Showing posts with label பகிர்வு.... Show all posts
Showing posts with label பகிர்வு.... Show all posts

Thursday, August 2, 2012

கைவிடப்பட்ட உடல்கள் - ஒரு மாதிரிக்குறிப்பின் திருத்தமற்ற வடிவம்.




இதை வாசிக்கப்போகும் அனேகம்  ஆண்களுக்கான பொதுவான அனுபவங்களில் ஒன்றாக நீலப்படங்கள் இருக்கக்கூடும்.  அந்த நீலப்பட நடிகைள், நடிகர்களைப் பற்றி உரையாடல் ஒன்றுக்கான தொடக்கம் இந்த  மாதிரிக்குறிப்பு.  தனியே நடிகைகளை மட்டும் பேசிவிட்டு கடந்து போய்விட முடியாத நீலப்பட சந்தையும் சூழலுமே இப்பொழுது இருக்கிறது  எனக்குத்தெரிந்த வகையில்  எந்தவித  தேடுதலும்  இல்லாமல்  தொடங்கிய ஒருசிறு குறிப்பு இந்த பகிர்வு.



சமீபத்தில்  நீலப்பட நடிகையொருத்திக்கு ரசிகனாய் இருப்பதைக்குறித்த உரையாடல்  ஒன்றை ஆரம்பித்த தோழருக்கு நன்றி.


வயதான நீலப்பட நடிகைகளைசந்திக்க வேண்டும் என்கிற  ஆர்வம் 2009 கடைசிகளில்  எனக்கும் இருந்தது, பின்னர்  மாலனின் "கலாச்சார கண்ணாடியில் கல்லெறியும் நீலப்படங்கள்" கட்டுரையை வாசித்த பிறகு அந்த நடிகைகளின் வாழ்வு குறித்த ஆவணப்படங்களை தேடியிருக்கிறேன். யாராவது சில நடிக நடிகைகளை சந்தித்து உரையாட நினைத்திருக்கிறேன். ஒரு முன்னாள் மல்யுத்த வீரனுக்கே இவ்வளவு கதைகள் இருக்கும் பொழுது ஒரு நீலப்பட நடிகைக்கு காலம் என்ன மாதிரியான அனுபவங்களை தரக்கூடும்?! - சாதாரண தமிழகத்து நடிகைகளுக்கே நமது மனங்கள் மோசமான அனுபவங்களை கொடுத்திருக்கையில் ஒரு தொழில் முறை நீலப்பட நடிகையின் வாய்ப்புகள் அற்றுப்போகையில் என்ன மாதிரியான  சமூக,பொருளாதார,உளவியல் பிரச்சனைகளை மீதமிருக்கிற அவளது காலம் அவளுக்கு தரக்கூடும்?!

பெண்களிடம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பாத ஆண் மனங்களின்  பயம், விகாரம், குரூரம் எல்லாவற்றினதும்  திருப்திக்கான சந்தைப்படுத்தல்களாகவே  அனேகமான  நீலப்படங்கள் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் பெண் உடலின் மீதான வன்முறையே பெரும்பாலான மூன்றாந்தர நீலப்படங்களில் இருக்கிறது. ந்திய பாலியல் அடிமையே, வெள்ளை நிற விபச்சாரியே என்றெல்லாம் பேசுப்படுகிற வார்த்தைகளின் அரசியல் வேறொரு வகையானவை.

எனக்கு பிடித்தமான நீலப்பட நடிகைகள் குறித்து பேசுமளவிற்கு அவ்வளவு அதிகம் படங்களை நான் பார்த்ததில்லை தோழர் ஆனாலும் சில படங்களையும் நடிகைகளையும் எனக்கும் நினைவிலிருக்கிறது- அதில் ஒரு  நடிகையின் புதிய படங்கள் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை, அவரது தற்போதைய வாழ்வு பற்றிய தகவலை கூகுளில் கூட காணவில்லை .


பகிர்வுக்கு சம்பந்நதப்பட்ட மற்றொன்று:

எனக்குத்தெரிந்த நீல நடிகைகளில் இவரை சொல்லாமல் விட முடியாது துருதுருவென்றிருக்கிற இவருடைய பூர்வீகம் பஞ்சாப்; பஞ்சாபி பெண்களிடம் இருக்கிற இயல்பும் அலட்சியமும் இவரிடமும் அதிரடியாகவே இருக்கிறது. கனேடிய இந்தியரான இவருடைய அழகில் அமெரிக்காவை கலக்கிய பின்லேடனே அசந்து போயிருந்தார் என்று செய்திகளும் இருக்கிறது. அமெரிக்க, கனேடிய ஆண்மனங்களின் தூக்கத்தையும் பெண்மனங்களின் பொறாமையும் சம்பாதித்துக்-கொண்டிருந்த இவர் "பிக்பாஸ்" நிகழ்ச்சி மூலம்  ந்தி திரையுலகுக்குள் நுழைந்திருக்கிறார். இவருடைய முதல்  இந்திப்படம் Jism-2 நாளைக்கு ( 03.08.2012) வெளியாகிறது. இவர் திரையில் காட்டுவதற்கு எதுவுமே இல்லை என்று சொல்பவர்களுக்கு  மறைக்கபட்ட அழகில்தான் அதிகம் கவர்ச்சி இருக்கிறதென்று பதில் சொல்லியிருக்கும் இவருடைய இந்தப்படத்தின் காட்சிகள்  அதனை நிரூபிக்கிறதாய் நான் நம்புகிறேன். நிர்வாணத்தை தாங்க முடியாதவைதானே ஆண்மனங்கள். துருத்தலான விகாரங்களுக்கு பழக்கப்பட்டவைதானே தமிழ் மனங்கள்.. 
இந்தப்படத்தில் கூட நடிக்கிற Randeep Hoda ஒரு நல்ல நடிகர் எந்த  காட்சியையும் இயக்குனருக்கும் காட்சிக்கும்  திருப்பதியாகச்செய்யக்கூடிய கலைஞன், அது  என்ன் காட்சியாயிருந்தாலும்  Once upon time in Mumbai  படம் அதற்கு ஒரு சாட்சி.




உண்மையாகச் சொல்லப்போனால் SunnyLeone நடித்த எந்த நீலப்படத்தையும் நான் இதுவரை பார்த்ததில்லை.


Friday, July 6, 2012

சுணைக்கிது...


பேசவிரும்பாத கதைகள் பற்றிய குறிப்பு.



முகவுரை, பதிப்புரை, அந்தவுரை, இந்தவுரை என்கிற எந்த கந்தாயங்களுமில்லாமல் பிரித்ததுமே கதைக்குள் நழைந்துவிடுகிற புத்தகத்தின் வடிவமைப்பைப்போலவே நிரூபாவின் கதைகளும் சட்டென்று சொல்லவந்த மையத்துக்குள் நுழைந்து ஒரு ஊரையே நமக்கு அறிமுகம் செய்து அவா்களோடு நெருங்க வைத்துவிடுகிறது. ஊருக்குள் பேசத்தயங்குகிற கதைகளை ஊரில் பேசும் அதே மொழியில் எழுதியிருப்தே அதன் பலமும் பலவீனமும் என்று நினைக்கிறேன். ஈழத்தின் வடக்கில் இருக்கிறவா்களுக்கு புரிந்துகொள்ள முடிந்தாலும் எல்லோராலும் சட்டென உள்வாங்க முடியாத இந்த பேச்சுவழக்கில் எழுதப்பட்டிருப்து இதன் பரவலான அறிமுகத்திற்கான தடையாக இருக்கலாம்.

பன்னிரண்டு கதைகளைக்கொண்ட இந்தத்தொகுப்பு ஒரு நாவலின் முழுமையற்ற வடிவமாகவும் இருக்கிறது ஒரு ஊரில் நிகழும் அனுபவங்களை எந்த பாசாங்குகளும் அரசியல்துருத்தல்களுமில்லாமல் ஒரு பெண்மனதின் ( சிறுமியிலிருந்து பதின்மங்கள் வரைக்கும்) இயல்பான வெளிப்பாட்டோடு சொல்லியிருக்கிற இந்தத்தொகுப்பினைப்பற்றி போதுமான அளவில் பேசப்படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


மற்றும்படி சுணைக்கிது ஈழத்தின் சிறுகதை குறித்த கதையாடல்களில் கட்டாயம் இடம்பெறவேண்டிய ஒரு தொகுப்பு.
_____________________________________________________________________ 











"ஆனால்
ஒரு விடியலில்
கிண்டப்பட் புதைகுழிக்குள்
பாழ் கிணறொன்றில்
கண்டெடுக்கப்படும் ஒன்றைாய்
அழுகிய நாறிய அழிந்த ஒன்றாய்
என் தாய்க்கிழவியின்
ஒப்பாரி ஓலங்கிளைடையே
மேலே இழுக்கப்படுவதற்காய்
காலுகளே
என்னை விட்டுச்செல்லாதீர்கள்
கைகளே
என்னை கைவிட்டு விடாதீர்கள்"



ஒலிக்காத இளவேனில் தொகுப்பில் கற்பகம் யசோதர எழுதிய,இறுதி வார்த்தைகள் என்கிற கவிதையிலிருந்து எழுதப்பட்ட இந்த வரிகள் வசந்தங்கள், உதயங்கள் எல்லாம் வந்து ரட்சிக்கப்பட்ட பிறகும் நிகழும் தற்கொலைகள்  இனந்தெரியாதோரால் நிகழ்த்தப்படும் கொலைகள் மற்றும் இடம்மாற்றப்படும், அழிக்கப்படும் சவங்களுக்காக எழுதப்படுகிறது.

