன்னுமொரு நாவலும் விரைவில் வரும் போலத்தெரிகிறது அது கவித்துவ மொழிதலுக்கு சொந்தக்காரியான தோழி தமிழ்நதியிடமிருந்து.உணர்வுகளை அதிக பட்சம் கடத்துகிற மொழியும், மொழி வசப்படுகிற எழுதுதலும் இருக்கிற ஒரு கவிஞரிடமிருந்து வருகிற தன்னைத்தான் எழுதிச்செல்கிற நாவல் மாதிரியான ஒன்று சுவாரஸ்யங்கள் நிரம்பியதாய் இருக்கும் என்பதில் ஐயப்பாடுகள் இருக்க வாய்புக்ககளே இல்லை.

இரண்டு நாவல்களுக்குமான முன்கூட்டிய வாழ்த்துக்களை இப்பொழுதே பகிர்ந்து கொண்டு நாவலை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை மிக அழுத்தமாக பதிவு செய்கிறேன்.


\\
கடந்த பதிவில் எழுதியவரிகளை நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்களோ எனக்கு தெரியவில்லை. என்னைப்பொறுத்த வரையில் அவை பெரியதொரு புலம்பலில் சிதறிக்கிடந்த சில சொற்கள் தான் இந்தப் புலம்பலை அல்லது சொற்களை கட்டுக்குள் கொண்டு வருவது கொஞ்சம் சிரமமானதாய்தான் இருக்கிறது. புலம்புதலை நிறுத்தினால் சிதறிவிடக்கூடும் கபாலம்.வாழ்வதற்ககு இன்னும் நிறைய இருக்கிறது அதனால் சொற்களை எழுதுதல் என்கிற புலம்பல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இது அடுத்த பதிவுக்கான பின்குறிப்பாகவும் இருக்கலாம்.


\\

கையில கிடைச்சது செல்போன்தான்... :)


*
காணும்,
காணும்... வைக்கிறேன்
எனக்கிற சிணுங்கல்களுடன்
என்னுடைய சம்மதங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிற
மௌனங்களின் பொழுதுகளில் கேட்கிற
மூச்சுவிடும் ஓசைககளில் இருக்கிற
கனம் நிரம்பிய காதலை
சுமக்க முடியாமல் தவிக்கிறதென் தொலைபேசி

*
உரையாடல்கள் நின்றுபோன
உறவொன்றின் அழைப்புக்காய்
ஏங்கிக் கொண்டிருக்கிறதென்
தொலைபேசியும்
மாலைப்பொழுதுகளும்.


*
எழுத்துகள் அழிந்து போன
விசைப்பலகையோடு இருக்கிற
தொலைபேசி திணறிக்கொண்டிருக்கிறது
நிரம்பிப்போயிருக்கிற பிரியங்களோடு வழிகிற
உன் குறுந்தகவல் விசாரிப்புகளில்...

*
அழைப்புகள் தீர்ந்து போன பிறகும்
அழிக்கப்படாமலிருக்கிற
உன் இலக்கமும் குறுந்தகவல்களும்
தனித்திருக்கிற இரவுகளின்
சில கவிதைகளுக்கு வழி செய்கிறது அல்லது
தனிமைக்கு துணையிருக்கிருக்கிறது

*
நாள் முழுவதும் தொடர்கிற
குறுந்தகவல் பரிமாற்றங்களில்
சேர்ந்திருந்த பொழுதுகளை
ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது
பிரிவுக்கு பின்னரும் அழிக்கப்டாமலிருக்கிற உன்
பிரியம் நிறைந்த சொற்கள்..

*
உயிர் நிரப்புகிற உரையாடல்களை
என்னோடு சுமந்தலைகிற
என் தொலைபேசிக்கு தெரியாது
அவள் பிரிவறித்த செய்தி
கடிதமொன்றில் வந்திருக்கிறதென.

*கிட்டத்தட்ட இரண்டரை வருடமாய் என்னோடிருக்கிற செல்போனுக்கு சமர்ப்பணம் இவ்வரிகள்.



