*
கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே
வந்துவிடுகின்றன எறும்புகள் என்று
சலித்துக்கொள்கிறாய் நீ
அவற்றுக்குத்தானே தெரியும்
அவை வெறும் கோல மாவு அல்ல
ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது...
*
நீ போட்டு முடித்த கோலத்தில்
கோலம் போட்டிருந்தன உன்
நெற்றியோரத்திலிருந்து விழுந்த
வியர்வைப்பொட்டுகள்...
*
மார்கழியின் அதிகாலைகளில்
நீ போடுகிற கோலத்தையும்
கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு
யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்
ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது
சூரியன்...