வடலியின் வெளியீடாக வெளிவந்திருக்கிற இந்தத்தொகுப்பு இலங்கைப்பெண்களது கவிதைகள் என்ற அடிப்படையில்  வந்திருக்கும் மற்றொரு முக்கியமான தொகுப்பு.அவா் ஒரு வரி எழுதினார் இவா் இப்படி எழுதினார் என்று ஒற்றை வரியை பிடித்துக்கொண்டு நக்கீரா் தனம் காட்டும் இணையவீரா்கள் யாரும் இந்தத்தொகுப்பை பற்றி பேசியதாய் நானறியவில்லை.  இவா்கள் பேசாமல் இருக்கிறதே இந்த தொகுப்பினது வெற்றியும் என்று நான் நினைக்கிறேன். ஒடுக்கப்பட்ட மனங்களிலிருந்து எழுதப்படுகிற வார்த்தைகள் உங்களை பேச இயலாமல் பண்ணின என்பதாக திருடப்பட்ட நிலத்திலிருந்து இதனை தொகுத்தவா்கள் எழுதி வைத்துக்கொள்ளலாம்.பேசவும் விமா்சிக்கவும் நிறைய விசயங்கள் இருக்கிறதாக முகத்திலறையும் இந்த கவிதைகள் சொல்வதாய் நான் நம்புகிறேன்.

பிரசுர வெளிக்கு புதிய பலரது கவிதைகளையும் நன்கறிந்த பலரது கவிதைகளையும் தொகுத்து வந்திருக்கிற இந்த கவிதைகள் தொகுப்பாளா்கள் சொன்னது போல அவரவா் உலகங்களை தமதான் நம்பிக்கைகளுடன் வெளிப்படுத்தியிருக்கின்றன.  அவரவா் உண்மைகளை பேசும் இந்தக்குரல்களை குறித்து பேசாதிருக்கிற மற்றவா்களை நினைந்து நான் வியந்து கொள்கிறேன். 


Thursday, November 17, 2011

கடிதங்கள் - சரியாய் எழுதப்படாத உண்மைகள்.

உயிர் நிரப்புகிற கூடுகள்.

இடைவெளிகளோடானா சில வருடங்களுக்கு பிறகும்
இருள் வழிகிற பாலை வனத்து வானத்தில்
அடர் மேகமென படர்கிறதுன் உருவம்...
நட்சத்திரங்கள் மிதக்கிற செங்கடலின் கூரையில்
பெரு நிழலென தொடர்கிற குளிர்காற்றில்
அமிழ்ந்து போயிருக்கிறது மௌனம்
பொழுதுகள் நீள்கிற பெருவெளியில் இருக்கிற
உயிரை நிரப்புவதற்கு கடல் கடந்து வரக்கூடும்
ஆகக்குறைந்தது நீ அழாமல் இருக்கிறாய் என்றோ
ஆகக்கூடியதாய் உன் பிரிவறிவிக்கிறதாகவோ...
செய்திகள் சுமந்த கடிதக்கூடுகள்...!


முன்னெப்பொழுதோ எழுதிய இந்த வரிகளை படித்தபொழுது எழுதிய,திருத்தி மாற்றப்படக்கூடிய பகிர்வு.

___________________________________________________

எனக்கு எப்பொழுதும் கடிதங்களின் மீது அதிகமான பிடிப்பிருக்கிறது.

இப்பொழுதும் கடிதங்கள் அவை யாருடையதாய் இருந்தாலும் அவற்றை சேர்த்து வைத்திருக்கிறேன். கடிதங்கள் அழிய விடக்கூடாதவை என்பது என் நெடுநாளைய எண்ணப்பாடு. கடிதங்களின் அருமை மறந்து போய்விட்டிருக்கிற மனங்கள்தான் பெரும்பாலும் இப்பொழுது இருக்கிறது. நான் அறிய கடிதங்களுக்காக காத்திருந்தவர்கள் கூட அவற்றை கணக்கெடுக்காமல் விட்டிருக்கிற தன்மையை கண்டிருக்கிறேன்.இந்த கொடும்பாலையின் கடுந்துயரங்களில் இதுவும் ஒன்று. முன்பெல்லாம் சவுதி கடிதங்களுக்காக காவலிருந்து வாசிக்கிற அஜிநபிகளை கொண்டிருந்தது. 'பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி இருக்கிறோம்' என்று பல வருடங்களாக இருக்கிற பழையவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் பெரும்பாலானவர்களிடம் அதில் ஒரு கடிதம் கூட மீதமில்லை என்பதுதான் சோகம். நான் இங்கே வந்த பொழுது கடிதம் என்பது ஊருக்கு போகிறவர்களிடம் மட்டும் கொடுத்துவிடும் ஒரு தேவையற்ற அவசரமற்ற விசயமாகவே மாறியிருந்தது. எனக்கு மாதம் நாலைந்து கடிதம் வருவதையும் நான் எப்பொழுதும் கடிதங்களுக்காக காத்திருப்பதையும் விசித்திரமாக பார்த்தவர்களும் இருக்கிறார்கள், பிறகு எனக்கும் கடிதங்கள் வராமல் போயிற்று என்றாலும் கடிதங்கள் மீதான நம்புதல் எனக்கு மாறவேயில்லை, கடிதங்களை நான் எழுதாமல் விட்டதுமில்லை.அவை பெரும் ஆசுவாசமாயிருக்கின்றன என்பதில் எந்த மாற்றமும் என்னிடமில்லை.

கடிதங்கள் போகவும் வரவும் அதிக காலம் எடுத்தக்கொண்டிருந்த ஆரம்ப காலங்களில் எவ்வளவு எதிர்பார்ப்புகளோடு இருந்திருப்பார்கள் இந்த மக்கள்; மிக மோசமான சம்பளமும் தொலைபேசி வசதிகள் கிடையாத அமைவிடங்களும் என கடிதங்கள் மீதான பற்றுதல் அதிகமாயிருந்த காலம் அது! இரவிரவாக கடிதம் எழுதி அதை வெகு கவனமாக அனுப்பி என இருந்த மனிதர்களை கடந்து வந்திருக்கிறோம். பிறகு கடிதப்போக்குவரத்து விரைவாகிப்போக எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதித்தள்ளி தொடர்ச்சியான தொடர்பிலிருந்த உறவுகள் நிறையவே இருக்கிறது. கடிதங்கள் மூலம் நெருங்கியிருந்த மனங்களைப்போல இப்பொழுது மலிந்திருக்கும் இணையமும் கைத்தொலைபேசிகளும் தருவதில்லை. அவை புரிதலை, நிதானத்தை கணிசமாக குறைத்திருக்கிறதென்றே நம்பத்தோன்றுகிறது.

பிரிவின் துயரை, தனிமையின் வெறுமையை சீரற்ற நாளாந்தங்களை சுகமற்ற சூழலை நாட்களை எழுதியே கடந்த, உணர்ந்த பல உறவுகள் இருக்கிறது சொல்ல முடியாதவற்றைக்கூட கடிதங்கள் மூலமாக சொல்ல முடிந்திருக்கலாம். அறிமுகம் மட்டுமே இருக்கிற பலரது நெருக்கத்துக்கு கடிதங்கள் உதவியிருக்கிறது. சந்திக்கிற தூரத்தில் இருக்கிற ஆட்கள் கூட கடிதங்கள் மூலமே நெருங்கியிருக்கிற கதைகளெல்லாம் இருக்கிறது. நானும் இப்படியான சில கடிதங்களை எழுதியிருக்கிறேன், ஒவ்வொரு நாளும் பார்க்கக்கூடியவர்தான் என்றாலும் கடிதங்கள் எழுதியிருக்கிறோம். அது ஒருவகையில் சுவாரஸ்யமும் நெருக்கமுமானதாய் இருந்தது. இன்னமும் அப்படியான கடிதங்கள் பலரிடம் இருக்கவும் கூடலாம்.


இந்த சந்தர்ப்பத்தில ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது 'அப்பா கதைத்தது' என்று பெயரெழுதப்பட்ட கசட் ( Cassette ) ஒன்று எங்கள் வீட்டில் பல காலமாக இருந்தது.

