Saturday, December 19, 2009

நடுத்தரங்களின் சமாந்தரமும் கடக்கவியாலத அதுவும்.

அவள் ஒரு தேவதை
ஏவாள் முதல் எல்லாப்பெண்களும் அற்புதம்
எதிர்பார்ப்புகளின் இன்மைதான் சுதந்திரம்
பணம்பெரும் சாத்தான் என்று,
போதைமிகுகிற தருணங்களில் எல்லாம் சொல்கிற அவன்
புணரும் பாம்புகள் பற்றிய கனவுகள் அடிக்கடி வருவதாய் புலம்புவான்...

தோற்றுப்போனதொரு காதலை 'ஒரு
பெண்மையிடம் தோற்றவன்' என புனைபெயராய் எழுதி
தன்னை பறைசாற்றிக்கொள்கிற அவனுக்கு
எண்ணில்லாத தோழிகள் இருந்தும்
யாரோடும் நெருக்கமில்லாமல் இருப்பது
புனிதம்சார்ந்த பெண்களின் மீதான தயக்கமென்கையில்
புனிதங்களில் தனக்கு நம்பிக்கை இல்லையென
பின்நவீனங்களை துணைக்கழைத்து வெறுப்பேற்றுவான்
தன்னை அறிவுஜீயென பிரகடனம் செய்பவன்
போலியென நான் சொன்னதற்காய் என்னை
பொதுப்புத்தியின் கேவலமான கடைசிக்குடிமகனென
குடித்துக்கொண்டிருந்த மதுவை முகத்தில் ஊற்றினான்,

கழுத்துவரைக்கும் குடித்துமுடித்த வெளிச்சமில்லாத அறையில்
கைகளில் முனகுகிற குறியை விடுவிக்கையில் அவன்
தானொரு பெண்ணாகிப்போகக்கடவதென சபித்துக்கொண்டிருந்தான்.

Wednesday, November 18, 2009

ஊதா நிறப்பூவைச்சூடியவளும் வேற்றுகிரகத்தின் இளவரசனும்...

போலி எல்லைக்கோடுகள் போடாத தோழிகள் கிடைப்பது வரம் என்பது மிகையல்ல. கொஞ்சம் இலக்கியம் கொஞ்சம் திமிர் நிறைய தைரியம் என அமைகிற தோழிகள் நான் நம்பாத என் முன்வினைகளின் பயன் - புனைவின் சாத்தியக்கூறு.

பல முறையான என் அழைப்புகளுக்கு பதில் சொல்லாமல் இருந்த தோழி ஒருத்தியின் பெரியதொரு ஊடலுக்கு பிறகு பேசக்கிடைத்த; எனக்கு பின்னிரவைப்போன்ற காலைப்பொழுதொன்றில்.





என்னடா பிறழ்வு கிறழ்வெண்டு விளங்காத மாதிரி எழுதியிருக்கிறாய்..

நானே விளங்காமத்தான் இருக்கிறன் அதான் உப்பிடி.. :)

நீ சும்மா கனக்க யோசிக்காத அதென்ன படம் into the wild.

அந்தமாரி படம் முடிஞ்சா பார், எனக்கு நெருக்கமான ஒரு மனிசன் கிரிஸ்!உள்ளுக்க இருந்த ஆசைகளை தூண்டி விட்டிருக்கிறான். படம் பாத்த அண்டைக்கு குடிக்கோணும் போலயே இருந்திச்சு.

நீ சொல்லுற படங்கள் எல்லாம் பாத்தா நித்திரை கொள்ளேலாது பாப்பம் try பண்ணுறன்.


உண்மைல என்னடி வாழ்க்கை இது போலித்தனமா செஞ்சு வச்சமாதிரி கொஞ்சம் கூட உண்மை இல்லாத மனிசர்களோடை சீ...

கனக்க யோசிக்கிறா போல இருக்கு ஊருக்கு போயிட்டுவா...

ச்சா அப்படியெண்டில்லை ம்ம்.. ஓமடி ஊருக்கு போனா நல்லதுதான்.. wanna get a break.

ம்ம் போட்டு வா..

போறதுக்கு காசில்லை நீ தந்தா போயிடுவன்..

என்ன செய்யுற காசையெல்லாம்?!

என்னைப்பற்றி தெரியும்தானே காசை சேமிக்கிறதெண்டுறது எனக்கு தெரியாத விசயம்...நாளைக்கெண்டெல்லாம் நான் நினைக்கிறதே கிடையாது.

என்னால முடிஞ்சதை தருவன் கவனமா போட்டு வா.

ம்ம் தேவைப்பட்டா சொல்லுறன் ஏப்ரல்ல போகலாம் எண்டிருக்கிறன்..

போகேக்க சொல்லு.

மம்ம்...நேரமென்னடி கதைக்கிறது பிரச்சனை இல்லையோ?

சாமத்துல கதைக்கிறது பிரச்சினை இல்லாம? சரி சொல்லு!

நீ ஏன் உப்பிடி எழுதுற காதல் கவிதையெல்லாம் எழுத மாட்டியளோ?


எழுதுறதோ? நான் புலம்புறதை "எழுதுற" எண்டு சொல்லி எழுதுறவங்களை கேவலப்படுத்தாத

அச்ச்சச்சோ... தாங்கேலாதாம்...அடக்கம் இருக்கத்தான் வேணும், அதுக்காக உப்பிடியோ...அவனவன் செய்யுற அலம்பல்களைவிட நீ எழுதுறது நல்லாத்தான் இருக்கு.

thanks thanks.. thanks...

சரி சரி...காதல்,கறுப்பி எண்டு ஒண்டையும் காணேல்லை காதல் கவிதை ஒண்டு சொல்லு பாப்பம்..

ஹாஹஹஹாஹாஹ :))

ஏன்டா சிரிக்கிற...

நீ காதல் கவிதை கேக்குற?

ஏன் நான் காதல் கவிதை கேக்கக்கூடாதெண்டு எழுதியிருக்கோ...

காதல்கவிதையை நினைச்சா எனக்கு இயலாச்சமன்தான் ஞாபகத்துக்கு வருது. :)

ஒரே ஆக்கள்தானே நீங்கள்...உங்களை திருத்தேலாது!


காதல் கவிதைகளெல்லாம் தாண்டி கன நாளாயிட்டுது காதல் கவிதைகளை படிச்சா சிரிப்புத்தான் வருது...அதாலதான் பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகளை அப்பிடியே விட்டுட்டன்.

சரி நீ எழுத வேண்டாம் எனக்கு சொல்லு

ம்ம் காதல்,கவிதை..கவிதையாவே வேணுமோ?

பரவால்ல எப்பிடியெண்டாலும் சொல்லு நீ அடிக்குரல்ல சொல்லுறதே ஒரு மாதிரிதான் இருக்கும்..


என்னத்தையடி சொல்லுறது

ஏதாவது சொல்லு கெதியில குட்நைட் சொல்லுறதுக்கு...நேரம் ஒண்டரை.


சரி நீ என்ன செய்து கொண்டிருக்கிற,என்ன கலர் உடுப்பு போட்டிருக்கிற?

டேய் என்னத்துக்கு கேக்குற

சொல்லடி...

"light purple color blouse and white pijama"

என்ன குடும்பி கட்டியிருக்கிறாயோ, அல்லது..?

உதைவிழும் கவிதையும் வேண்டாம் நீயும் வேண்டாம் போடா..

சொல்லெண்டுறன்... எடுத்தவுடன கவிதை சொல்லுறக்கு நானொண்டும் மெட்டுக்கெழுதுற ஆள் இல்லை.


சரி சரி ரெண்டு "hair clip" மட்டும் போட்டிருக்கிறன் சிக்குப்படாம இருக்க..

ம்ம்ம்....

ம்ம்...

என்ன சொல்ல...

ஹாஆ...கதை சொல்லு!


கதையோ...?

உன்னைக்கேட்டன் பார்!!

ஒரு..பாட்டுப்பாடு.

உனக்கென்னத்துக்கடா இந்த றிஸ்க்கெல்லாம்?


சரி பிடிச்ச பாட்டென்ன?

நீ கவிதை சொல்லெண்டா பாட்டுக்கேக்கிற?
பிடிச்ச பாட்டுத்தான் பச்சைக்கிளி முத்துச்சரம் அதுவும் நீ சொன்ன பாட்டுத்தான் போய்கொண்டிருக்கு இந்தா கேள்...

செம பாட்டு என...?

இதை ஏன் இப்ப போட்டன் எண்டிருக்கு

ஏ..னடி?

தாமரை என்னமாதிரி எழுதியிருக்கிறாள்,பாம்பே ஜெயஸ்ரீ என்ன குரலடா அவளுக்கு...

என்ன இருந்தாலும் பெண்மை காதல் சொல்கிற விதமே தனி! தமிழ் சினிமான்ரை சாபவிமோசனங்கள்ள தாமரையும் ஒராள்.

ம்ம்..


உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா...
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திக்கைப் பார்த்திடவா...
சிறுகச் சிறுக..உன்னில்... என்னை
தொலைத்த மொழி சொல்லவா..
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா.
ரணமும் தேன் அல்லவா..
ரணமும் தேன் அல்லவா...


ம்ம்...

என்னடா...

ம்ம்...

நான் கட் பண்ணுறன் ok...

கொஞ்சம் பொறடி..!

ம்ம்...

.....

சொல்லு...

ம்ம்....

சட்டென்று வருகிற மழையைப்போல
எந்த விதமான ஆயத்தங்களுமில்லாமல்
இயல்பாய் எதிர்ப்படுகிறாய் நீ
ஒதுங்க இடமில்லாத நெடுஞ்சாலையில்
தனியே அகப்பட்டவனைப்போல
திணறிப்போகிறேன் நான்.


அட! முந்தின கவிதைகள் போல இருக்கு,நல்ல சிம்பிளா..பண்டிதத்தனம் இல்லாம.

அப்ப இப்ப பண்டிதர் மாதிரி எழுதறனோ..

அப்பிடியெண்டில்லை சிலபேர் வேணுமெண்டே திணிக்கிறது வித்தியாசமான சொல்லுகளை..அது ஒட்டுறதே இல்லை..அதான்.

அதான் நானிப்ப புளொக் பக்கமே போறல்லை.

அதுவும் நல்லதுக்குத்தான் ஹா..ஹா..ஹ. ;)

போடி குண்டம்மா!
சரி இன்னொண்டிருக்கு கேக்கிறியோ.. ;)

சொல்லு...