\\
அரபு நாடுகளின் வெள்ளிக்கிழமை என்பது அனுபவிக்க விரும்புகிற வியாழக்கிழமை இரவுகளுக்கடுத்த தூக்கம் நிரம்பிய பகல்களாகத்தான் அனேகம் பேருக்கு இருக்கும் எனக்கு அவை தூக்கமற்ற வியாழக் கிழமைகளுக்கு பின்பான பணி நேரப் பகல் பொழுதுகளை தந்துகொண்டிருக்கிறது ஏதாவது எழுதலாம் என்கிற நினைப்பில்லதான் பணிக்கே வருவேன் எதை எழுதுவது முட்டி மோதுகிற சொற்களை எப்படி கோர்வையாக்குவது என்பது தெரியாமல் வாசிக்க கிடைக்கிற பதிவுகளுடன் முடிந்து போய்விடுகின்றன் அவை.

Thursday, April 10, 2008

வந்திருந்தவை...


*
ராஜா...
எனக்கு நிறைய கோபம்
வருதே என்ன செய்ய
பொறுத்து கொள்ளுங்கள் தயவு செய்து
என்ன உறவு என்று
சொல்ல கூடாது என்றில்லை
சொல்ல முடியவில்லை
தாலி கட்டி
பக்கத்தில் வைத்து கேட்டாலும்...


*
அப்படியா...
கேட்கவே தாங்க முடியவில்லை
கொஞ்சம் கிட்ட வாங்களேன் ஆனால்
ஒன்றுதான் தருவேன் மிகுதி நேரில்
இப்ப நான்
சேலை மாற்றிக்கொண்டிருக்கிறேன்...




*
ராஜா...
அடுத்த வாரம் தான் ஊருக்கு போவேன்
நாளை பிள்ளையார் சுழி போட்டு கடிதம்
எழுத தொடங்குகிறேன்
எழுதி முடிய ஒரு மாதம் எடுக்கும்
கிழவிக்கும் மாமனைப்பார்க்க ஆசைதான்
முடியலையே...
*
என்னடா...
காலை வணக்கங்கள்
இன்று பன்னிரண்டு மணிவரை வேலை இருக்கு
சிகரெட்டை என்ன செய்வதாக உத்தேசம்
குறையுங்களேன்
நிறைய படிக்க இருக்கப்பா
கொஞ்சம் படித்து தருகிறீர்களா...
*
காலை நேர வாழ்த்துக்கள் ராஜா...
இன்று வேலை இல்லை
விடுதி வேலை கொஞ்சம் இருந்தது
நாலரை மணிக்குப்பதிலாக
ஐந்தரை மணிக்கு எழும்பினேன் படுத்தாலும்
நித்திரை வராது
நிறைய வேர்க்கிறது
ஒரே சினமாயிருக்கு...
*
என்னடா...
இனிமேல்தான் சாப்பாடு அதன்
பிறகுதான் சீருடைக்கு மாறுவேன்
எனக்கு எங்கே அனுப்புவீர்கள் கடிதம்
வேண்டாமே..தயவுசெய்து...நாளை
ஏப்ரல் முதல்திகதி
தயாராக இருக்கவும்...

Tuesday, April 8, 2008

அனுப்பியிருந்தவை...


*
நீ சொல்ல மாட்டாய் என்று
எனக்கு தெரியும் தமிழ்
நீ காலை வணக்கம் சொல்லும்பொழுதே
உன்னை கட்டிக்கொண்டு
அழ வேண்டும் போலதான் இருந்தது
முழுக வேண்டும் என்று வேறு சொன்னாயா
கோபம் வேறு மாதிரி ஆகியிருந்தது.... ஆனால்
உன்னோடு உடனே கதைக்க வேண்டும்
என்று நினைத்தவற்றை கதைத்து முடித்தேன்
என் நம்பிக்கைகளை
நீயே இல்லாமல் செய்கிறாய்
சில நேரங்களில் அதனால்தான்
வார்த்தைகள் தடம்மாறி வெளிவந்தன...


*
என்னடா...
நானும் உன்னைதத்தான் அழைத்துக்கொண்டிருந்தேன்
என்ன செய்கிறாய் கடிதம் எழுது
வேறென்ன விஷேசம்
ராஜபார்வை என்றொருபடம் அதில்
மழையோடு தொடங்கும் ஒரு பாடல்...