அப்பருக்கு சரியான குரல்! அவர் கதைக்கிறது ஒரு தனி நடையோட இருக்கும், அனுபவிச்சு கதைக்கிற ஆள் அவர். கதைச்சது என்ன என்பது அவ்வளவாக நினைவில்லாவிட்டாலும் அந்த குரலில் இருந்த உற்சாகம் சந்தோசம் தனிமை சோகம் என இயல்பாக வெளிப்படையாக இருந்த அதன் உணர்வுகள்,பாவங்கள் எல்லாம் எனக்கு அந்த முகத்தை மனதுக்குள் கொண்டு வரக்கூடிய அளவுக்கு இப்பொழுதும் நினைவிருக்கிறது. கம்பீரமான அந்தக்குரல் அறுந்து,உடைந்து சவுதியிலிருந்து அப்பர் வந்தபொழுது எனக்கு பத்து வயதுதான் இருக்கும். அதற்கு பிறகு அப்பரோடு நான் பேசியதே மிகக்குறைவு கடந்த முறை ஊருக்கு போயிருந்த பொழுது பழைய கதைகளை விடுபட்ட குரலில் சொல்லச்சொல்ல கேட்டுக் கொண்டிருந்தேன்


அது ஒரு பின்மதிய நேரம் எனக்கு குடிக்க வேண்டும் போலிருந்தது,அப்பாவிடம் கேட்டேன் தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்(அப்பா முன்பெல்லாம் குடியை அனுபவிக்கத்தெரிந்த ஆள்). உண்மையில் நான் இதை இவ்வளவு தாமதமாக கேட்டிருக்க கூடாது. நான் பெரும்பாலும் அப்பரை குரல் வழியாகவே நினைவில் வைத்திருக்கிறேன் என்பது இப்பொழுது தோன்றுகிறது.நான் செய்யாததும் நிறைய இருக்கிறது.

இப்படி கசட்டுகளில் கதைத்து பதிந்து அவற்றை அனுப்பிய காலமும் இருக்கிறது இது பெரும்பாலும் மத்திய கிழக்கில் இருந்தவர்களுக்கான அனுபவமாகத்தான் இருக்க முடியும் மிக மட்டமான சம்பளத்தொகையும் தொலைபேசி கட்டணங்களின் அளவும் அதுக்கான முக்கிய காரணங்களாக இருக்கலாம்.



என்னைப்பொறுத்த வரையில் கடிதங்களுக்கு வடிவம் அவசியமற்றது அவை துண்டு துண்டாகவோ சின்னக்குறிப்புகளாகவோ எழுத்துப்பிழைகளுடனோ கசங்கியோ கிழிந்தோ எப்படியும் இருக்கலாம். எதையும் எழுதாமல் கூட அனுப்பப்பட்ட கடிதங்களும் இருக்கிறது. "என்ன செய்யப்போறியள்" என்று மட்டும் எழுதி கையொப்பமிட்டிருந்த கறுப்பியின் கடிதம் எனக்குள் நிரப்பிய சொற்களை அதன் சுமையை என்னால் இதுவரையும் எழுதிவிட முடியாத அந்த கடிதத்தின் முழுமைய எவ்வளவு முயன்றும் எனக்கு திருப்தியான பதிலை எழுதிவிட முடியாத (உறங்க விடாத இரவுகளை கொடுத்த மோசமான போதையில் இருந்த இருபத்தொரு நாட்கள் அவை) அந்த கடிதத்தின் சாயலை இதுவரை வேறெந்த கடிதமும் அடையவில்லை. இது வரையுமான என் வாழ்வின் ஆகச்சிறந்த கடிதங்களை அவள்தான் எழுதியிருக்கிறாள்.

பகிர்தலுக்கான அத்தனை சாத்தியங்களும் கொண்டிருந்த, கொண்டிருக்கிற சாதனம் கைப்பட எழுதிய கடிதங்களாகத்தான் இருக்க முடியும் குரல் வழி சொல்ல முடியாத பலதும் கூட, எழுதிவிட தெரிந்த குணமும் அவற்றை புரிந்து கொள்கிற மனமும் முன்பிருந்தது. அவரவருக்கென்று ஒரு மொழி எல்லோரிடமும் இருந்தது. இப்பொழுது எவ்வளவுதான் பேச முடிந்தாலும் அளந்தே பேசுகிறதும் எச்சரிக்கை உணர்வுகளோடுட கதைக்கப்பழகி விட்டிருக்கிறதுமான மிகச்சுருங்கிய மனங்களே இருக்கிறதாய் இணையமெங்கும் பரவிக்கிடக்கிற அனுபவங்களில் காணக்கிடைக்கிற மனிதர்கள் சாட்சியாகிறார்கள்.


கடிதங்கள் எப்பொழுதும் அணுக்கமானவை.அவை நமக்கு தேவையான உறவுகளில் பொருந்தும் தன்மையுடையவை நண்பனாக, அம்மாவாக, காதலியாக,எதிரியாக, முகம் தெரியாத யாரோவாக, கடவுளாக, வன்மத்தை தீர்க்கிற அடிமையாக, முன்பொரு முறை கலந்திருந்த பெண்ணொருத்தியாக என அத்தனை பரிமாணங்களிலும் பொருந்தக்கூடியவை. கடிதங்கள் கட்டாயம் அனுப்பட்டே ஆகவேண்டும் என்பதுமல்ல,பதில் வந்தே ஆகவேண்டும் என்பதும் இல்லை ஆனால் எழுதப்படவேண்டியவை பாதுகாக்கப்பட வேண்டியவை.


இன்றைக்கும் ஒரு அன்பை கடிதத்தில் பகிர்வதில் இருக்கிற அலாதியும் உணர்வும் தருகிற அனுபவம் தனி. அதுவும் வாழ்வின் முதல் காதல் கடிதங்கள் தருகிற அனுபவம் இன்றைக்கு பலர் இழந்து போகிற ஒன்றாகியிருக்கிறது.என்னுடைய முதல் காதல் கடிதம் என்று நான் சொல்லக்கூடிய ஒன்றும் இப்பொழுது என்னிடமில்லை இந்த விசயத்தில் கறுப்பிக்கும் எனக்கும் ஒரு வழக்கிருக்கிறது.கறுப்பிக்கு கடிதம் எழுதுவது இயல்பாக வரும் ஒரு கலை வெந்தயத்தை அடுக்கி வைத்தது போல கொஞ்சம் சரிவான சின்னச்சின்ன எழுத்துக்கள் அவளுடையது.எழுதுகிற அவளை எழுதுகிற சூழலை நிகழாக கொண்டு வந்துவிடுகிற நடை அது. கடிதத்துக்குள்ளே அங்கங்கே குறுக்கிடுகிற குணம் அவளிடமிருந்துதான் எனக்கு வந்திருக்கலாம்.

வாசித்துக்கொண்டு போகையில் "கொஞ்சம் பொறுங்கோ கை வேர்க்குது" என்றெழுதியிருப்பாள் ஊன்றிவைத்திருக்கிற இடதுகையும்,பின்னிவிட்டிருக்கிற கூந்தல் சரியும் நெஞ்சும், குவிந்திருக்கிற வலது கை-விரல்களும் கொஞ்சமாய் வியர்திருக்கிற அவளும் என கிறங்கிப்போகிற அந்த அறையின் வாசனையை கடிதத்துக்குள் கொண்டு வர ஒரே வசனம் போதுமாயிருக்கும்.சில நேரங்களில் ஒரு கையை ஊன்றி சின்னப்பிள்ளைகள் போல குழுமாடு பிடிச்சுக்கொண்டு அவள் எழுதுகிற விதமே நாள் முழுக்க பார்க்ககூடிய நளினமாயிருக்கும்


"கடிதம் இப்பதான் அரைவாசி ஒரு தேத்தண்ணியை போட்டுக்கொண்டு வாங்கோ சேர்ந்திருந்து வாசிக்கலாம்" என்றெழுதியிருப்பாள்: என்னை வேண்டுமென்றே சீண்டுகிற தருணங்களில் ஒரு மாதிரியாகச் சுழிக்கிற உதடுகளும் சிரிக்கிற கன்னங்களும் எழுதமுடியாத அழகில் அசைகிற புருவங்களும் நினைவுக்கு வர... "போடி கறுப்பியென" வாய்விட்டே சொல்லிவிடுவேன்.


"அந்த நைட்டிதான் போட்டிருக்கிறன், மேசையிலை சாஞ்சிருந்து எழுதிக்கொண்டிருக்கிறன்" என்றெழுதி என்னை திணறடிக்கிற வேலையை வெகு சாதாரணமாக எழுதிவிட்டு, ம்ம்... போதும் போதும் கனக்க கற்பனை பண்ண வேண்டாமென அடுத்த வரியிலேயே என்னை திரும்ப கடிதத்துக்கு கொண்டுவரும் வேலையையும் செய்திருப்பாள்.

ஒவ்வொரு கடிதத்திலும் என்னை தனக்கு இன்னும், இன்னும் நெருக்கமாக உணாத்துகிற கடிதங்கள் அவளுடையது.நான் உரிமையுள்ளவன் என்றவள் எழுதாமல் எழுதுகிற கடிதங்கள் அவை. அவளுடைய எல்லா தேவைகளும் என்னைக்குறித்தே இருந்தன அதுவே அவள் இனியெப்பொழுதும் கடிதங்கள் எழுதாதவளாக அகிப்போகவும் காரணமாயிருந்தது.