மெல்லிய ஊதா நிற மேலாடையில்
வாசல்களே இல்லை என்றாள்
திறக்க முடியாத மேலாடையின் உள்ளே மிகுந்திருந்து
எனக்கான அவளது ரகசியங்களும் பிரியங்களும்
.


உதை விழும் நாயே...!
கவிதை சொல்லெண்டா நக்கல் என உனக்கு..

சரி சரி முடிஞ்சா குட் நைட் சொல்லிட்டு படு...

ஏன் பின்ன உங்களோட உருகி வழிவம் எண்டு நினைச்சியளோ?!

நீங்கள் உருகோணும் எண்டெல்லாம் நாங்கள் கவிதை சொல்லுறேல்லை...சரியோ!!!

சரி சரி கோவிக்காதை...நான் நாளைக்கு எடுக்கிறன்..இப்ப குட்நைட்.

ஓ.கே குட்நைட்.

Thursday, November 5, 2009

திரும்புகிற பிறழ்வு...




எழுதுவம் எண்டு வெளிக்கிட்டாத்தான் விசர்க்குணங்களும் வரும்போல நம்பிக்கையின்மைகளும் பயமும் சேர்ந்து சாகடிக்கிறது.கெதியில ஒரு வைத்திய ஆலோசனை எடுக்க வேண்டி வரும்போல, சரி அதை விடுவம்... பிறழ்வையும் அனுபவிக்கத்தானே வேணும். நிறைய புத்தகங்கள், நிறைய திரைப்படங்கள் கிடைத்திருக்கிறது.இப்போதைக்கு எழுதாமல் இருக்க அல்லது எழுத விடாமல் செய்வதற்கு அவையே போதுமானவையாயிருக்கிறது.

___________________________________________________________

'யாமம்' படித்து முடித்திருக்கிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் எழுதப்பட்ட மொழி என்பது நெருக்கமான குரலொன்றின் சுதியோடு பழக்கபட்ட பாதையில் அழைத்துப்போகிற வசீகரம் உடையது அவரது இணையம் தவிர்த்து நான் வாசிக்கிற இரண்டாவது புத்தகம் அல்லது முதல் நாவல்.இதற்கு முன்னர் வாசித்தது அயல் சினிமா என்கிற கட்டுரைதொகுப்பு.யாமம் வாசிக்கத்தொடங்கி பல நாட்களாகியும் முதல் சில பக்கங்களை கடப்பதற்கே சந்தர்ப்பம் வாய்க்காமல் இருந்தது. எப்படியும் வாசிப்பதென்ற முடிவில்; அறையில் எல்லோரும் உறங்கிய பிறகு மிக மங்கலான வெளிச்சத்தில் மூன்றாம் யாமம் ஒன்றின் ஆரம்பத்தில் படித்து முடித்திருந்தேன்.இரவு ஆகக்குறைந்த போலித்தனங்களோடிருக்கிறதென்று நம்பிக்கொண்டிருந்தேன்; அது ஆகக்கூடிய ரகசியங்களையும் வைத்திருக்கிறது.

____________________________________________________

(இடைக்காலப்)பாடல்களில் பைத்தியமாயிருக்கிற நண்பனொருவனுக்காக பாடல்களை தரவிறக்கிக்கொண்டிருக்கிறேன் வீடியோ பாடல்கள் முடிந்து டிசம்பருக்குள் அறுநூறு பாடல்கள் mp3 ஆக வேண்டும் என்று கேட்டிருக்கிறான். அவனுடைய தெரிவுகளும் நச்சரிப்புகளும் சலிப்பாக இருந்தாலும், சில நேரங்களில் மனதுக்கு இணக்கமாகவும் இருக்கிறது இந்த - பாடல் தேடுகிற வேலை அவனுக்கான பாடலை தேடுகையில் எனக்கான நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்து விடுகிற சில பாடல்களில் தங்கி விடுகிறது மனம். மனதுக்கு நெருக்கமான பாடல்கள் கொண்டு வருகிற வாசனையும் மயக்கமும் ஒரு பரவசமாகவே இருக்கிறது. நினைவுகள் மீட்டலும், கிளர்வுகளும் என காலத்தை கடத்திக்கொண்டு போய்விடுகிறது. தலை முறைகள் மாறியும் மாறிப்போகாத அந்த ரசனைகளையும் சிந்தனைகளையும் வைத்திருக்கிற சனம்தான் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது வடக்கிலும் கிழக்கிலும்.

(மதி உன்ரை தொல்லை தாங்கேலாதாம்)

__________________________________________________


இணையமும் வலையிலெழுதுதலும் எனக்கு கொடுத்திருப்பது இன்னமும் பிறழந்து போகாதிருக்கிற என்னைத்தான் அல்லது பிறழ்வுகளிலருந்து வெளிவருகிற லாவகங்களைத்தான். பிறழ்வும் திரும்புதலுமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது நாட்கள். வாழ்வின் மீதான திருப்தியினை,காட்டாறென ஓடிக்கொண்டேயிருக்கிற வாழ்வினை நேசிக்கிறது மனது. இந்த செய்து வைத்த விதிகளில் வாழ்தலை சபித்துக்கொண்டிருக்கிற என்னை இன்னமும் தீவிரப்படுத்தியிருக்கிறது கடந்த வாரத்தில் பார்த்த in to the wild திரைப்படம். வெளிக்கிடு இந்த இடத்தை விட்டு என்று பதறிக்கொண்டிருக்கிறது மனம், நிர்ப்பந்தங்களால் வடிவமாக்கப்பட்டிருக்கிற இந்த பிறவியும், முடிவுகளின் பால் இருக்கிற தளர்வுகளும், போதாமையும் இன்னமும் விமானச்சீட்டை வாங்க விடாமல் பண்ணியிருக்கிறது.





______________________________________________________



செத்துப்போடா நாயே என்பது போல விடிய விடிய குடிப்பதற்கான மனோநிலையோடிருக்கிறது இப்போதைய நாட்கள்.சில நேரங்களில் போதை மிகச்சினேகமாய் இருக்கிறது புத்தகங்களைப்போலவே. பகிர்ந்து கொள்ள யாருமில்லாத எல்லாவற்றையும் எனக்குள்ளே வைத்தபடி எப்படி இருப்பேன்? இந்த இரவுக்கான தோழியை கூட என்னால் கண்டுகொள்ள முடியவில்லை!! என்ன உலகம் இது! ஆகக்குறைந்து குடிப்பதற்கான சுதந்திரமோ,சத்தமாய் புலம்புவதற்கான சுதந்திரமோ இல்லாத இந்த '...நாட்டுக்குள்ள' இருந்து கொண்டு இப்படி ஏதாவது எழுத மட்டும்தான் முடிகிறது.


நம்பிக்கைகளின் மீதிருக்கிற பயங்கள்
எப்பொழுதும் தீராமல் இருக்கிறது,
ஏறக்குறைய முழுவதுமாய்
பிறழ்ந்திருக்கிறது மனம்,
திறந்திருக்கிற இயல்புவெளி
ஆடைகளால் மூடப்பட்டிருக்கிறது,
வெறுமனே பேசுகிற வார்த்தைகள்
பிளைத்துக்கொள்ள போதுமானவையாயிருக்கிறது,
பிரிந்துவிட முடியாததில்
அறுந்து விடாமலிருக்கின்றன இல்லாத பிரியங்கள்,
இறந்து போகையில் மீதமிருக்கக்கூடும்
இன்னமும் ஆரம்பிக்கப்படாத வாழ்க்கை!


போங்கோடா... நீங்களும் உங்கடை ஒழுக்கப்பூழலும்!

Saturday, October 17, 2009

இடைவெளி...



image: lariza.com

எதை எழுதுவது... எழுதாமல் இருப்பதில் கனம் கூடிக்கொண்டேயிருக்கிறதா மூளை? இல்லையா... பிறகேன் இப்படி அலைக்கழிகிறது மனம். நிறைவடையாமல் இருக்கிறது நாட்கள்!

பைத்தியக்காரத்தனங்களோடிருக்கிறது இயல்பு... எனக்கிருக்கிற மனநிலை பாதிப்புக்கு என்ன பெயர்... தீபாவளிக்கு என்ன விஷேசம்... அவள் இந்த முறை வாழ்த்தனுப்பாவாளா? தமிழ்மணம்...வலைப்பதிவுகள்... கட்டுடைப்புகளின் சாத்தியமின்மை. உன்னைப்போல் ஒருவனும் வெடிகுண்டு முருகேசனும். ஒன்லைனுக்கு வராத அய்யனார்... அகப்படாமல் இருக்கிற சன்னாசி. சாருநிவேதிதா... இணையத்தேடு பொறிகள். எழுதாமல் கடந்து போன ஒரு மாதம்... இந்த பக்கதின் இரண்டாவது வருட நிறைவு.

கதைக்காமல் இருக்கிற காதல்... யாழ்ப்பாணத்து பொம்பிளைகளும் சமுதாய கட்டமைப்புகளும். எனக்கு நடக்கப்போகிற கல்யாணம்...வரப்போகிற மனைவி. சொல்லிக்கொண்டு பிரிந்த அவள்...நவீனத்துவங்களின் பிரதி...பழக்கப்படாத எழுத்து...வாசித்து முடிக்காத நவீனன் டைரி...சுசீலா...ஆதர்சங்ககளின் நாயகி.

ராஜபக்க்ஷேயும் தமிழக அரசியலும்...பிரபாகரனும் பிம்பத்தகர்ப்புகளும். மார்க்கசியமும் புதிய தோழர்களும்...காத்திருப்பின் இடைத்தங்கல் முகாம்கள்...மக்கள் மயமாக்கப்பட்ட வன்முறைகள். முனகிக்கொண்டிருக்கிற மாற்றுக்கருத்தியல்...அதிகாரங்களின் தீர்வு.பயமுறுத்திக்கொண்டிருக்கிற பணம்...விருப்பமில்லாத சராசரி வாழ்க்கை. திசைகளை தீர்மானிக்காத பயணம்... குறைந்தளவு போலித்தனங்களோடிருக்கிற இரவு...குறிகள் சொல்கிற கதைகள்... கடைமைக்கு நிகழ்கிற புணர்வுகள்...நிர்பந்தம் சுமக்கிற உறவுகள்.