*
என்னடா...
வீட்டுக்கு போகிறாயா
கடிதம் அனுப்படா குட்டி
மாமனுக்கு உன்னை
பார்க்க வேண்டும்
போல இருக்கடா...


*
அது சரி...
கொல்கிறாயே "கிழவி"
கொஞ்சம் பொறு வந்து விடுகிறேன்
காலம் முழுதும் உன்
கைகளுக்குள் வாழ்வதற்கு
கறுப்பி...
உன்னால் முடியும் தம்பி படம்
இதழில் கதையெழுதும் நேரம் பாடல்
கேட்டுப்பார்...


*
என்னடா...
வேலையா இல்லையென்றால்
நன்றாக நித்திரை கொண்டு எழும்பி
பிள்ளையார் சுழி போடுங்கோ
என...




*
ம்ம்ம்...
கன நேரம் வேலை செய்யாதே அதிலென்ன
எதுவுமே தெரியாமல் எனக்கு
இரசாயனவியல் பாடம் எழுதித்தந்து அதில்
என்னை அழவும் வைத்த
என் செல்லத்துக்கு உதவி செய்யாமல் இருப்பேனா
குறைத்திருக்கிறேன் கவலைப்படாதே...
நிறுத்தி விடுவேன்...


*
என்னம்மா...
மனதை லேசாக விடு...
காற்றாடி வேலை செய்யவில்லையா
ஜன்னலையும் மனதையும் திறந்துவைத்துக்கொள்..
தனியே இருக்கும் தருணங்கள்
சுமைகள்தான் பார்த்தாயா
அமைதியான இடத்தில் இருந்து
விருப்பமான எதையாவது செய்து கொள்...
என்ன புத்தகம் வைத்திருக்கிறாய்...


*
என்ன...
எப்படி இருக்கிறாய் அன்பே...
வேலைக்குப் போக தயாராகி விட்டாயா- நான்
உனக்கு கடிதம் அனுப்ப வேண்டும்
அதற்கொரு முகவரி கொடு
நீ எப்பொழுது அனுப்புகிறாய்...


*
ஹாஹா...
நான் முட்டாள்கள்
தினத்தைப்பற்றி யோசிக்கவேயில்லை....
முட்டாள்கள் மட்டுமே
தங்கள் நாளைப்பற்றி யோசிக்கிறார்கள் ஆகவே
நீ அவதானமாக இருக்க வேண்டும்...
அத்துடன் முன்கூட்டிய வாழ்த்துக்கள்
உன்னுடைய நாளுக்காக..
(நன்றி அன்பே ஞாபகப்படுத்தியதற்கு...)


*
என்னடா...
சாப்பிட்டு விட்டாயா
அவசரமாய் ஒரு
முத்தம் தந்து உதவ முடியுமா
இங்கே ஒரு ஜீவன்
சாகும் தருவாயில் இருக்கிறது...


Saturday, February 2, 2008

கடிதங்களுக்குப்பதிலாக...2

வந்திருந்தவை...2

* ஒரு ரயில் நிலையத்தில்
சரியான நேரத்திற்கு வந்திறங்கிய
ஆகாய விமானத்தைப்போல
எத்தனை பெரிய சேதத்தை
ஏற்படுத்திவிட்டாய் என்னுள்ளே!
எப்பொழுதுசீர் செய்யப்போகிறாய்...?

*என்ன ராஜா...
இந்த நேரத்தில்...
இப்பொழுது கோவிலுக்கு
மாலை கட்டிக்கொண்டிருக்கிறேன்
நான் கோர்த்துக்கொண்டிருப்பது பூக்களல்ல
உன் ஞாபகங்கள்தான்...

* ஒரு உயிர்
இன்னொரு உயிருக்காக போராடுவது
காதல் அல்லது பிரசவம்...
உன்னைப்பெற்ற பொழுது
உன் அன்னை கொண்ட வேதனையை
இப்பொழுது நீயெனக்கு
தந்து கொண்டிருக்கிறாய்...