கடந்து வந்த கடிதங்கள் காலத்தின் பதிவுகள்தான் அவை பாடல்களைப்போல புகைப்படங்களைப்போல ஒரு பெரிய நிகழை அதன் காலத்தை வாழ்வின் உயிர்ப்பான தருணங்களை அனுபவிக்கத்தவறிய கணங்களை உணரத்தவறிய விசயங்களை கொண்டு வந்து தருகிற சாட்சிகளாயிருக்கின்றன. அது யார் யாருக்கெழுதிய கடிதங்கள் என்றாலும் கடிதங்கள் காவாந்து பண்ணவேண்டியவை கைவிடப்பட்ட கடிதங்களின் துயரம் பெரியது. யாருக்கும் அவசியமற்ற கடிதம் என்ற ஒன்றை யாராலும் எழுதிவிட முடியாது யாராலும் எழுதிவிட முடியாது தேவையற்றவை என தவிர்க்கப்படுகிற கடிதங்கள் கூட தொலைக்கப்பட வேண்டியவை அல்ல. தீர்ந்து போன காலத்தின் தீராத சாட்சியங்களாய் கடிதங்கள் இருக்கின்றன.


#
என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு லெட்டர்,
கடிதம் எழுத தேவையானதெல்லாம் ஒரு பெயர்மட்டும்தான் - கற்றது தமிழ்.


#
எழுதிய ஒரே கடிதத்திலும் உன்னை நினைக்கிற நேரங்கள் அந்தரங்கம் நிரம்பியவை என்றெழுதிய பேரின்ப நாயகியின் கலைத்துப்போட்ட எழுத்துக்களால் ஆன கடிதமொன்று இன்னமும் இருக்கிறது.இதை அவள் வேறொரு விதமாக எழுதியிருந்தாள் அது ரகசியம்.


#
எல்லாவிதத்திலும் உங்களுக்கு பிடித்தவளாகவே இருக்க வேண்டும் என்பது என் ஆசை கண்ணா, இதை ஆசை என்பதா தேவை என்பதா anyone. உன்னை முழுவதுமாக நான் நிரம்பவேண்டும், எந்த தடைகளுமில்லாமல் சுதந்திரமாய் உன் ஆக்கினைகளை அனுபவிக்க வேண்டும் - திருகோணமலையில் இருக்கும்பொழுது கறுப்பி எழுதிய கடிதத்திலிருந்து.


#
தம்பி உனக்கு வயது காணும் நீ சின்னப்பிள்ளை இல்லை - அம்மா.


_______________________________________________________________


என்னுடைய வாசனை வருகிற உன் கடிதங்களை வாங்கி வைத்திருந்த
உன்பச்சை நிற பெட்டியை என்ன செய்தாய்
எரித்து விட்டதாக சொன்ன எல்லா கடிதங்களையம் நினைவுக்குள் வைத்திருக்கிறாயா
சாம்பலாகிய கடிதங்கள் ஒரு போதும் நினைவுகளை கரைத்து விடுவதில்லை

நமக்கிடையே உரையாடல் இல்லாதிருக்கலாம்
எனக்கும் உனக்கும் இடையில் எல்லாச் சொற்களும் தீர்ந்து போயிருக்கலாம்

இருந்தும்...

வேறுபக்கம் திரும்புகிற உனது பார்வைகளை சரிசெய்யவோ
எதிர்ப்படுகிற உன் அருகாமையை இலகுவாக்கவோ
இருவருக்குமான அந்தரத்தை தவிர்க்கவோ
இடைவெளியின் நிச்சயத்தை உறுதிப்படுத்தவோ
கடைசிக் கடிதமென்றொன்றை எழுதிவிடு.

இதுவே கடைசிக்கடிதமென்றொரு கதையை
இதுவே கடைசி சந்திப்பென்றொரு நிகழ்வை
நமக்குள் நிகழ்த்த காலத்தை அனுமதி

கடிதங்களை கைவிடுதலும் பிரியங்களை கடந்து போதலும்
செய்து பார்க்க்கூடியவை என்பதில் ஒரு மாற்றுமில்லை அவை
கைவிடுபவர்களை விட்டு நீங்குவதில்லை
என்பதிலும் ஒரு மாற்றமுமில்லை.
___________________________________________


சம்பந்தப்பட்ட குறிப்பு:

எண்பதுகளில் பிறந்தவர்கள் வரைக்குமே கடிதங்களும் கசட்டுகளும் ( Cassette ) உச்ச பாவனையில் இருந்திருக்கிறது. இப்படி நாமே மறந்து போன பழைய விசயங்கள், நான் சேமித்து வைத்திருந்த இவைகள் எல்லாம் பலதும் கைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. என்னுடைய வாழ்வியலிலிருந்தும் என்னை தூர வைத்திருக்கிற காலத்தை சபிப்பதில் என்ன நடந்துவிடப்போகிறது இந்த மிகமோசமான நடைமுறை வாழ்வென்கிற சமூக அமைப்பில்.

______________________________________________

இதனை பகிர்வதற்கான எந்த முகாந்திரமும் சமீபத்தில் நிகழவில்லை என்றாலும் பல நாட்களாக கிடப்பிலிருந்த இதனை பகிர்வதற்கு கீழே இருக்கிற குறிப்பு காரணமாயிருக்கலாம்.

*
சரிசெய்யப்படாமல் கிடந்த மீயுருவை மாற்றிப்பார்த்திருக்கிறேன் ஒழுங்கற்றவைகளின் மீதான ஆர்வம் ஒருபோதும் குறைவதில்லை நமக்கு, இருந்தாலும் தளத்தை சரியாக திறக்க முடியாமல் இருந்த சிரமத்திற்காக இப்படி மாற்றியிருக்கிறேன்.

*
இதை மாற்றித்தரும்படி குண்டம்மாவை கேட்டிருந்தேன் தனக்கு தெரியேல்லை எண்டு சிணுங்கினாள். அது என்னுடைய கடவுச்சொல்லை பயன்படுத்துவதன் அசௌகரியத்தை தவிர்த்தல் என்பது எனக்குத்தெரிந்தாலும் அவளிடம் தனகுவதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தானே செயகிறது- அப்ப பாருங்களன்.

Friday, February 25, 2011

திவ்ய பாரதி - ஒரு எழுதி முடிக்கப்படாத குறிப்பு.



இந்த முகம்..



இந்த கறுப்பு வெள்ளை புள்ளி போட்ட ஆடையில் இதே மாதிரியானதொரு தோற்றத்தில் பிராச்சி தேசாய் once upon a time in mumbai படத்தில் வந்திருப்பார்.





இந்த கண்கள்...





இந்த அழகின் திமிர்..

_________________________________________________________

எனக்குத்தெரிந்த அளவில் இருபத்தியொரு படங்கள், இந்திய ஆண்மனங்களின் கனவுகளில் நுழைந்தது, முன்னணி நடிகர்கள் அனேகரும் தங்கள் படங்களில் நடிக்கவேண்டுமென விரும்பிய ஒரே அழகி, குறுகிய காலத்தில் அதிக வெற்றிப்படங்கள் என வெறும் பத்தொன்பதே வயதில் செத்துப்போன திவ்யபாரதியின் மறைவு இன்றைக்கும் மர்மமானதாகவே இருக்கிறது.

வசீகரங்களின் அசாதாரணமரணம் எப்பொழுதும் புதிர் நிறைந்தாகவே இருக்கிறது ஷோபா சில்க் என்று தமிழ் மனங்களை கொள்ளையடித்திருந்த அழகிகளின் சாவு அழுத்தமானவைதாம்.
சாவு மறைந்துவிடுகிற மரணம் இவர்களுடையது காலம் எதிர்பாராமல் பிரபலமாகிவிடுகிற இந்த முகங்களின் நிலைத்தல் அசாத்தியமானது.


திவ்யபாரதியை அவர் சாவதற்கு முன் நான் திரையில் பார்த்ததே இல்லை என்றாலும் இன்றும் ஹிந்தி சினிமா ரசிகர்களின் மனதில் அவருக்கான இடம் இருக்கிறது என்பதுதான் உண்மை. இப்பொழுது இருக்கிற நடிகைகளை தெரிகிறதோ இல்லையோ திவ்யபாரதியை அனேகம்பேருக்கு தெரிந்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையில் சிங்கள நண்பர்களுக்கு திவ்யபாரதியை நனக்கு தெரிந்திருக்கிறது. இலங்கையைப்பொறுத்த வரையில் தமிழர்களைவிட சிங்களவர்களுக்கு ஹிந்திப்படங்கள் குறித்து அதிகம் தெரிந்திருந்தது. ஹிந்திப்படங்களை அதிகம் பார்க்கிறவர்களாக சிங்களவர்களே இருந்திருக்கிறார்கள்.