இன்னும் படிக்கலாம் என்கிற யோசனை.சிறப்புத்தேர்ச்சி அடைய நினைக்கிற சமையல் கலை. சமையல், சமைதல்,சமைத்தல் என்பவை பற்றிய ரசனைகள்.எதிர்காலம் என்கிற திணிப்புகளும் தயார்படுத்தல்களும். ஏற்றுக்கொள்கிற பக்குவமில்லாத மனது... அம்மணமாயிருக்கிற உண்மை... திரவ வடிவிலான ஒழுக்கம். போலிகள் வரைகிற விதிகள்... உடல் மீதான புலன்களின் ஆதிக்கம்.

முன்றாந்தரத்து நீலப்படங்கள்...உடல் மீது நிகழ்கிற வன்முறை... சத்தம் நிறுத்திவைத்து அவற்றைப்பார்க்கிற ஒருவனின் சப்பைக்கட்டுகள்... கடவுள் அமைத்து வைத்த மேடை... கடவுளை உணர்கிற சாராயக்கடை. யாரென்றே தெரியாத ஒருத்தியின் உள்ளாடைகள் பற்றிய ஆராய்ச்சி... தொலைபேசியினூடான வெளியேற்றங்கள்.

எழுதுவதென்கிற நமைச்சல்...அசௌகரியம் தருகிற சூழல்...திணிக்கப்பட்ட வாழ்வு. எழுதாமல் இருக்கிறதன் பாதிப்பும் விளைவும். தோழிகள் இல்லாத அரபு தேசம்... மறைவில் கழுவுகிற அழுக்கு... புனிதங்களின் மீதான அவநம்பிக்கை...பாவம் புண்ணியம் பணியாரம்!
தன்முனைப்புகளின் மீதிருக்கிற அக்கறையும் பிடித்தமும்.முகங்களை மறைக்கிற குறிகள் தனிமைப்படுத்தலின் விளைவு. பலவீனர்களின் பிரசங்கம்...குற்றவுணர்வுகள் இணையச்சாமியார்களின் வளர்ச்சி. கடவுளை தேடுகிற கூகுள்,இணையக்குழுமங்களில் கடவுளின் பங்களிப்பு...மின்னஞ்சலில் வருகிற பக்தி.

இடைக்காலப்பாடல்களின் வாசனை... இரவில் அணிகிற ஆடை.பருத்தித்துறை ஊராம் பளக்கொடி பேராம்.ஊரிலிருக்கிற குடும்பம்...அப்பாவோடு பேச நியை இருக்கிறது... அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய நம்பிக்கை. தீர்க்கவேண்டிய கடன்...பொறுப்புகள் அல்லது நிர்ப்பந்தங்கள். எதிர்காலம்...திட்டமிடல்... கோடு போட்டு வைத்திருக்கிற வாழ்கை. சும்மா இருத்தல்... கணங்களில் வாழ்தல்!

வாசித்தல்... எழுதுதல்...எழுதாமலிருத்தல்...எழுதவேண்டும் என்கிற இருக்கப்படாத குணம். எழுதுதல்...எழுதி எழுதி எழுத்தாகுதல். நானெழுதுகிற நாவல்... எழுத நினைக்கிற ஊரின் கதை... ஊரின் மறைவாய் கதைக்கப்படுகிற பெண்கள். அவள் எனக்கு சொன்ன கதை... பிரதியை எழுதுகிற ஆசிரியன்... ஆசிரியன் இறந்து போன பிரதி... வாசகனுக்கும் எழுத்துக்குமான இடைவெளி-



வாசிக்கிறவன் எழுதாமலிருக்கிற சொற்களை கண்டடைதலுக்கான பிரதியிலிருக்கிற சாத்தியங்கள்.


தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லியே ஆகவேண்டுமா...?



நீ கற்பனை செய்கிற எனக்கான பிம்பங்களில்
பொருந்த முடியாமைக்கு வருந்துகிறேன் தோழி..
நீ அறியாத ஆதிக்கணமொன்றில் நிகழ்திருக்கலாம்
நெருக்கத்திற்கான முதல் துளி...
நீள் வளையப்பாதையில் இயங்குகிற பூமி
எந்தக்கணத்திலும் நின்று போகலாம்...
தன் முனைப்புகள் இல்லாத ஈர்ப்பின் மீது
நீடித்திருக்கிறது காதல்
இடவெளிகள் மாறுகிற கணங்களில் நிகழக்கூடும்
இயங்க மறுக்கிற பூமியும்
நெருக்கத்திற்கான கடைசித்துளியும்.



புனைவுகளையும் கனவுகளையும் சாத்தியப்படுத்துகிற உனக்கு...

Wednesday, September 9, 2009

கதையாட வந்த கதை...





"வயதுபோய்கொணடிருக்கு இதுவரையும் இந்த உலகத்துக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்ற ஏக்கத்தில் ஏதாவது எனக்கு தெரிந்ததை எழுதலாமெண்டு (ஒருத்தரும் படிக்காட்டாலும் பரவாயில்லை) வந்திருக்கிறன் அன்பு நெஞ்சங்களே…உள்ள வரலாம்தானே…?"

எப்படி ஆரம்பித்திருக்கிறேன் என்று மறுபடி வாசித்துப்பார்க்கையில் சத்தமாய் சிரிக்கத்தான் தோன்றுகிறது.எழுத இருந்த கதையை தயக்கமில்லாமல் எழுத வைத்த இந்த தொடர் பதிவின் தொடக்க நண்பருக்கும்,பனையூரான் மற்றும் அருண்மொழி என்கிற சொந்தங்களின் அழைப்புக்கும் நன்றி.தாமதத்துக்கான காரணம் கடைசியில் இருக்கிறது நண்பர்களே.


அடிப்படையில் நானொரு வேற்றுக்கிரக வாசி..
(உன்னை பதிவெழுத வந்த கதைதான் சொல்லச்சொல்லி இருக்கிறோம்)
தளம்பல் நிலையிலிருக்கிற மனது,"ஒரு..விதமான" மொழி, தனித்தும் கூடியும் இருக்க விரும்புகிற குணம்,திறந்து வைத்த வாழ்க்கை,என்று எனக்கே புதிதாய் தெரிகிற ஒருவன்!அப்படி இருந்த இவனுக்குத்தான் வேற்றுக்கிரகத்தின் இளவரசன் என்று பெயர் வைத்துக்கொண்டேன். எப்பொழுதும் கற்பனைகளில்தான் வாழ்வு சுகமானதாய் இருக்கிறது. திட்டமிட்டு வைத்திருக்கிற எதிர்காலம் நினைத்துப்பார்க்கிற கடந்தகாலம் என சந்தோசமாயிருக்கிற மனது. நிகழ்காலத்தில் சந்தோசமாயிருப்பது என்னவோ வாசிக்கிற, காதலிக்கிற, எழுதுகிற அல்லது போதையிலிருக்கிற பொழுதுகளில்தான்.முதல் சொன்ன மூன்றுமே இந்த போதையைப்போல் இருப்பதற்கு நான் பொறுப்பல்ல.

பொதுவாகவே மொழியை அனுபவிக்கத்தொடங்கிய நாளில் இருந்து நாட்குறிப்பு,அது, இது, கவிதை என்கிறபெயரில் ஏதாவது என்று கையில கிடைக்கிற கடதாசிகளில் நரி வெருட்டினது மாதிரி இடைக்கிடை எழுதுவது எனக்கொரு வியாதியாயிருந்தது. நாட்குறிப்பை தொடர்ச்சியாய் எழுதாதற்காக என்னை இதுவரையும் எத்தனை தடைவைகள் திட்டியிருப்பேன் என்று எனக்கு நினைவில் இல்லை.அப்படி நாளொன்றுக்கு இருபத்தினாலு மணி நேரங்கள் போதமால் இருந்த வாழ்க்கை முறையில் இருந்து வெளியேறி; ஒரே விதமான நாட்களில் சலிக்க ஆரம்பித்திருந்ததும் என்னுடைய வாழ்க்கை முறைக்கு சற்றும் தொடர்பில்லாததுமான ஒரு வாழ்க்கைக்குள் அகப்பட்டுக்கொண்ட என்னை விடுவிக்க கிடைத்த விசயம் இணையம்.

வெளியேற்ற முடியாத படிக்கு நிறைந்து கிடக்கிற சொற்களை வலுக்கட்டாயமாக யாரிடமாவது திணிக்கிற முயற்சியில் எழுத ஆரம்பித்ததுதான் என் நினவின் வெளியில் நான்(URL)என்கிற என்னுடைய உலகம் பதிவுக்கு அப்படித்தான் பெயர் வைத்திருந்தேன். சொல்லித்தீராத காதல்,அவள்கள்,அனுபவித்த உலகம், பெருங்கருவிருளெனச் சூழ்ந்தும் பொழியாது விலகுகிற மேகங்களென எழுதப்படாத சொற்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வகை திண்ம நிலைக்கென்னை அழைத்துப்போக...

இனி வேண்டாம் இந்த வில்லங்கம் என தேடிக்கொண்ட ஒரு வெளியேற்றம்தான் இணையமும் எழுதுதலும்.நானொரு எழுதுபவன் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்.நானொரு சொற்கள் தின்னுகிற மிருகம் அது முதலாவது. சின்ன வயதிலிருந்தே வாசிக்கிற பழக்கம் இருந்திருந்தாலும் எவற்றை வாசிப்பென்பது இணையம் எனக்கு கொடுத்த முக்கியமான விசயங்களில் ஒன்று.

இதே போல என்னை ஆச்சரியப்படுத்துகிற அல்லது எனக்கு கிடைத்த முக்கியமான விசயம் என்னுடைய அலைவரிசையில் குவிந்து கிடக்கிற இணையத்து நண்பர்கள் அப்படி நெருக்கமான எழுத்துகளை எழுதுபவர்கள் அனேகம் ஆண்களாய் போனார்கள்.முகம் தெரியாத நட்பு மனதுக்கு நெருக்கமாகி விடுகிற இந்த சாத்தியப்பாடுகளை இணையம் கொடுத்திருக்கிறது.ஒரு சில நண்பர்களை நேரில் பார்த்தும் இருக்கிறேன்.இங்கே அடைபட்டுக்கிடந்த வாழ்வை எழுத்தின் மூலகம் திறந்து கொடுத்திருக்கிறது இணையம் . இலக்கியம் வாசிப்பென கதையாடுவதற்கு அருகாமையில் ஜமாலன், முபாரக், ரௌத்ரன் என்று நல்ல வட்டம் ஒன்று வாய்த்திருக்கிறது.