( இது ஒரு தனி நபர் விசயம் என்பதால் இடையிடையே சில தகவல்களை தராமல் விட்டிருக்கிறேன் அவை தகவல்கள் அல்ல இரு காதல் நெஞ்சங்கள் பரிமாறிக்கொண்ட உணர்வுகள்... அவர்களது பிரிவின் வேதனையை அங்கே எழுதியிருந்தார்கள் இல்லையில்லை அழுதிருந்தார்கள்... அதனால் அவற்றை தவிர்த்து விட்டேன்...)

கடிதங்களுக்குப்பதிலாக...2

அனுப்பியிருந்தவை...2

*உன்னோடு கதைக்காமல் இருக்க முடியாதா
என்று கேட்கிறாய்
ஏனிப்படி சுற்றி வளைக்கிறாய்
சுவாசிக்காதே என்று
நேரடியாகவே சொல்லு...

*அடடா...
இதெல்லாம் கேட்டு வாங்க வேண்டியிருக்கிறது
எங்கே மறைத்து வைத்திருந்தாய்
இத்தனை காதலையும்
இன்னும் எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறாய்
என்னை கொடுமை கெய்ய
காதலில் கொடுமை
காதல் தானே...

*நீ என் தோள்களில் சாய்கிறாய் என்றால்
என் ஆயுள் முழுவதும் தாங்குகிறேன்
நீ என் மார்போடு தூங்குகிறாய் என்றால்
என் இரவுகள் முழுவதும் தருகிறேன்
உன்னோடு வருவதானால் இந்த
உலகத்தை விட்டும் வருகிறேன்...


* எந்த கடவுளுக்கு மாலை கட்டினாய்
உன் மாலைகளுக்காகவே
கடவுளும் காதலிக்கக்கூடும்
சொல்லி வை
நீ மாலையிடுவதும்
உன் தோள்களில் மாலையிடுவதும்
நான் மட்டும்தான் என்று...

* வாரந்தோறும் நீ கட்டும்
மாலைழுக்காகவே
காத்திருக்கின்றன தெய்வங்கள்
அது சரி...
எனக்கு எப்பொழுது மாலையிடுகிறாய்...
காத்திருப்பது
நானும்தான்...

Friday, November 30, 2007

கடிதங்களுக்குப்பதிலாக...1


அனுப்பியிருந்தவை 01

வந்திருந்தவை இப்படியிருந்தால் அனுப்பியிருந்தவை அதைவிட மேலே ஒரு படி போயிருந்தது படித்துதான் பாருங்கள் இதில் ஒரு வருத்தம் என்னவென்றால் என்னால் தொடர்ச்சியாக அவற்றைப்படிக்க முடியவில்லை என்பதுதான் இருந்தாலும் பரவாயில்லை இனி திருட்டுத்தனமாக கிடைக்கும் சந்தர்ப்பங்களில் முடிந்தவரை படித்துவிடுகிறேன்...



*நான் என்ன ஆறுதல் சொல்ல உனக்கு

உன் நினைவுகள்தானே துணை எனக்கு

இப்பொழுது எப்படியிருக்கிறாய் கண்ணம்மா

உன்னை பார்த்துக்கொள்

உடம்பை அலட்டிக்கொள்ளாதே

கொஞ்சம்பொறு வந்துவிடுகிறேன்

அதுவரையும் நான் எப்பொழுதும்

உன்பக்கத்திலேயே இருப்பேன்

நம் நினைவுகளினூடே...


*தீபாவளியா

நீ என்னருகில் இருந்த

நாட்களை விட விசேசமாக

வேறெந்த நாட்கள்

இருக்கமுடியும் எனக்கு...


*சிதைந்துகொண்டிருந்த என்னை

செதுக்கியவள் நீ

என் மரியாதைக்குரிய தேவதையே

நான் உன் நிமித்தம் வாழ்கின்றவன்...



*பிரிவின் தூரம்

நாள் ஒரு வாரம்

நீ தரும் நேசம்

உயிரின் சுவாசம்

உன் நினைவுகள் என்னில்

தென்றலாய் வீசும்

அன்பே என்னை உன் எல்லைவரை

அழைத்துப்போகிறாயா...?