தற்செயலாகத்தான் இந்தப்பாடலை பார்க்க நேர்ந்தது அதற்கு பிறகே இவரைக்குறித்து தேடிப்பார்த்தேன் வெறும் பத்தொன்பதே வயதில் இறந்து போனர்,அது ஒரு துர்மரணமாய் இருந்தது. அத்தோடு இதேபொல முன்பொரு முறை சில்க் நடித்த ஒரு பாடலின் மூலம் அவரைக்குறித்து தேடிப்பார்த்தபொழுது அதே நாளில் பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர் இறந்திருந்தார் என்று தெரிய துணுக்குற்றுப்போனேன். அங்கே நான் எழுதிய சின்னக்குறிப்பை இன்னொரு நண்பர் பகிர்ந்திருந்தார்.அது அந்த வருடத்தின் சில்க் குறித்த முதல் பகிர்வாய் இருந்தது.


இப்பொழுதும் இரண்டு நாட்களுக்கு முன்னர் திவ்யபாரதியை தேடிய பொழுது அவர் பிறந்தது feb 25 என அறிந்து கொண்டேன். அப்பொழுதுதான் பத்தொன்பதுக்கு வந்திருந்த திவ்யா சாகும் பொழுது கைவசம் ஏறக்குறைய பன்னிரண்டு படங்களை வைத்திருந்திருக்கிறார். 16வயதில் சினிமாவுக்குள் வந்து ஆக மூன்றே வருடங்களில் அதிகம் படங்களை தன் வசம் எடுத்துக்கொணட்ட திவ்யபாரதிக்கு தொழில் முறை எதிரிகள் கூட இருந்திருக்கலாம்.

மிக வெளிப்படையான இந்த அழகின் மரணம் ஒரு பின்னிரவில் நடந்திருக்கலாம். நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் இந்த குறிப்பை எழுதி முடித்திருக்கும் இந்த நேரத்திற்கு முன்பாக. மக்களை கவர்ந்துவிடுகிற மரணங்கள் ஒரு வித துர்க்கனவாகவே இருக்கின்றன. இந்தக்குறிப்பும் ஒரு துர்க்கனவின் குறிப்பே.


Divya Bharti:

பிறந்தது 25 february 1974 மும்பை.

மறைந்தது 05 April 1993 மும்பை.

Monday, February 21, 2011

சினிமா - சில உதிரிக்குறிப்புகள்.

நீங்கள் எப்போதும் புது முகங்களைத் தேடுகிறீர்கள் பெரிய ஹீரோக்கள் நீங்கள் கேட்டால் வர மாட்டார்களா என்ன ?

ஹீரோக்கள்- அவர்கள் எல்லாம் செய்து சாதித்து முடித்துவிட்டது போல இருக்கிறார்கள். இமேஜ் பார்க்கிறார்கள்.இமேஜ் என்பதை தூக்கி எறிந்துவிடக்கூடிய எந்த ஹீரோவுடனும் நான் பணியாற்றத் தயாராக இருக்கிறேன், சினிமா என்பது விளையாட்டு அல்ல என்பதை உணரும் எந்த நடிகரும் என்னோடு பணியாற்ற தகுதியானவர்தான். -


ஆனந்த விகடனின் ஏதோ ஒரு பேட்டியில் இயக்குனர் Anurag Kayshap.



இந்த பதிலுக்கு கச்சிதமாகப் பொருந்துகிற ஹீரோ Abhay Deol நான் பார்த்த இவருடைய முதல் படம் தேவ் டி தான்.அதற்கு பிறகு சில படங்களை பார்க்க வேண்டும் என்று பார்த்திருக்கிறேன். கடைசியாக பார்த்த இவருடைய படம் DevBenegal இயக்கிய Road,Movie. இரண்டு பெயர் போல இவருடைய மற்றைய படங்களுக்கும் பெயர்கள் அப்படித்தான் இருக்கிறது. பல நாட்கள் பார்க்காமல் இருந்து கடந்த வாரம்தான் பார்த்திருந்தேன். வெகு குறைவாகவே மக்கள் பயன்படுத்துகிற ஒரு தனித்த பாதையில் நெடுந்தூர பயணம் ஒன்றில் சந்திக்கிற நாலுபேரைக் குறித்தது இந்தப்படம்.

தகப்பனின் எண்ணெய் வியாபாரத்தை விரும்பாத நடுத்தர வர்க்கத்து கனவுகளை கொண்டிருக்கிற ஒருவன் அதிலிருந்து தப்புவதற்காக கிடைக்கிற சந்தர்ப்பமாக முன்னாளில் ஒரு நகரும் திரையரங்காக இருந்த ஒரு பழைய ட்ரக் வாகனத்தை வெகு தொலைவில் இருக்கிற நகரத்திற்கு கொண்டு செல்ல சம்மதிக்கிறான். அந்த பயணத்தில் அவன் சந்திக்கிற மனிதர்களும் சம்பவங்களும், முடிவில் அவன் தன்னை கண்டுகொள்வதுமாக கதை சொல்கிறது படம். தண்ணீரைத்தேடி அலைகிற ஜனங்களை கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறுமனே வெளியாக கிடக்கிற இந்த பூமியை பார்க்க பயமாக இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த உலகம் தண்ணீரோடு இருக்கும்? எனக்கென்னவோ இந்தப்படத்தில் என்னை பாதித்தது தண்ணீர்தான். உலகம் எவ்வளவு விசயங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மனித விழுமியங்களில் எவ்வளவு தாக்கங்களை உண்டு செய்கின்றன. உண்மையில் பயணங்கள் கற்றுத்தருகின்றன.


கடந்த சில வருடங்களாக திரையுலகில் இருந்தாலும் சில நல்ல படங்களை நடித்திருந்தாலும் இன்னும் ஒரு புது நடிகரைப்போலவே ஆர்வமாய் இயங்குவது அபய்டியோலின் பலமாய் இருக்கலாம். இவரின் பெரும்பாலான படங்கள் இந்தியத்திரையுலகின் வழமையான கதாநாயகத் தனங்களோடு பொருந்துவதே இல்லை. அதுவே இவரை நல்ல நடிகராக காட்ட போதுமானதாய் இருக்கிறது . தேவ்-டி படத்தின் தேவ் பாத்திரத்தை செய்வதற்கு இமேஜ் போன்ற ஒளிவட்டங்கள் இருக்கிற நடிகர்களால் முடியாது. இவர் நடிக்கிற பாத்திரங்களை தமிழில் இருக்கிற நடிகர்கள் நடிப்பதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ தெரியாது. கதா நாயக வழிபாடும் பால் ஊத்துகிற ரசிகனும் இருந்தால் எப்படி நடக்கும்.


குஷாரிஷ் (Guzaarish)

Sanjai Leela Bansali செய்திருக்கிற இந்த படத்தை என்ன வாழ்க்கை இது, என்ன் செய்து கொண்டிருக்கிறேன் நான் என்கிற ஒரு சினம்பிடித்த மனோநிலையோடு சரியில்லாத உடம்பு நிலையில் பின்னிரவொன்றில் பார்க்கத்தொடங்கினேன். படத்தின் பாதி போகிற வரைக்கும் கூட என்னிடம் பெரிய ஒன்றுதல் எதுவும் இருக்கவில்லை.ஆனால் படம் எடுத்திருந்த விதம் என்னை தொடர்ந்தும் அதனை பார்க்க வைத்தது என்றே நினைக்கிறேன் ஒளிப்பதிவு அல்லது ஒளியை திரையில் பயன்படுத்துவது என்கிற விசயத்தில் இந்த இயக்குனரின் ரசனை நுட்பமானது அது அவருடைய மற்றைய படங்களிலேயே உணரமுடியும் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனை முழுமையாக பயன்படுத்தியதும் இவர் என்று கூட சொல்லலாம். பிளாக் (Black) மற்றும் சாவரியா படங்கள் அதற்கு சாட்சியாகலாம். படம் தொடங்குகிற அந்த முதல் நொடியே படத்தின் நேர்த்தியை சொல்கிறது .


குறைவான ஒளியிலேயே கண்கள் பிரகாசமாய் இருக்கிறது. அது போல திரையில் ஒளியை அளந்து வைக்கிற நுட்பம் காட்சி ஊடகத்துக்கு மிக முக்கியமானது என்றே நினைக்கிறேன். ஒரு மஜிக் கலைஞனின் கண்கள் ஒளி நிரம்பியவை அவனது வாழ்வு குறித்த திரையில் கமராவையும், ஒளியையும் சரியான விகிதத்தில் பயன் படுத்தியிருக்கிறதாய் நான் நம்புகிறேன். ஒரிஜினல் டிவிடியில் அல்லது திரையில் காண்கையில் அனுபவிக்க முடியும் இந்த ஒளிப்பதிவின், தொழில் நுட்பத்தின் விசாலத்தை.