சவுதி எனக்கு கொடுத்த விசயம் வாசிப்பும் சொற்கள் தின்னுகிற எனக்கான வெளியும்தான்.

ஆனால் பல எழுத்தையும் புத்தகங்களையும் பார்க்கிற பொழுதுகளில் எரிச்சல் உண்டாகுவதற்கும் எதையோ இழந்தது போல இருப்பதற்கும் எனக்குள் இருக்கிற சொற்கள் காரணமாக இருக்கலாம் என்பது எப்பொழுதும் என்னை உறுத்திக்கொண்டிருந்த விசயம்.இந்த வாக்கியத்தை தனிப்பதிவாக எழுத முடியும்.நானும் எழுத வந்ததுக்கு இதுவும் ஒரு காரணமாகலாம்.

காதல் என்கிற சொல்லைத்தான் இணையத்தில் முதன் முதலாக தமிழில் தேடினேன் அப்பொழுது அறியக்கிடைத்ததுதான் சந்திரவதானாவின் பதிவு,அங்கிருந்து ஆரம்பித்ததுதான் வலைப்பதிவுகள் வாசிப்பு.மதிகந்தசாமியின் வலைப்பதிவுகள் பட்டியலில் இருந்து தொடங்கியது பயணம், நிறைய பதிவுகளை யாரென்றே தெரியாமல் வாசித்துக்கொண்டிருந்தேன்.பதிவுக்கு வரமுன்பே பதிவரசியல் பதிவுகள் எல்லாம் படித்திருந்தேன்.இந்த காதல் சார்ந்ததொரு மிமுதி அறிமுகத்தை மற்றொரு பதிவில் எழுதுவேன்.


இரவுப்பணியில் இருந்த ஒரு நாள் வழக்கம்போல வாசித்துக்கொண்டிருந்த பதிவுகளில் ஒன்று நளாயினி தாமரைச்செல்வனுடையது. "சரி யாழ்ப்பாணத்து ஆள்தானே கதைச்சுப்பாக்கலாம்" என்கிற ஒரு உந்துதலில் அழைத்து அறிமுகப்படுத்திக்கொண்டேன்.சிலமாதங்களில் என் சம்பளம் முழுவதையுமே பேசித்தீர்த்திருந்த என் தொலைபேசிச்சிக்கலை அவரிடம் சொன்னேன். அவரே அழைத்து சரி சொல்லுங்கோ என்ற அறிமுகத்தினூடு பகிர்ந்து கொண்டவை நிறைய,பதிவர்கள் என்கிற வரிசையில் எனக்கு முதல் அறிமுகமானது இவதான்.

நல்ல தோழியான அவரிடமிருந்து இப்படித்தான் பதிவது என்கிற தொழில் நுட்பத்தை தெரிந்து கொண்டேன். உங்களுக்கு பாமினியில் எழுதத்தெரியுமா என்று கேட்டவர்; அவர் பயன்படுத்திக்கொண்டிருந்த சுரதாவின் பொங்கு தமிழ் எழுதியை அறிமுகப்படுத்தினார். மங்கலாக நினைவிலிருந்த பாமினி விசைப்பலகையை நினைவிலெடுத்துக்கொண்டு ஆரம்பித்த அற்றிலிருந்து இன்று வரையும் அதே சுரதாவின் பொங்கு தமிழ் எழுதியேதான் நான் பயன் படுத்திக்கொண்டிருப்பது.

சுரதாவின் பாமனியிலிருந்து யுனிகோட் முறையில் எனக்கிருக்கிற பிரச்சனை நேரச்சிக்கலும் இந்த கமாவை தட்டச்சினால் 'இ'னாவாக வருவதும்தான் மற்றும்படி பெரிதாக வேறெந்த சிக்கலும் தெரியவில்லை ஒரு வேளை இது பழக்கப்படதால் இருக்கலாம் ஆனால் NHM-எழுதி வசதியாயிருக்கிறது என்றுதான் பலரது கருத்தும் இருக்கிறது ஒரே ஒரு முறை பயன் படுத்தி பார்த்திருக்கிறேன் மடிக்கணினி ஒன்றில்.சுரதா பிரச்சனையில்லாமல் இருக்கிறது.

பெரும்பாலும் அலுவலக கணினியிலேயே இணையம் பயன் படுத்துகிறேன் என்பதும் நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் எதையும் தரவிறக்கி சேமிக்க முடியாது என்கிற காரணத்தினாலும் இப்பொழுதும் வேறெந்த வழிக்கும் போகவில்லை.அது தவிர இந்த கணினி தொடர்பான தொழில் நுட்பம் எனக்கு அப்பாற்பட்ட விசயமாகவே எப்பொழுதுமிருக்கிறது அல்லது சலிப்பூட்டுவதாய் இருக்கிறது. கணினி என்கிற விசயத்தின் மீதிருந்த ஆச்சரியமும் விருப்பமும் அது கிடைக்காமல் போன நாளிலிருந்து அல்லது எனக்கு பிடித்தமான துறை ஒன்றிற்குள் நுழைந்ததிலிருந்து இல்லாமல் போயிற்று.



அருண் மொழி வர்மன்:
என்னைப்போலவே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எண்டு குதியன் குத்திக்கொண்டு திரிஞ்ச அதே செட்தான். தீவிர எழுதுத்துகளில் முன்னேறிக்கொண்டிருக்கிற ஒருவர்.கனேடிய இலக்கியச்சூழலில் இருந்து புறப்பட்டிருக்கிற இன்னொரு இலக்கியப்புயல் இது பல கரைகளை கடக்கும் என்பது மட்டும் தெளிவாயிருக்கிறது. உண்மையில் கனடாவிலிருக்கிற இந்த இலக்கியவட்டத்துக்காகவே குறைந்தளவு காலமேனும் கனடாவில் வாழவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதோடு பதிவுலகம் சாராத சில பேருக்கு தகடும் குடுக்க இருக்கு.

பனையூரான்

ஒரே ஊர், வட்டமா இருந்து சோடா குடிச்ச அளவுக்கு நெருக்கம் இருக்கு. இவ்வளவும் போதும் எனக்கு அவருக்குமான தொடர்பைப்பற்றி சொல்ல. ஆள் ஒரு மண்டைக்காய் . பரந்த பார்வையோடு எழுத ஆரம்பித்திருக்கிற இவருடைய எழுத்துக்கள் இன்னும் தீவிரமாகலாம்.குறுக்கால ஆராய்கிறபழக்கம் இருக்கிற இவர் எழுதுகிற விசயங்கள் இன்னும் பல பரிமாணங்களை பெறக்கூடும்.



இனி நான் சண்டைக்கு வராத ஆட்களாய் பார்த்து மாட்டி விட வேண்டும்...

ரௌத்ரன் - தீவிரமான தேடல்களோடு இருக்கிற இவர் இப்பொழுது இதே ஊரில் பொழுது போகமால் இருக்கிறார்.

நளாயினி நல்ல தோழி இந்த உலகத்துக்குள் வருவதற்கு பாதை கொடுத்தவர்.இலகுவான மொழியில் எழுதிச்செல்கிற, பல நாட்களாக எழுதாமல் மறைந்திருக்கிற இவரை இந்த முறை எப்படியும் எழுத வைத்து விட வேண்டும்.


முரண்வெளி - இவருடைய வாசிப்பும் பதிவுகளும் அடர்த்தியானதொன்று அடிக்கடி பெயர் மாறி இடம்மாறி எழுதிக்கொண்டிருந்த இவர் இப்பொழுது facebook கில் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்.



1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள் தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழில்நுட்பங்கள் சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்...


சொல்லாமல் விட்ட விசயங்கள் இருக்கிற, எண்ணிக்கை வரிசையில் நூறைத்தொட்டிருக்கிற இந்தப்பதிவு.

எனக்கான கூட்டை சுமந்திருக்கிற தும்பளைக்கு...

Monday, September 7, 2009

பயம்...!




சமநிலை இல்லாத உடம்பு
பெரும்பாரமெனவிருக்க விடிந்த பிறகே
உறங்கப்பழகியிருக்கிற இந்த நாட்களை
கெட்டுப்போன கண்களோடு
பார்த்துக்கொண்டிருக்கிறது இரவு

குறையாமல் இருக்கிற குளிருக்குத் தெரிவதில்லை
இன்னும் நான் இப்படியே இருக்க வேண்டிய
நாட்களின் எண்ணிக்கை மீதமிருப்பது,

என்னோடு ஒத்துழைக்க மறுக்கிற நாட்கள்
என்னை அவளுக்கு அறிமுகப்படுத்த
வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறது,

யாரையும் குறைசொல்ல முடியாதபடிக்கு இருக்கிறது
என்னை பரிசோதிக்கிற நிகழ்வில்
குற்றவுணர்வின் நியாயம்,

எல்லோரும் உறங்கிய பின்னிரவுகளில்
அந்தரங்கம் திறந்து கிடக்க
பயமுறுத்திக்கொண்டிருக்கிறது சுயம்!



picture: flickr

குறிப்புகள்:

\\
எதையோ எழுதத்தொடங்கிய சொற்கள் இப்படி முடிந்திருக்கிறது. எண்பத்தொரு வெள்ளைநிறத்தாள்களை கறுப்பு மற்றும் நீல நிறச் சொற்கள் கொண்டு நிரப்பியிருந்த அந்தக்கதையிலிருந்து சில சொற்களை மட்டும் எடுத்து கோர்திருக்கிறேன்.

\\
எழுதியவனும் இல்லாத முடிவும் இல்லாத இந்தக்கதைக்கு நான் வைத்திருக்கிற தலைப்பு- ஆயிரத்து இரு நூற்று இருபத்தேழு நாட்கள் திறக்கப்படாத ஜன்னல்.

\\
இந்தக்கதைக்கும் எனக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.எனக்கு தெரிந்த வகையில் குளிர் என்பதொரு குறியீடாக இருக்கலாம்.

Monday, August 24, 2009

And, Now...






எப்பொழுதும் தீராத சொற்களோடு
எழுதுபவனொருவன் இருந்தான் என்னிடம்
ஏகாந்தம் மிகுகிற நேரங்களிலெல்லாம்
என்னுள் நிரம்புகிற சொற்களை வரைந்து கொண்டிருப்பான்,

எழுதி எழுதி எழுதித்தீராமல்
இருந்தது அவளுக்கான சொற்கள்.