*என்னை மன்னித்துவிடு தமிழ்



உன்னை கோபப்பட எனக்கு உரிமையில்லையா



இங்கே நான் தனித்திருக்கிறேன்



என்னை தவிக்க விட்டுவிடாதே...



*நீ என்ன நினைக்கிறாய்

என்பதுஎனக்குத் தெரியாது ஆனால்

நான் உன்னைத்தான்

நினைததுக்கொண்டிருக்கிறேன்

எனக்கான நேரத்தை ஒதுக்குவதில்

உனக்கு சிரமம் இருக்கிறதோ அல்லது

அவசியம் ஏற்படவில்லையோ...

கடிதங்களுக்குப்பதிலாக...1

வந்திருந்தவை...01
நிறைய நாட்களாக கணினியில் இருப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அதுவே எனக்கு ஏதோ தலை முழுக்க பாரமாக இருந்தது ஒரு இயல்பில்லாத தன்மையுடன் உலவிக்கொண்டிருந்தேன் இப்பொழுது எதிர்பாராமல் ஒரு சந்தர்ப்பம் அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட நேரம்தான் வந்து இருந்த உடனேயே எழுதவேண்டும் என்று நினைத்த எல்லாம் ஒரே சமயத்தில் நெற்றிப்பொட்டில் வந்து குவிய நானே குழம்பிப்போனேன் என்ன செய்வதென்று தெரியாமல் மனதில் ஒவ்வொன்றாய் வந்து விழுந்த விடயங்களை எழுதினாலே ஒரு பதிவு நீளத்திற்கு வந்துவிடும்போல இருந்தது சரி அவற்றுள் ஏதாவத ஒன்றைப்பற்றி எழுதலாம் என்றால் முதலில் ஞாபம் வந்தது சமீபத்தில்நான் பார்த்து வியந்த ஒரு கையடக்கத்தொலைபேசியின் குறுந்தகவல் பரிமாறல்தான் அடடா இதில இப்படியெல்லாம்கூட இருக்கா நம்மளுக்கு தெரியாமப்போச்சே என்னுமளவுக்கு தட்டிக்குவித்திருந்தார்கள் எப்படித்தான் இவ்வளவையும் தமிங்கிலீசில் வாசிக்கப்பழகினார்களோ...? அவற்றுள் எனக்கு கிடைத்த அவகாசத்தில் திருட்டுத்தனமாக வாசித்ததில் ஞாபகம் இருப்பவற்றை தமிழில் தர முயன்றிருக்கிறேன் படித்துப்பாருங்கள்
*நாளை விடுமுறை நாளென்பதால்
நான் இன்றய இரவு முழுவதும்
தூங்காமல் உன்னோடு இருக்கிறேன்...
*என் ராஜாவுக்கு
உன் கண்கள் தொடும்
உன் கைகள் தொடும்
உன் சுவாசம் தொடும் தூரத்தில்
காலம் முழுவதும்
கழிக்க வேண்டும்...
*கண்ணா காலைப்பொழுதின் வாழ்த்துக்கள்
என்ன செய்கிறாய்?
நான் குளித்து முடித்து தேநீர் குடிக்கிறேன்
இங்கே நீ இன்னமும் தூங்குகிறாய்
எழுப்பவா? வேண்டாமா...?
*நான் நாளைய பரீட்சை ஒன்றுக்கு
தயாரயகிக்கொண்டிருந்தேன்
கவலைப்படாதே உன்னால் என்னை
காயப்படுத்த முடியாது
அணைப்பதற்கும் அடிப்பதற்கும்
நீதான் வேண்டும்
இனிய இரவுக்கான வாழ்த்துக்களுடன்
விடைபெறுகிறேன்...
(சரி நேரம் முடிந்து விட்டதனால் தற்காலிகமாக பதிவை முடிக்கிறேன் ஆனால் இது இப்பொழுது முடியாது நான் வாசித்ததே ஒரு 15 தகவல் இருக்கும் அதில் நினைவிருப்பவை ஒரு 10 இருக்கும் பார்க்கலாம் திரும்பவும் என் கைக்கு வராமல் போய்விடுமா என்ன...)