உடம்பில் தலையைத்தவிர வேறெதையும் அசைக்க முடியாத மஜீஷியன் ஒருவனது வாழ்வை, வாழ்வின் மீதான காதலை சொல்கிற படத்துக்கு இயக்குனர் தெரிவு செய்திருந்தது ஹிருத்திக் ரோஷனை. ஹிந்தி தி ரையுலக நடிகர்களின் எண்ணிக்கையோ அல்லது வருகிறவர்கள் ஒவ்வொருவரும் மற்றொருவரை மிஞ்சுகிற அளவுக்கு இருப்பதிலோ என்னவோ ஹிருத்திக் முந்தையை படங்களில் இருந்து ஒரு பாய்ச்சலே நடத்தியிருக்கிறார் அவருடைய உடல் மொழியிலும் பார்க்க அந்த குரலில் இருக்கிற உணர்வு போதுமானதாயிருக்கிறது. இந்தக்கதையைப் பொறுத்தவரையில் ஹிருத்திக்கின் உடல்மொழியும் குரலும் பொருந்திக்கொள்கிறது. அது அந்த பாத்திரத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. முன்னாள் மெஜிக் கலைஞன் ஒருவனது தன் கருணைக்கொலைக்கான மனு குறித்த உரையாடல், நினைவுகள், துணைச்சம்பங்களோடு பயணிக்கிற கதையில். அவரை பராமரிக்கிற அழகான தாதியாக வருகிறார் ஐஸ்வர்யா, ஹா... அவர் வெறும் அழகி மட்டுமல்ல. சொல்லியே ஆகவேண்டிய ஒன்று ஐஸ்வர்யாவை சரியாக பயன்படுத்திய இயக்குனர்களில் இவரும் ஒருவர். இந்த நேரத்தில் நீங்கள் எந்திரனை நினைத்தால் உங்கள் மீது இடிவிழுக.ஐஸ்வர்யா இன்னும் குறைந்தது பத்து வருடங்களுக்கு நடிக்கலாம். படத்தில் ஹிருத்திக் சொல்வது போல இப்படி ஒரு Nurse இருந்தால் எப்படி?!



வாழ்வை இருப்பை குறித்த கேள்விகள் இருக்கிற மனங்களை கவரக்கூடிய படம். நிற்கவிடாமல் துரத்துகிற பணம் பின்னால் ஓடுகிற வாழ்வில் சில இடைத் தங்கல்களைத்தானும் கண்டிராத மனங்களுக்கு சலிப்பாயிருக்கலாம் இந்தப்படம். the Sea inside படம் குறித்த பகிர்வுகள் வாசித்திருந்ததன் மூலம் இந்தப்படம் பார்க்கையில் எனக்கு அந்தப்படத்தின் ஞாபகம் வந்து போயிற்று. படம் பார்த்து முடித்த பொழுதில் Facebookல் எழுதிய சின்ன் குறிப்பு பின் வருமாறு.
//Guzaarish - a hindi film by Sanjai Leela Bhansali : எனக்கிருந்த மனோநிலையோ என்னவோ படத்தின் கடைசி நிமிடங்களில் கரைந்து போனேன்.நெடு நாட்கள் இல்லாத கண்ணீர் ஏதோ காரணங்களுக்காக மனதார செலவாகியிருந்தது. வாழ்க்கை ரொம்ப சின்னது நண்பர்களே மன்னிப்பதற்கு தயங்கவே வேண்டாம், சிரிப்பதற்கு கிடைக்கிற எந்த சந்தர்ப்பத்தையும் இழந்துவிடாதீர்கள்.

Sau gram z...indagi yeh
Sambhaal ke kharchi hai - from the movie//


Life is very short my friends... but it's long enough if you live with all your heart. so , go on break the rules, forgive quickly, love truly and never regret anything that made you smile.


Dhobi Ghat:

அமீர்கான் தயாரிப்பில் அவருடைய மனைவி இயக்கி வெளிவந்திருந்த இந்த படத்தை போன வியாழனன்று பார்த்திருந்தேன்.இப்பல்லாம் ஹிந்திப்படம் பாக்கிறதுக்கு ஆங்கிலம் அநியாயத்திற்கு தேவைப்படுகிறது. படம் கிளைத்தன்மைகளோடு பயணித்தாலும் தொகுப்பில் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிற திரைக்கதையாக உணர்கிறேன். சின்னசின்னதாய் ரசிக்க விசயங்கள் இருக்கிறது. பின்னணியில் வருகிற அந்த பாடல்களின் இசை எனக்கு பிடித்திருந்தது. அவள் தனியாகவும் அவன் அந்தப்படத்தையும் வரைகிற பொழுதுகளில் இருவருக்கும் இடையில் இருக்கிற உணர்வு ஒரே நேரத்தில் அதனை திரையில் காட்சிப்படுத்திய இயக்குனரின் தனித்தன்மை.அமீர்கான்,மோனிக்காவின் உடல் மொழி.அமீர் அந்த சாவை கண்டுகொண்டபின் அந்த இரவில் முடிகிற காட்சி, வண்ணம் கலையாத கைகளோடும் அந்த செயினோடும் கடற்கரையில் அமர்ந்திருப்பதாய் தொடர்வதும், இந்தக்காட்சியில் யாஸ்மின் கடலைக்குறித்து முன்னர் பேசிய வசனங்கள் நினைவுக்கு வருவதும் அவற்றின் கவித்துவமாய் இருக்ககலாம். அந்த கமாராவில் கதை சொல்லுகிற பெண்ணும் அந்த குரலும் படம் முடிந்த பிறகும் கேட்டபடியும் அலைந்தபடியும் இருப்பது.படத்தின் வசனங்களும் அளவாய் போதுமாய் இருந்தன. படம் நல்லாயிருந்தது என்பதை இப்படி சொல்லத்தெரியாமல் சொல்லுறதும் ஒரு இருக்கப்படாத குணம்தான்.
அமைதியான மனோநிலையை தரக்கூடிய அமைதியான படம்.

__________________________________________________

பல நாட்களாகியும் எழுத முடியாமல் போன இந்த குறிப்பை எழுத தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகிறது. அடுத்த நகர்வுக்கு முன்னதாக இது ஒரு உதிரிக்குறிப்பாய் இருக்கட்டும். ஒழுங்கே இல்லாத சப்பென்ற இந்த குறிப்பை கிடப்பில் போடுகிற ஒவ்வாமையை தவிர்ப்பதற்காக இங்கே பகிரப்படுகிறது.

ஒரு குறிப்பை எழுதவே நேரம் கிடைக்கவில்லை buzz, twitter, blog, Facebook என எப்படித்தான் நேரம் ஒதுக்க முடிகிறதோ உங்களுக்கெல்லாம்?

Tuesday, November 2, 2010

போர் தின்ற சனங்களின் கதை - ஒரு பகிர்வு.






"மரணம் தன் சார்பாக எதையாவது விட்டுச்செல்லவே விரும்புகிறது. துயரம்,அழுகை, நினைவுகள் இப்படி எதையாவது தொடர்ச்சியாக நம்மிடையே விட்டுச் சென்றுவிடுகிறது. "சாட்டில்லாமல் சாவுகிடையாது" என்ற பழமொழி மாதிரி ஒன்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லோரும் வாழ்ந்துவிடவே துடிக்கிறோம். இந்த உலகத்தின் அத்தனை சுவைகளையும் நுகர்ந்து முடித்துவிட்ட பின்னரும் ஜப்பான் நாட்டுக்காரன் மாதிரி நூறுகளைத்தாண்டிய கனவுகள் நம்மிடையே எழுந்து கொண்டுதானிருக்கின்றன.

மரணமும் அது குறித்தான பயமும் அறியப்படாத ஒரு ரகசியச்சுவை போல நம்மிடையே கலந்திருக்கிறது.யாரும் தாண்டி விட விரும்பாத சுவரைப்போலவும்
."


ஒரு புத்தகத்தைப்பற்றி எழுதுவதென்பது எனக்கு வராத ஒரு விசயம் அந்த அளவுக்கு எனக்கு எழுதத்தெரியாது அல்லது வாசிக்கத்தெரியாது அதனாலேயே வாசித்த புத்தகங்கள் எதைக்குறித்தும் எழுதத்தலைப்படுவதில்லை. ஒரு புத்தகத்தை அதை எழுதியவரிடமிருந்தே அதுவும் மனதுக்கு மிக நெருக்கமான கதைசொல்லி ஒருவரிடமிருந்து அவரெழுதிய புத்தகமொன்றை பெற்றுக்கொள்கிற பொழுதில் பள்ளிக்கூட மேடையில் பரிசு வாங்குகிற ஒரு சிறுவனாகவே இருந்தேன்.ஆனால் அந்தக் கதைசொல்லியோடு குடிக்கிற அளவுக்கான நெருக்கம் இருந்தது.(சும்மா ஒரு புழுகம்தான்)

இந்த இணையம் தந்த அனுபவங்களில் என்னுடைய ரசனைகள் மாறியிருப்பது மட்டும்தான் உண்மை. மற்றும்படி அரசியல் தத்துவ இலக்கிய நிலைப்பாடுகளில் நான் ஒரு வெறுங்குடம் சும்மா கனக்கத்தெரியும் என்பதாக காட்டிக்கொள்கிற ஒரு சராசரி மாணவன் மட்டுமே.