எதிர்பாராததொரு மத்தியானத்தில்
என்னை மறந்து விடென்று விலகிப்போனாள்.

சொற்கள் நிரம்பித்திணற,
இப்பொழுது...
காணாமல் போனான் எழுதுபவன்!


பின்குறிப்புகள்:

ஆயில்யன்

தல

ரொம்ப நல்லவரு

ஜமால்

சென்னை ஆச்சி.



எப்பூடி..

Friday, August 14, 2009

பல்லிகள் உலாவுகிற அறை...




பூச்சி...

மல்லாந்து கிடக்கிற கரப்பான் பூச்சியின்
காற்றில் அலைகிற கால்களைப்போல
நூலிழைப்பிரியத்திற்காய் காத்திருக்கிறதெனது காலம்,

பழக்கமில்லாத தெருவில் உறுமுகிற நாயொன்றின்-
சாயலோடு என்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
சுவர் மீது விழித்திருக்கிற பல்லி,

அது அசையாமல் வைத்திருக்கிற வாலின் இலக்கு
எதிரேயிருக்கிற பூச்சியை குறி வைத்திருக்கிறது
விலகுதலுக்கு காத்திருக்கிறது பூச்சி,

வினாடிகளை சப்திக்கிற கடிகாரம்
பரலோகத்திலிருக்கிற பிதாக்களை எழுப்பிக்கொண்டிருக்கிறது
பல்லி பூச்சியை கவ்வுகிற வினாடியில்...

என்னை கடந்து போகிறது காலம்!



பின் குறிப்புகள்:

பல்லியும், பூச்சியும், கரப்பான்களும் பலவகைப் படிமங்களுக்கு அடிகோல்கிற விசயங்கள். மீதமிருக்கிற போதையோடு உறங்கப்போகையில் பல்லிகள் பற்றி எழுகிற சொற்களை எழுதி வைக்கத்தவறிவிடுகிறது எனது சோம்பல் அல்லது அலட்சியம்.

பல்லி முட்டைகள், கறுப்பு எச்சங்கள், அடிக்கடி பேசிச்செல்கிற பல்லிச்சத்தங்கள் என இருக்கும் என்னுடைய அறை. அப்பொழுதெல்லாம் பல்லிகளை கவனிப்பதற்கே நேரம் இருப்பதில்லை இப்பொழுது பல்லிகள் கனவில் வேறு வருகிறது ஆனால் பல்லிகளை காண்பதுதான் அரிதாயிருக்கிறது.மேசையிலிருக்கிற கொப்பிகளின் மேல் புணர்கிற பல்லிகளைக்கூட கவனித்ததில்லை என்னுடைய இரவுகள்.அந்த அளவுக்கு இரவுகளை களவாடியிருந்ததவள் நினைவுகள்.

கடந்த இரவில் குடித்துவைத்த தேத்தண்ணிக்கிளாசை சரிக்கிற சாம்பல் நிறப்பல்லி ஒவ்வொரு காலையிலும் என் கண்களில் படும். பல நாட்களை நான் கொஞ்சம் பெரிய அளவில் பயமுறுத்துவது போல் பார்க்கிற அந்த பல்லிக்கான புன்முறுவல் அல்லது வசையோடு தொடங்கியிருக்கிறேன்.ஆனால் ஒரு போதும் அதனை தாக்க முயன்றதில்லை.

இந்த சொற்களை எழுதிக்கொண்டிருக்கையில் கூட காதல், பெண்மை, காமம், குற்றவுணர்வு பயம், என நிறைய விசயங்கள் வந்து போயிற்று. இந்தசொற்களுனுக்கான புரிதல்களை உங்களிடமே விட்டுவிடுகிறேன்!

பல்லிகள் எப்பொழுதும் பேசுவவதில்லை.எப்பொழுதாவது பேசுகின்றன அப்பொழுது அவை பயமுறுத்தவும் செய்கின்றன.

தொடர்ந்து பல்லிகள் பேசுவதை கேட்கலாம்.


picture: http://www.redbubble.com/

Friday, August 7, 2009

பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகள் - 01





தேகம் திமிர் பிடித்தலைந்து கொண்டிருக்கிற காலமிது
பிடிமானமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது மனது
கட்டிப்போடுகிற பிரியங்கள் கொண்டென்னை இறுகப்பற்றிக்கொள்
உனக்கான யதார்த்தங்களை சுமந்தலைகிறதெனது உயிர்
என்னை கையாள்கிற நிதானங்கள் உனக்கிருக்கிறதாய்
உனது பற்றுதலுக்கு காத்திருக்கிறதெனது கணங்கள்
காலம் இனிய பதிலொன்றை சொல்லக்கூடும்
நீ என்னை காதலிக்காமல் இருந்து விடாதே.

____________________________________________________

பார்க்கிற பெண்களோடெல்லாம் தனகிக்கொண்டு திரிந்த என்னோடு தனகுகிறவளாக வந்த ராட்சஸி, மயக்கம் தருகிற கறுப்பு நிறமென காலத்தை கடத்திக்கொண்டு போகிற அழகுகளோடு எனக்குள் வரையப்பட்டிருந்த பெண்மைய உருவெடுத்து நடமாடினாள்.

காலம் நானறிய என் வாழ்வை கொண்டாடத்தொடங்கிய நாட்களின் தொடக்கமிது பரவசங்களை புதிது புதிதாய் அறிமுகம் செய்து கொண்டே இருந்தாள் அவள். இது வரை எழுதப்பட்ட என் வாழ்வின் வாசனை மிகுந்த நாட்குறிப்புகளுக்கு சொந்தக்காரியாய் அவளிருக்கிறாள்.

ஞாபகங்கள் தின்று கொண்டிருக்கிற எனக்குள் இருந்து பெருகிக்கொண்டிருக்கிற சொற்களை எழுதத் தொடங்கியிருக்கிறேன் இது இத்தோடு முடிந்து விடுகிற விசயம் போல் தெரியவில்லை இதன் முடிவில் அல்லது ஏதோவொரு பகுதியல் உங்களுக்கு கறுப்பியை அறிமுகப்படுத்துவேன்.


picture:photographersdirect.com

Thursday, August 6, 2009

சுவாரஸ்யமில்லாத பதிவு...

என்ன கேட்டாலும் சலிக்காமல் செய்து கொடுக்கிற அன்பானவர். அட பாவிகளா நாந்தானா கிடைச்சேன் என்று கேட்டாலும் என் அறுவைகளுக்கெல்லாம் கழுத்தைக்கொடுத்து விட்டு சிரித்தபடி இருக்கிற தல தமிழ்பிரியன் மூலமாக கிடைத்திருந்தது ஒரு சந்தர்ப்பம். ஆனால் அதை எப்படி பயன் படுத்துவதென்று தெரியவில்லை அனேகமாய் எனக்கு தெரிந்த அனைவரும் ஏதோ ஒரு வரிடமிருந்து இந்து பகிர்வை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.


எனக்கு புதிதாய் யாரையும் தெரியவில்லை நேரமில்லாததும் என் அடிப்படை இயல்புகளில் ஒன்றான மிகு சோம்பலையும் தவிர்க்க முடியாததில் அதிகம் படிக்கவும் முடிவதில்லை இணையத்தில், அதனால் பல பதிவர்களை தவற விட்டுக்கொண்டிருக்கிறேன்.


பழையவர்களை திரும்ப எழுத அழைப்பதற்காகத்தான் இந்த சந்தர்ப்பத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன் யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத படிக்கு நேரம் சதி செய்திருக்கிறது ஆனால் மனதுக்குள் நிறையப்பேரை நினைத்திருந்தேன்.இதில் முக்கியமான ஒரு பதிவர் அண்ணன் செந்தழல்ரவிதான்.





இது மட்டுமல்ல இளமைக்காலங்கள் என்று ஒரு தொடர் பதிவுக்கும் என்னை அழைத்திருந்தார் அந்த பதிவையும் எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேனேயொழிய எழுதவில்லை( இதை தானேய்யா மூணு மாதமா சொல்லுற). இதை ஒரு சில குறிப்புகள், புகைப்படங்களோடு தரலாம் என நினைத்திருக்கிறேன் ஆனால் புகைப்படங்களும் உறுதியான தகவல்களும் எனக்கின்னும் கிடைக்கவில்லை அவ்வளவுதான் இதுக்கான காரணம்.

முடிந்தவரை ஞானசம்பந்தர் கலைமன்றம் பற்றி முழுமையான ஆவணமாக அதனை எழுத நினைத்திருக்கிறேன் அதனால இந்த இளைமைக்காலங்கள் தொடர் பதிவை எழுதுறதுக்கு எனக்கு பதிலாக நிஜமா நல்லவைனை மேடைக்கு அழைக்கிறேன், அண்ணன் கொசுவத்தி சுத்துறதுல நெம்ப திறமையான ஆள் என்பது அவரது பதிவுகளை படிச்ச ஆக்களுக்கு தெரியும் அழகா feel பண்ணி எழுதுவார்.

பணி நிமித்தம் வேறு இடத்துக்கு மாற்றலாக வேண்டிய காரணம் இருப்பதால் இன்றொடு இணையத்தொடர்புகள் சில நாட்களுக்கு இருக்காதென்று உங்களுக்கெல்லாம் நல்ல செய்தி சொல்லி இருக்கும் தமிழ்பிரியன் படிக்க வேண்டும் என்பதற்காகவே அவசரமாய் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

*நேற்றெழுதிய பதிவு,ஆனா சோகம் என்னன்னா அதை இப்பொழுதுதான் பதிவாக்க முடிந்திருக்கிறது.


சவுதி வாழ்க்கையில் எனக்கிருக்கிற ஒரே வரவு இணையம்தான். இணையம் மூலம்தான் வேறொரு உலகம் எனக்கு கிடைத்திருக்கிறது.முன்னர் இருந்த நிலையிலிருந்து வெகுவாக மாறியிருக்கிறேன் இது பற்றி பின்னர்.ஏற்கனவே இருக்கனிற ஜமாலன்,முபாரக்(இவர்கள் இருவரும் இங்கே இருப்பது எனக்கு கிடைத்த சந்தர்ப்பம், அவர்களுக்கு அமைந்த கொடுமை)மற்றும் gulftamilan ஆகியோரோடு ரௌத்ரனும் அருகே வந்து சேர்ந்திருக்கிறார். இவருக்கு என்னை விட வயது அதிகமிருக்குமென்று நினைத்தேன் பெயர்தான் ரௌத்ரனே ஒழிய மென்மையாய் பெண்களுக்கு மிகப்பிடிக்கிற தோற்றத்தில் கலரும் மீசையுமாய் கலக்கலாய் இருக்கிறார்.