முதல் பதிப்பிலிருந்தே கிடைக்காமல் நழுவிக்கொண்டிருந்த மரணத்தின் வாசனையை அதன் மூன்றாம்பதிப்பின் புத்தகமொன்றை ஒரு பெருநகர மழைப்பொழுதின் மதிய உணவு நேரத்தில் அகிலனிடமிருந்து வாங்கிக்கொண்ட தருணத்தில் என் தளத்திலிருக்கிற அகிலனின் பக்கத்துக்கான சுட்டியும்,அகிலனோடு உரையாடிய சில பொழுதுகளும், ஏற்கனவே வாசித்திருந்த சில கதைகளும்நினைவுக்கு வந்து போயின. நான் ஒரு தவிப்போடு அந்த புத்தகத்தை வாங்கிக்கொண்டேன். புத்தகத்தை குறித்து பகிரவேண்டும் என சில கதைகளை அகிலனதும் சயந்தனதும் தளங்களில் படித்த பொழுதே நினைத்திருந்தேன். இருந்தாலும் புத்தகமாய் கையில் வைத்து வாசித்த பிறகே பகிர வேண்டும் என்கிற ஒரு ஆசையோடு அந்தக்கதைகளைக் குறித்து எதையும் பகிரவில்லை.

இப்பொழுதும் இந்தப்புத்தகம் குறித்து பகிர எனக்குத்தெரியவில்லை ஆனால் அந்தக்கதைகள் எனக்கு நெருக்கமாயிருந்தன அந்த மொழி எனக்குரியதாய் இருந்தது. ஈழத்தின் நிச்சயமற்ற நாட்களையும் நிரந்தரமற்ற வசிப்பிடங்களையும் கொண்ட ஒரு சூழலில் வாழ்கிற ஒரு பெடியனுக்குள்ளே இவ்வளவு உயிர்ப்பான நினைவுகள் இருக்கிறதென்பது அவனுடைய வாழ்வு குறித்த இயல்பான நெகிழ்தலை காட்டுகிற முக்கியமான விசயமாகத்தான் தெரிகிறது. சினிமாத்தனமான நட்புகளும் உண்மைத்தன்மையே இல்லலாத வெறும் நாட்களையும் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த இளைய சமுதாயத்திற்கு இவ்வளவு நினைவுகளை சுமந்தலைகிற,அவற்றை கோர்வையாக சொல்லத்தெரிகிற ஒரு கதை சொல்லி கிடைப்பது எவ்வளவு பெரிய விசயம். இதே போலவொரு உணர்வை ஷோபாசக்தியும் கொடுத்திருந்தார் அனால் ஆனால் அது கொஞ்சம் மாறு பட்டதாய் இருந்தது அது குறித்து பின்னர் பேசலாம்.


ஒரு கதைக்குள்ளாகவே என் காலம் முழுவதையும் மீட்டுக்கொண்டு வந்து தந்திருந்தார் அகிலன்.அந்தக்கதை "நீ போய்விட்ட பிறகு".(இது காயத்திரி நீ போய்விட்ட பிறகு என்று சயந்தனின் தளத்தில் வாசித்த கதை). புத்தகத்தை வாசிக்கையில் ஏதோ ஒரு கதையில் அல்லது சில கதைகளில் இந்த அனுபவம் பலருக்கும் கிடைத்திருக்கலாம். ஆனால் என்ன இத்தனை உயிர்ப்பான அந்த மொழி ஒரு சாவைக்குறித்துச் சொல்லுகிற கதையில் இருக்கிறதென்பதுதான் வலிக்கிற உண்மை. உண்மை எப்பொழுதும் ஏதோ ஒரு வகையில் நெருடுவதாகவே இருக்கிறது அது விருப்பத்துக்குரியதாயிருந்தாலும்.

"காயத்திரி நான் இழந்து போன எல்லாவற்றையும் ஈடு செய்யக்கூடிய ஒரு தேவதையாய் உன்னைக்கண்டேன்"
யுத்தம் அவனிடமிருந்து பறித்த அனையும் மறக்கச்செய்கிறதாக இந்த காதல் அவனுக்குள் இருக்கிறது.தயக்கங்களோடு பகிரப்படாமல் வைத்த காதல் ஒன்றிற்குரிய தேவதையின் சாவு வெறும் நாலே வரிகளில் மின்னஞ்சலாக கிடைக்கிற துயரம் எவ்வளவு அழுத்தமானதாய் இருக்கக்கூடும் அந்த காயத்ரி குறித்த நினைவுகள் எனக்குள் செய்து போன சலனம் அடங்காமல் இருக்கிறது இவ்வளவு அணுக்கமாக இதை எழுதியிருக்க வேண்டாம் அகிலன். காலம்தான் எவ்வளவு கொடியது அதனிலும் இந்த யுத்தம்தான் எவ்வளவு கொடியது எங்களின் காலத்தை தின்று சாவை மட்டுமே தந்திருக்கிறது. போர் எங்களுக்கு வாழ்வைத்தவிர மற்றெல்லாவற்றினதும் துயரங்களை மட்டுமே விட்டுச்சென்றிருக்கிறது.


அப்பாவை சித்தியை நண்பனை தெரிந்தவரை தேவதையை கோவிலை செல்ல நாய்க்குட்டியை ஆசை மிளகாய்கண்டுகளை என யாரையும் எதையும் விட்டுவைக்காத இந்த மரணம் அவர்களிடத்தில் திணிக்கப்பட்டதாய் இருந்தது சாவு தவிர்க்க முடியாததுதான் என்றாலும் அவற்றை ஏற்றுக்கொள்கிற மனோநிலை அனேகம் இயல்பான மரணங்களுக்கே கிடைப்பதில்லை சுடவும் உயிரைப்பறிக்கவும் மட்டுமே தெரிந்த துப்பாக்கிகளும் குண்டுகளும் தீர்மானிக்கிற அவர்களின் மரணங்களை எப்படி ஏற்றுக்கொள்ளும் இந்த மனது.


கதைமனிதர்களின் வாழ்விடமும் பழக்க வழக்கங்களும் என்னைச் சார்ந்தவையாயிருந்தாலும் அகிலன் சம்பவங்களை சொல்கிற மொழியும் அவற்றை கோர்வையாக்குகிற லாவகமும் இயல்பான பக்கத்திலிருந்து கதைக்கிறது மாதிரியான வெகு இலகுவான நடையும் அந்தக்கதைகளுள் நுழையவும் அந்த மனிதர்களோடு ஒன்றிவிடவும் செய்கிறது. நம்மையும் அந்த மனிதர்களுள் ஒருவனாக உணரக்கூடியதாக அந்த கதைகள் இருந்தன. உண்மைதான் அகிலனோடு இருந்து கதைத்த அந்த சில மணி நேரங்களில் அகிலனுடைய மொழிக்கும் பேச்சுக்கும் பெரிதான வித்தியாசங்களை என்னால் உணர முடியவில்லை. உண்மையில் அந்த சில மணித்தியாலங்கள் எனக்கு போதவே போதாமல் இருந்தது. மிக நெருக்கமான நண்பனொருவனை சில காலத்துக்கு பின்னர் ஒரு பயண இடைவெளியில் சந்தித்தது போலத்தான் உணர்ந்தேன் பேசவும் பகிரவும் நிறைய இருந்தும் மச்சான் சந்திப்பம் என்றுவிட்டு வந்த ஒரு தவறவிட்ட பொழுதாகவே உணர்ந்தேன். இந்த நிர்ப்பந்திக்கப்பட்ட நாட்கள்தான் எத்தனை கசப்பானவை உண்மையில் அது ஒரு பயணத்துக்குரிய நாளாகவே இருந்தது நான் விடுமுறையிலிருந்து திரும்புகிற அந்த கடைசி நாளின் மதிய வேளையில் கொழும்பில் அகிலனை சந்தித்திருந்தேன்.

பலருக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் அந்தக்கதைகள் பேசுகிற விசயங்கள் இலங்கையின் அரசியல் குறித்தும் யுத்தம் குறித்தும் முன்வைக்கிற கேள்விக்குறிகள் எல்லாம் மரணங்களுக்கிடையில் வாழ்ந்த அனேகம்பேரிடம் ஒரு முறையாவது உள் மனதிலிருந்து வந்திருக்க கூடியவை என்பதே உண்மை. அகிலன் என்கிற ஒருவனிடமே இத்தனை கதைகள் இருக்கையில் சொல்லப்பட்ட சொல்லப்படுகின்ற அல்லது சொல்லப்படாமலே இருக்கிற போர் தின்ற சனங்களின் கதைகள் இன்னும் எவ்வளவு இருக்கலாம்.

முப்பதாண்டு கால, உண்மையில் முப்பதாண்டு காலம்தானா? இந்த வரலாறு,இந்த அரசியல், இந்த யுத்தம் தந்த சாவுகள் எல்லாம் அது சம்பந்தப்பட்ட எல்லா மனிதர்களிடமும் பல விதமான கேள்விகளை விட்டுப்போயிருக்கலாம் ஆனால் அவை எல்லாவற்றுக்கும் விடைகள் ஓரிடத்திலேயே இருந்தும் இன்னமும் கிடைக்காமலே இருக்கின்றன.