)

Gulftamilan -
பழைய காலம் முதலான வலைப்பூ வாசகர் பல பதிவர்களுக்கு மறந்து போன அவர்கள் பதிவுகளை கூட நினைவில் வைத்திருக்கிற ஒருவர்.


விதண்டாவாதம்:

இவனுக்கெல்லாம் ஒரு பதிவர்ங்கிற அங்கீகாரத்தை கொடுத்தா பதிவே எழுதாம பதிவு போடுறான் பாருய்யா என்று நிறைய குத்துகள் வரும் என்ன செய்வது மக்கள் நேரமின்மை சதி செய்து விட்டது.(எழுத தெரியவில்லை என்பதை வேறெப்படி சொல்ல)


*விருது கொடுத்த அண்ணனுக்கு நன்றிகள்.

Friday, July 24, 2009

நடுத்தரங்களின் விளிம்பு...




மிகுசலிப்பும்,
சொற்ப எதிர்பார்ப்புகளும்,
என கழிகிற நாட்கள் பழகிவிட்டது!
நடுஇரவின் தூக்கமின்மைகளையும்
குற்றவுணர்வுகளின் தடுமாற்றங்களையும்,
மற்றவைகளையும் தவிர்க்கத்தெரியவில்லை,
பொறுப்புகளும் நகர்கிற வயதும்
முரண்களில் இருப்பதை
நீங்கள் உணராமலிருப்தையும்,
என்மீதான அவர்கள் நம்பிக்கைளையும்,
தெறித்துக்கொண்டிருக்கிற என்
குறிமீதான சாபங்களையும் ஏற்றுக்கொள்கிறேன்
இல்லாத புனிதங்களின் துணையோடு,
அது வரையும் நீ என்னை சந்திக்காமலிரு!

Tuesday, July 21, 2009

முடியாத கனவு...





மூச்சுவாங்கிய மார்புகள் அதிர
குதித்துக்கொண்டாடிய மலை முகடும்
காசியப்ப ராசனின் நீராடும் தடாகமும் என
முகில் தழுவிய மலை உச்சியில்
மஞ்சள் தேவதையாய்
உன்னை முத்தமிடத்தூண்டிய நீயும்
என்னை இயங்காது தகர்த்த சூழ்நிலையும்
நெடுநாட்களாய்
நீராடும் நீயும், மலையும், சில பறவைகளும்
என கனவில் விரட்டுவன...

அந்த இரவு முழுவதும் என்னோடே இருந்தாய்
உதடுகள் அடக்கிய வார்த்தைகள் முழுவதும்
வெப்பம் நிரம்பிய உள்ளங்ககைளிரண்டில் புரிவித்தாய்
அப்பொழுதில் உன் விரல்களும் நகங்களும் பேசின.

விடிகிறது என்கிற பொழுதுகளில் எழுப்பி
வளைவுகள் வரரை முன்னேறிய என்
கனவினை கலைத்தாய் அந்த
கனவு இன்னமும் முடியவேயில்லை...



பின்குறிப்புகள்:

\\
மலைகளில் காணாமல் போன தேவதைகள் எழுத காரணமாயிருந்தது இந்த வரிகள் மட்டுமே ஆனால் இந்த வரிகளுக்கு ஒரு சிறுகுறிப்பை எழுதலாம் என்று எழுதுகையில் அது ஒரு நீளமான கதையாகிற்று.

\\
அதில் இவள்தான் நிஜம்.

\\
நன்றி இங்கே பெயர் சொல்ல விரும்பாத குண்டம்மாவுக்கு.

Monday, July 6, 2009

ரணகளக்குறிப்புகள் அல்லது கொட்டாவிகள்...!

புனைவு.

இரு
நூற்று
நாற்பத்து
ஏழு
எழுத்துக்களும்,
புதிய சொற்களும்
அல்லது, மிக
பழைய சொற்களும்.


புரிதலின் இல்லாமை

எனக்கும்,
உனக்கும்,
அவர்களுக்கும்,
நிறைய
வித்தியாசங்களிருக்கிறது
ஒரேயொரு
ஒற்றுமை இருக்கிறது.



தலைவர் வருகிறார்


தமிழின தலைவர்..
தமிழக முதல்வர்..
டாக்டர்..
தலைவர்...
நமது தலைவர் தொலைக்காட்சியில்...!



சமாதான இலங்கை.

வடக்கின் வசந்தம்,
அதிகாரப்பகிர்வு,
நாடுகடந்த அரசு,
போடா அரைலூசு
இடைத்தங்கல் முகாமில
இல்லையடா கக்கூசு!



கொட்டாவிகள்

இசம்,
தத்துவம்,
இலக்கியம்,
தலித்தியம்,
பார்ப்பனீயம்,
மார்க்கசியம்,
உலகமயம்,
எல்லாம் பேசும்
உண்ட மயக்கம்!


எழுத்துலகம்

சந்திப்பு,
ஒன்று கூடல்,
கூட்டம்,
பாசறை,
முகவுரை,
பொழிப்புரை,
தொகுப்புரை,
பழிப்புரை.


தெரியாதது

எனக்கு
எல்லாம்
தெரியும்
உனக்கு
எதுவும்
தெரியாது

இருவருக்கும்
வாழ்க்கை
தெரியாது.

இலக்கியம்

தமிழ்,
ஆங்கிலம்,
லத்தீன்,
பிரெஞ்சு,
எல்லலாம் வாசித்திருக்கிறாய்
வாழ்க்கையும்
மனிதர்களும் தவிர.

வாசகன்

செயமோகன்,
சுயமோகி,
இணையம்,
இலக்கிய நோய்கள்,
பதிவுகள்,
பின்னூட்ட குசுக்கள்,
சாரு,
சைக்கோ,
பாட்டு,
பக்கவாத்தியங்கள்,
கூத்தாடிகள்,
நடுவர்கள்,
தமிழ்மணம்,
ஆனந்தவிகடன்,
பிரபலங்கள்,
எல்லோரும் இருக்கிறார்கள்
என்னைத்தவிர.


புதுக்கவிதை

கொண்டையில பூக்காடு
கூடையில கருவாடு
பு--யில மயிர்க்காடு
பொத்தி வச்சு பூப்போடு
நாட்டுல படும் பாடு
நக்கி தின்று புகழ் பாடு
சோத்துக்கு பெரும்பாடு
இலக்கியம் ஒரு கேடு
இது ஒரு புதுக்கவிதை
இதை நீ கவட்டுக்குள் வை.


சின்னத்திரை...

நடன நிகழ்ச்சிகள்
நெடுந்தொடர்கள்
நிறையப்பெண்கள்
நிறையக்கதைகள்
நிறைய விளம்பரங்கள்
திரும்பத்
திரும்பத்
திரும்பத்
திரும்பத்
திரும்ப பெண்கள்,

நேற்று அவள்
இன்றைக்கு இவள்
நாளைக்கு மற்றவள்
மற்றொருநாள் இன்னொருத்தி
இன்னொரு நாள் அவளும் இவளும்

வாரம் முழுவதும் கனவுகள்

வாழ்க சின்னத்திரை,
வாழ்க தமிழ் தொலைக்காட்சி,
ஒழிக குறிகள்.


எழுத மறந்த குறிப்பு:

நாங்களும் இருக்கமுல்ல(நானும் ரவுடிதான்)

எப்பூடி...!

Thursday, July 2, 2009

நெற்றிக்கண்களும் குற்றங்களும்...!








*
செண்பகப்பாண்டியர்களும்
நக்கீரர்களும்
நெற்றிக்கண்களும்
இருந்து கொள்ள,
இருப்புக்கு அலைவது
தருமிகள்தான்.


*

அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி
சங்கதனை கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ
எம் கவியை ஆராய்ந்து சொல்லத்தக்கவன்?
_____________________

சங்கறுப்பது எங்கள் குலம்
சங்கரனார்க்கேது குலம் - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை!


பின்குறிப்பு:

1)
சண்டைகளும் சச்சரவுகளுமாய் இருக்கிறது இலக்கியச்சூழல்.இந்த 'சீனை" எந்தச்சண்டைக்கென்றாலும் பொருத்திப்பார்த்துக்கொள்க அது உங்கள் வாசிப்புக்கும் கற்பனைக்குமானது மற்றும்படி இது ஒரு இலக்கிய கும்மி.

Friday, June 26, 2009

மலைகளில் காணாமல்போன தேவதைகள்...



மலைகளில் நிகழ்கிற ரகசியங்களை நதிகள் கொண்டு செல்கின்றன வாழ்க்கையில் நிகழ்கிற ரகசியங்களை காலம் காவிக்கொண்டு நகர்கிறது.அருவிகள் விழுகிற ஓசைகள் மலைகளில் பகிர்கிற கதைகளின் கிசுகிசுப்புகளாகவே எனக்கு கேட்கிறது.எவ்வளவு மனிதர்கள்,எவ்வளவு கதைகள், எவ்வளவு ரகசியங்களை கொண்டிருக்கும் இந்த மலைகள். பறவைகள் பகிரங்கமாய் கூடுகிற மலைகளை ஏறுகையில் மனிதன் ஆதிகாலத்துக்கு போய்விடுகிறான். ஒரு சுதந்திர உணர்வை அடைகிறான். மலையின் உச்சியில் இருக்கும் பொழுதுகளில் உற்சாக மனோநிலை இருப்பது இந்த சுதந்திர உணர்வுகளின் வெளிப்பாடாய் இருக்கலாம்.பாரங்கள்,நிர்ப்பந்தங்கள், கவலைகள் எல்லாம் கீழே நகர வாழ்க்கையின் உயரத்துக்கு வந்து விட்டதைப்போலொரு உணர்வு மலைகளின் உச்சிகளில் கிடைக்கிறது.கைகளை அகல விரித்து தலைக்கு மேலே போகிற முகில்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டு பறக்கவாரம்பித்துவிட்டதாக பாவனை செய்து கொள்கிற ஆனந்தம் மலைகளில் நிகழ்கிறது.

___________________________________________________





பால்ய காலத்தில் அறிமுகமான தேவதைகள் மலைகளில் வசிப்பதாகத்தான் அறிந்திருக்கிறேன். முன்பொரு நாளில் வேதைகள் மலைகளில் வாழ்ந்ததார்களாம், மழை நின்ற இரவுப்பொழுதுகளில் அவர்கள் நதிகளில் மிதந்து வருவார்களாம், நதிகள் வற்றுகிற காலங்களில் காற்றில் மிதந்து வருவார்களாம்.எனக்கு நம்பிக்கை இருந்தது,நான் மலைகளில் இருக்கிற தேவதைகளை தேடத்தொடங்கியிருந்தேன்.



"இப்பொழுது தேவதைகள் இல்லையா" என்றேன்.

"இருக்கிறார்கள் ஆனால் மலைகளில் வசிப்பதில்லை"

என்று அலட்சியமாய் சொன்ன மிருணாளினி ஆளை அடிக்கிற அழகி! கொஞ்சம் மாநிறம் என்று சொல்லக்கூடிய நிறைய கறுப்பு நிறமவள்.கால்களை நீட்டி சாய்ந்தமர்ந்து,மிருதுவாய் மூடிய கண்களோடு உதடுகள் நனையாமல் மதுவருந்துகிற அவளைப்பார்க்கையில் தேவதைகள் மதுபான விடுதிகளுக்கு வருவார்கள் என்பதாகத்தான் தோன்றியது.

அறுபத்தொரு நாட்களுக்கு முன்னர் அப்படியவள் சொல்லிய இரவில் நாங்கள் ஆடைகளின்றி உறங்கியிருந்தோம். அதற்கு பிறகு அவளை பீதுருதாலகால(Pidurutalagala)மலையில் தொலைத்துவிட்டேன்.

______________________________________________________________




பெண்களைப்போலவே வளைவுகளும் அழகுகளும் ரகசியங்களும் என பொதிந்து கிடக்கிறது மலை, அந்த மலையை அதிசயங்கள் நிரம்பிய பெண்ணொருத்தியோடு ஏறுவதென்பது அற்புதமான அனுபவமாகத்தான் இருக்க முடியும்.

இப்பொழுது நான் சொல்ல வந்தது ஒரு காலத்தில் ராசதானியாக அல்லது கோட்டையாக விளங்கிய சிகிரியா(Sigiriya Rock)மலையைப்பற்றியது அல்ல அந்த மலையில் நடந்த சில கதைகள்தான். மலை என்று சொல்வதை விட அந்தப்புரம் என்பது அழகு,இந்த மலையின் உச்சி வரை மூன்று தடைவைகள் போய் வந்திருக்கிறேன்.

முதல்தடவையின் பொழுது ஒரு அரசாங்க வேலை செய்கிற குழுவினரோடு சென்றிருந்தேன் எங்கள் ஊரிலிருந்து ஆரம்பித்த இலங்கை முழுவதுக்குமான பயணம் அது. அதிலும் ஒரு தோழி கிடைத்திருந்தாள். நான் தான் அந்த "செட்டிலேயே" வயது குறைந்தவனாயிருந்தேன் அவள் என்னோடு நெருக்கமாயிருந்தது அந்த குழுவில் வந்திருந்த அவளோடு வேலை செய்கிற அனேகமானவர்களுக்கு ஆச்சரியமாயும் எரிச்சலாயும் இருந்திருக்கலாம்!அவள் அடிக்கடி என்னை தேடிக்கொண்டதும், அந்த பயணம் முழுவதும் அக்கறையோடென்னை கவனித்துக்கொண்டதும், தான் ஏதாவது வாங்கினால் எனக்கும் சேர்த்து வாங்கியதும், என்னோடு இருந்து பயணம் செய்ததும்,என் கைகளைப்பிடித்துக்கொண்டு கதைகள் பேசியதும், நிச்சயமாய் மற்றவர்களுக்கு ஆச்சரிமாய்தான் இருந்திருக்கும்.

அவளுக்கும் எனக்கும் இடையில் அப்படியொரு ஈடுபாடிருந்தது, என்னை விட அவள் என்னோடு அதிகமாய் நெருங்கியிருந்தாள்.சொல்லப்போனால் நான் அந்த சுற்றுலாவில் இணைந்து கொள்வதற்கும்,இலங்கை முழுவதும் போய் வருவதற்கும் அவள்தான் காரணமாயிருந்தாள்! வேறொரு நண்பர் மூலம் அந்த சுற்றுலாவுக்கான அழைப்பு வந்திருந்தாலும் அவளது ஆர்வத்துக்கும் அன்புக்குமாகவே பயணத்துக்கு வருவைத உறுதி செய்துகொண்டேன். அவள் மனம் முழுவதும் ஏதோ ஒரு நெருக்கம் வைத்திருந்தாள் என்னோடு.

பல முறை நிகழ்ந்திருந்தாலும் நுவரெலியாவில் தங்கியிருந்த பின்னிரவில் உறங்கப்போவதற்கு முன்பாக நிகழ்ந்த அந்த தருணம் எந்த வைகயானதென்கிற முடிவுக்கு வர முதலே விலகிக்கொண்டோம். இப்பொழுதும் அவள் ரகசியமாய் சிரிக்கிறவளாகவே இருக்கிறாள்.

யாருமற்ற நடுமத்தியான வெயிலில் சிகிரிய புல்வெளியொன்றில் என்னோடு அவள் வெளிர்பச்சை நிற துப்படாவில் இளமஞ்சள் நிறமாய் படுத்திருந்தாள்.


பிந்திய குறிப்பு : அவள் கல்யாணமானவளென்பது எனக்கு தெரிந்திருந்தது.



***

இரண்டாவது முறை அது ஒரு கலகலவென்கிற அனுபவம். கிட்டத்தட்ட ஒரே வயதுக்கார சில யாழப்பாணத்து அழகிகள், பல பெடியள் மற்றும் அலுவலக அங்கத்தவர்களென ஒரு கலந்து கட்டிய குழு என்னுடைய ஹொட்டேல் முகாமைத்துவ பள்ளியில் இருந்து புறப்பட்டோம்.பாட்டும் கூத்தும் கும்மாளமும் என களைகட்டிய பயணம்.சென்றமுறையும் பாடினேன் என்றாலும் இந்தமுறை பாடி-கொண்டாடினோம். சிகிரியாவை திருகோண மலையிலிருந்து ஹபரண போய் அங்கிருந்து சென்றடைந்தோம்.அந்த மலையேறிய நிகழ்வில் கொஞ்சம் ஒடிசலாய் இருந்த அவள் ஒரு கத்தோலிக்க தேவதையாய் இருந்தாள் ஆன்(Anne) என்பது அவளுடைய பெயர்! நெற்றியில் விழுகிற முடிகளை அடிக்கொரு தடவை எடுத்து விட்டவாறே லேசாய் மூச்சுவாங்கி கன்னங்கள் வியர்க்க அவள் ஏறிவந்த மலை இன்னமும் அழகாயிருந்தது. Anne எங்கே இருக்கிறாய் இப்பொழுது, கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை பாடலை இப்பொழுதும் நினைவில் வைத்து பாடுகிறாயா? பியிரடிக்காமலே போதையேற்றுகிற விழிகளோடிருந்த இன்னொருத்தி அணைகிற தருணங்களுக்கு அடிக்கடி நெருங்கினாலும் பிடிகொடுக்காமலே இருந்தாள். இவளுக்காகவே "நாட்டுச்சரக்கு நச்சுன்னுதான் இருக்கு" என்கிற பாடல்போன்ற ஒன்றை பயணத்தின்போது ஏழு தடவைகள் பாடியிருப்பேன்.

மலையேறாமல் பள்ளி அதிபரோடு அடிவாரத்திலேயே இருந்துவிட்ட குந்தவி பயணத்தின் ஆரம்பம் முதலே என்னை அதிகம் தொந்தரவு செய்து கொண்டிருந்தாள். அமைதியான புன்னகையோடு சகலதிலும் கலந்து கொண்ட அவள் மனதளவில் நெருங்கியிருந்தாள். வட்ட முகம், பளிச்சென்ற கண்கள், கவிதையான மொழி என மனதுக்குள் நிறைய இடம் பிடித்தது இவள்தான்...பயணத்தின் முடிவில் சில வரிகள் எழுதி கையொப்பமிட்டுக்கொடுத்த அந்த குறிப்பபேடு காணாமல் போன நாட்களில் நிறையவே கவலைப்பட்டேன்.

***

திருகோணமலை Club Oceanic ஹொட்டலின் நீச்சல் குளத்துக்கருகில் வட்டமாய் உயர இருக்கைகளில் அமர்ந்தவாறே பியர் அருந்திக்கொண்டிருந்தோம்.மெதுவாக பாடுவதற்கு அனுமதி கொடுத்திருந்தது விடுதி முகாமைத்துவம்.

"வாவென்று சொலல்லாமல் வருவதில்லையா-காதல்
தாவென்று சொல்லலாமல் தருவதில்லையா"

என்கிற வரிகளில் ஆரம்பித்து முழுவதுமாய் அந்த பாடலை பாடி முடிக்கையில் உற்சாக கை தட்டல்களுக்கு நடுவிலும் எதிரேயிருந்த ஆனினது கண்கள் தாழ்ந்து சிரித்ததை நான் தவறவிடவில்லை. போத்தலில் மீதமிருந்த முழுவதையும் அவளைப்பார்த்துக்கொண்டே ஒரே மூச்சில் குடித்து முடிதேன் இப்பொழுது அவள் என்னை கவனிக்கத்தவறவில்லை என்பதை கண்களிலேயே காட்டினாள். அப்பொழுது அவள் பாட ஆரம்பித்திருந்தாள்-

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை-என்
கண்களை பறித்துக்கொண்டும் ஏனின்னும் தூங்கவில்லை...

எல்லோரும் உறங்கிய அந்த இரவில் என்னோடு விழித்திருந்த Anne தங்க நிற உடலில் மஞ்சள் நிற மணலை அணிந்திருந்தாள்.





***
இதையெல்லாம் மறந்து விடுவோம்!
மூன்றாவது முறையாயும் திருகோணமலையில் வேலை செய்து கொண்டிருந்த நாட்களில், திருகோணமலையில் இருந்த உறவுகளோடு கனடாவிலிருந்து விடுமுறையில் வந்திருந்த குடும்பம் ஒன்றும் அவளது குடும்பமும் சேர்ந்து கொள்ள எங்கேயாவது போவதென்று- சிகிரியாவென்று முடிவாயிற்று அதுவும்.