"இந்த இரவில்
திகிலுடன் தொடங்குமிந்த
துயர்க்கனவின் வேர்கள்..
ஒரு பதுங்குகுழியில் இருந்து முளைத்தது.
சல்லடை போடப்பட்ட
ஒரு சாப்பாட்டுப் பீங்கானில்
இன்னும் மீதமிருக்கிறது..
உலர்ந்து போன பருக்கையொன்று..
இன்றைக்குப் புதிய திசைகள்
புதியகாடுகள்..
புதிய பட்டினங்கள்
ஆனாலும் துயரங்கள் பழையவைதான்..

துப்பாக்கிகள் எல்லாக்கைகளிலும்
ஓரே வேலையைத் தான் செய்கின்றன..
துப்பாக்கிகள் தீர்மானிப்பதில்லை
கரங்கள்தான்..

எங்களுக்குச் செய்யவும் சொல்லவும்
ஏதுமில்லை
எங்களை வைத்து
அதிகாரங்கள் செய்ய
அடிமைசெய்ய
அரசியல் செய்ய
முடிந்தால் பிச்சையெடுக்கவும்
ஆட்களிருக்கிறார்கள்..
ஆனால்
எங்களுக்குத்தான் செய்யவும் சொல்லவும்
ஏதுமில்லை"


- அகிலனின் கனவுகளின் தொலைவு தளத்திலிருந்து.



இங்கே சொல்ல முடியாத இன்னொரு கதை -
புத்தகத்தின் முதல் பதிப்பின்பொழுது தன்னுடைய மகிழ்தலை பகிர்ந்து கொண்ட அகிலனின் தம்பி அன்பழகனுக்கு சமர்ப்பணமாகியிருக்கிறது இந்த மூன்றாம் பதிப்பு.அந்த தம்பியையும் அதே துப்பாக்கிகள்தான காவு கொண்டிருக்கிறது .

Friday, February 5, 2010

மஞ்சள்வெயில் மற்றும் சில சொற்கள்...



"நான் என்ன செய்வேன் ஜீவிதா...உங்கள் மெலிந்த உருவமும் வட்டச்சிறு முகமும், வராண்டாவில் நடக்கும்போதான புடவைச்சரசரப்பு, அசைவுகள், புன்னகை, பார்வைகள், வார்த்தைகள் எல்லாம் நெடும்புதர்களாகச் செழித்துக்கிடக்க நான் அதன் ஊடேதான் குழந்தையைப்போலவும் ஞானியைப்போலவும் நடந்தேன். இந்த சந்தோஷ நேரத்திற்கு, எனக்கு நான் மிகப்பெரியவனாகத் தோற்றமளிக்கிற இந்த தருணத்திற்கு, அன்பு சுரந்து ததும்புகிற இந்தப்பிரகாச நிலைக்கு, எல்லையற்று விரிந்து விகாசங்கொள்ளும் மனநிலைக்கு, பாடுகள் அத்தனையலிருந்தும் விலக்கிவைத்த பேருன்னத ஏந்துதலுக்கு என்றைக்குமாக உங்களுக்கு நன்றி."

தனிமையின் அலட்சியமான வாழ்நாட்களோடு அலைகிற கவித்துவமும் கழிவிரக்கமும் கலந்திருக்கிற மெல்லிய மனதுக்காரன் ஒருவனின் காதல் பெண்ணொருத்தியை பற்றிய சிலாகிப்பு யூமாவாசுகியின் மஞ்சள் வெயில்.

காதல்தான், காதல் பெண்மைகள்தான் வாழ்வின் அத்தனை பரவசங்களையும் திறந்து விடுகின்றன என்பதுதான் எத்தனை உண்மை! அதே நேரம் காதலின் மற்றய பக்கங்கள் தருகிற விளைவென்பது மிக இருளடர்ந்திருப்பதை சொல்லாமல் விடவும் முடியாது. அதீதமான வெளிப்பாடுகள்,வேற்று மனோநிலைகள் அனைத்தும் இயங்குகிற-இயங்காமல் போகிற போன்றதான தருணங்கள் என காதல் பெண்மை தருகிற அனுபவங்கள் அனுபவிக்கப்பட வேண்டியவை.பிறழ்வு நிலைக்கு இட்டுப்போகிற காதலின் சுகத்தையும், தவிப்பையும்,வலியையும் பேசுகிற தோற்றுப்போனதொரு காதலை; கவிஞன் ஒருவனது மொழியில் எழுதிய ஞாபகங்களின் தொகுப்பென பெருங்கடிதமாய் விரிகிற மஞ்சள்வெயிலை பின்னிரவு தாண்டி ஒரே மூச்சில் படித்து முடிக்கையில் குடிக்கவேண்டும் போலிருந்தது.


கதையில் வருகிற அத்தனை மனிதர்களும் தூக்கம் வராத அந்த மிகுதி இரவில் திரும்பத்திரும்ப வந்து போனார்கள். படித்து முடித்த சில நாட்களுக்கு பிறகொரு காலையிலும் ஜீவிதாவும் நாய்க்காரச்சீமாட்டியும் கனவில் வந்து போனார்கள் விழிக்கையில் கதிரவனின் படுக்கைக்கு மேலே தொங்கிய ஒற்றைச்செருப்பு கண்களுக்கெதிரே தொங்குவதாய் உணர்ந்தேன்.

இப்போதிலிருக்கிற மனோநிலைக்கும் காதல் குறித்தான கருத்துகளுக்கும் கொஞ்சம் அதிகப்படியானதாய் எனக்கு தோன்றினாலும்; அதே பைத்தியக்காரத்தனங்களோடு அலைந்த நாட்களை நினைவு படுத்துவதும், உணர்வைக்கடத்துகிற மொழி மனதைப்பிசைவதும் புத்தகத்தை படிக்க போதுமானவையாயிருக்கிறது. யூமாவின் மொழி பிடித்துப்போகவும இதுவே. கல்யாணமானவர்கள், ஆகாதவர்கள், இன்னும் காதலை ஒரு முறையேனும் உணராதவர்கள் என்று எல்லோரும் படிக்கலாம் பழைய பரவசங்களுக்கும் உள்ளே இருக்கிற மனதின் தடுமாற்றங்களுக்கும் நிச்சயமாய் ஒரு வரியேனும் இருக்கிறது புத்தகத்தில். எத்தனை காலம் கடந்து போனாலும் ஜீவிதாக்களும் கதிரவன்களும் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.

பகிராலம் என்று புத்தகத்தின் படத்துக்கான தேடுதலில் கிடைத்த மஞ்சள் வெயில் பற்றிய தமிழ்நதியின் பதிவு.



சில நாட்களுக்கு முன்பான இரவு நேரப்பணிநாளொன்றில் எழுதிப்பார்த்த சொற்கள்.

ஒரு காதல் குறித்து-

காலம்,
காற்றிடம் கிடைத்த குறிஞ்சா பஞ்சென
என்னை கைப்பறியிருந்தது,
பனி விழுகிற நாளொன்றின்
பின் மதியத்தில் சிறகுகளோடு அறையில் நுழைந்த நீ
நான் முன்னெப்பொழுதும் அறிந்திராத ஒரு உலகத்துக்கு
என்னை அழைத்துப்போனாய் - அஃது
உன்னைப்போலவே மிக அணுக்கமானதொரு
அற்புதமானதாய் இருந்தது,
வெளிச்சமற்ற சில பகல்களுக்குப்பிறகு
நட்சத்திரங்களற்ற ஒரு இரவில்
காத்திருப்புகள் பற்றிய ஒரு கதையை சொல்லிக்கொண்டிருந்தாய் நீ
அந்த இரவிலிருந்து ,
நான் பெயரறிந்திராத மலை ஒன்றில் வசிக்கப்போவதாய்
பதினேழு முறைகள் சொல்லியிருந்தாய்,
நீயொரு பரம்பரைகளின் பெயர் சுமந்தலைகிற நதியென ஓடிக்கொண்டிருப்பதாய்
பருவ மாற்றங்களின் பிறகு பறக்கிற சிட்டுக்குருவிகள் சொல்லிப்போயின
நீ விட்டுப்போன உன் சிறகுகள் மட்டும்
எப்போதைக்குமான மிகுதிகளாய் என்னிடமிருக்கிறது.

பாடல்கள் குறித்து

எப்பொழுதாவது கிட்டுகிற மனோநிலையில் கேட்கிற
இணையப்பண்பலை ஒலிபரப்புகள்
காத்திருப்புகள் பற்றிய கேள்விகளை மட்டுமே மீதம் வைக்கிறது,
காலம் கேட்கிற சில கேள்விகளுக்கு
காலம் மட்டுமே பதில்களையும் சுமந்தலைகிறது,
எப்பொழுது வரைக்கும் இருக்கலாம்
அந்நிய நிலங்கள் தருகிற நாட்களும்
அவை தர மறந்து போகிற வாழ்வும்
முன்பே சொல்லியிருந்தாலும்,
பாடல்கள் காலத்தை மறக்கச்செய்வனவையேதான்!


புத்தகத்தை படிக்கக்கொடுத்த கடுமிலக்கியவாதி தோழர் ரௌத்ரனுக்கு...