இந்தப்பயணம் முற்றிலும் வித்தியாசமானதாய்,எனக்கு நெருக்கமாயில்லாத என்னுடைய அப்பாவழி உறவினர்கள் பழக்கம் குறைந்த சூழல் என கொஞ்சம் இறுக்கமாயிருந்து.கடக்க வேண்டிய சில சோதனைச்சாவடிகளை தாண்டிய பிறகு சூழல் கொஞ்சம் உற்சாகமாய் மாறியது. மொத்தம் பத்து பேர் மட்டும் இருந்த அந்த பயணத்தில் அவள் மட்டுமே எனக்கு நெருக்கமானவளாயிருந்தாள்.

சூழல் கொஞ்சம் இயல்புக்கு மாறிவிட கலகலப்பாய் இருந்தது, அப்பொழுது யாரவாது பாடலாமே என்கையில் அவள் என்னை நோக்கி விழிகளை உயர்த்தினாள்,எனக்கு மட்டும் புரிகிற மொழியில் பாடென்றாள். விழிகளில் பாடமுடியுமென்பதை அவள் அப்பொழுதிலிருந்து அந்த நாட்கள் முழுவதும் அடிக்கடி உணர்த்திக்கொண்டிருந்தாள்.

"கண்பேசும் வார்ததைகள் புரிவதில்லை" என்று தொடங்கிய அந்தப்பாடல் அவளது கண்கள் பேசிய மொழிகளுக்கான எந்தன் குறிப்புகளாய் இருந்தது.அவள் கன்னங்களுக்கு உள்ளேயும் வெளியே கண்களாலும் சிரித்துக்கொண்டாள்.

அங்கே கொஞ்சம் அடங்க மறுத்தவர்களாய் நாங்கள் இருந்தோம். மலையை அடையும் வரை இரு கரையும் மரங்கள் அணிவகுத்திருந்த சிவப்பு மண் பாதையில் கைகோர்த்தது போல் தோள்கள் உரச நடந்த அனுபவம் தனி. இப்பொழுதும் முதுகுக்கு பின்னால் குறைசொல்லுதலும் குறுகுறுத்த பார்வைகளும் இருந்துதானிருக்கிறது.அது கடைசியாய் என் காதுக்கும் அவள் மூலமாய் வந்து சேர்ந்தது. இதனை சொல்கையில் அவள் விழிகள் துளிர்த்து விடும்போல ஈரமாகியிருந்தன.கடினப்பட்டு தவிர்த்துக்கொண்டாள்.

மலையில் மூன்றில் ஒரு பங்கை எல்லோருமாக ஏறினோம் அதற்கு பிறகு முடியவில்லை என மற்றவர்கள் பின்தங்கிவிட நானும் அவளும் வேகமாய் முன்னேறினோம். குண்டும் இல்லாமல் ஒல்லியும் இல்லாமல் அளவாய் தெரிந்த அவள் நெருக்கமான அழகுகளில் இருந்தாள். தழைவாக கறுப்பு நிற நூல்வளையம் போட்டிருந்த அவள் கூந்தல் காற்றில் அலைந்து கன்னங்களில் கோடுகள் போட்டிருந்தது கொஞ்சம் மிகையான உரோமங்களோடிருந்த அவளது பின்களுத்தில் துளிர்த்திருந்த வியர்வைத்துளிகள் வெயில் பட்டு மின்னியது.சிரித்து சிரித்து மூச்சுவாங்கி மலையேறிய அவளோடு நான் மிதந்து கொண்டிருந்தேன்.

ஓவியங்கள் இருக்கிற சுவர்ப்பகுதிக்கு வந்து சேர்ந்தோம் நிதானமாய் ஒவ்வொரு ஓவியமாய் கவனித்தாள். ஓவியங்களை தொடக்கூடாது என்கிற உத்தரவை காவலுக்கு நின்றவர் அடிக்கடி சொல்லிக்கிக்கொண்டிருந்ததில் ஓவியங்களுக்கு பதில் நான் அவளது கைகளை அழுத்தமாய் வருடிப்பற்றினேன்.

பாதி ஏறி முடித்து சிங்கத்தின் கால்கள் போல அமைக்கப்பட்ட பகுதிக்கு வந்து சேர்ந்தோம் அங்கே கொஞ்சம் இளைப்பாறினாள்.மலையின் மறுபக்கத்திற்கு போய் காடாக இருந்த இடத்தைப்பார்த்தோம் அந்த ஓடை மாதிரியான சுவரோரம் இருந்த இளம் சிங்கள காதல் ஜோடியை கவனித்தவள் என்னை நோக்கி கண்களில் எதையோ சொன்னாள்,அவள் என்ன சொன்னாள் அல்லது நினைத்தாள் என்பது உங்களுக்கு தேவையில்லாதது.

முகட்டுக்கு செல்கிற ஏணிப்படிகளில் ஏறி முடிக்கும் வரை கவனம் என்கிற வார்ததைகளைத்தவிர வேறெதும் சொல்லாமல் வந்தவள் ஏறி முடிந்ததும் அங்கும் இங்கும் என ஓடி கொண்டாடினாள். ஏற்கனவே இரண்டு முறை பார்த்திருந்ததில் அவளுடைய சந்தோசங்களை கவனித்துக்கொண்டிருந்தேன் நான்...

காதல்,காதல்,காதல் என்று...
எனக்குள் இருக்கிற காதலை நான் என்னால் முடிந்தவரை சத்தமாக அந்த மலை முகட்டின் வெளியில் மொழிந்தேன்,அவள் என்னோடு கைகோர்த்துக்கொண்டாள்.காசியப்ப மன்னனின் நீர்தடாகத்தில் கை நனைத்துக்கொண்டோம்,அந்தக்கணங்களில் அந்தப்புரத்து தடாகத்தில் எங்கள் உயிர்கள் நனைந்திருந்தது.

அந்த மலையின் உச்சியில் புகைக்க வேண்டும் போலிருந்தது அதற்கு அவள் காரணமாயிருக்கலாம் அல்லது இனியந்த மலைக்கு வருகிற சந்தர்ப்பம் எனக்கு இருக்குமோ என்பது காரணமாயிருக்கலாம்.நான் புகைப்பேன் என்பது மற்றவார்களுக்கு தெரியாததாய் அல்லது பிடிக்காததாய் இருந்தது. நான் ஒரு சிகரெட்டை இழுத்து முடிக்கும் வரை அருகிலேயே நின்றாள். மற்றவர்கள் ஏறி வரவும் எல்லோருமாய் புகைப்படங்கள எடுத்துக்கொண்டோம். இறங்கும் பொழுதும் கடைசியாகவே இறங்கினோம்.இறங்குவதற்கு முன்பொரு சிகரெட் வேண்டுமென கேட்டதில் பறித்து வைத்திருந்த பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை அனுமதித்தாள் இழுத்து முடிக்கும்வரை எதிரே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

இறங்கி முடிக்கையில் இன்னும் நெருங்கியிருந்தோம்.

மதிய உணவை சிகிரிய உணவகத்தில் எடுத்தோம்.அழகிய பெண்ணொருத்தி பரிமாறிய மதிய உணவும் பொழுதும் ரசனைக்குரியதாயிருந்தது.அவள் பேனையைக்கொழுவியிருந்த இடத்தை காட்டி இப்பொழுதெனக்கொரு பேனையாயிருப்பது பிடித்திருக்கிறதென்று அருகிலிருந்தவளிடம் கிசுகிசுத்தேன் யாருக்கும் தெரியமால் நறுக்கென்று கிள்ளினாள்.

அந்த இரவு முழுவதும் என்னோடு விழித்திருந்த அவள் பனி விழுகிற மல்லிகைப்பந்தலின் அடியில் நிலவொளியினை அணிந்திருந்தாள்.




மலைப்பயணங்கள் போவது சுவாரஸ்யமானது அதுவும் தோழிகளோடு போவது அழகிய சுவாரஸ்யம்.
___________________________________


இந்தக்தைகளை கேட்டுக்கொண்டிருந்தவள்,

"நீ சின்னப்பெடியன் எண்டெல்லோ நினைச்சன்" என்றாள்.
இப்பொழுதும் என்னை அப்படித்தான் நினைப்பதாக அவளது உதடுகள் காட்டிக்கொடுத்தன.

நான் சின்னப்பெடியனாய் இருப்பது என்னுடைய பலம், எல்லாத்தேவதைகளோடும் பழக முடிகிறது இந்த தோற்றத்தில்தான்.

"நீ..கூட என்னை அப்படி நம்பித்தானே வந்தாய்" என்கிற அவளது உண்மையை வெளிப்படுத்தினேன்.

இப்பவும் அப்படித்தான் நினைக்கிறேன் அனால் உனக்கு முத்தங்களைப்பற்றி தெரிந்திருக்கிறதென்பதை முதல்நாள் இரவே அறிந்துகொண்டேன்.

"கலங்கடிக்கிறாய்" என்றாள் கிறக்கமாக.

"இப்பொழுது என்னை ஒரு முத்தத்துக்கு அனுமதி"

"அவசரப்படுகிறாய் டியர்" என்றவள் கொங்கைகள் அதிர சிரித்தாள்.

இரண்டாவது குவளையில் ஐஸ் கட்டிகளை போட்டுக்கொண்டு அணிந்திருந்த குளிர்ச்சட்டையை களற்றி கதிரையில் போட்டாள் அது ஒரு தேவதை தன் சிறகுகளை களைவதை ஒத்திருந்தது.மெழுகுதிரி வெளிச்சத்தில் சிவப்பு நிற மதுரச குவளைகளின் பின்னணியில் தெரிந்த அவளது வெளிர் நீல நிற ஆடைகள் மறைத்த மார்புகளின் தொடக்கம், இருக்கிற போதையை என்னவோ செய்தது.

"இப்ப தர்றியா இல்லையா" என்றேன் மறுபடியும்,

"என்னடா சத்தம்போடுறாய்"

'இப்ப இல்லையெண்டால் இண்டைக்கிரவு உன்னை கொன்டிருவன்"

"நீ செய்யுறதும் செய்யாமலிருக்கிறதும் கொல்லுறது மாதிரித்தான்டா இருக்கு,கடும் ஆளடா நீ.."

என்றாள் ஐஸ்கட்டிகளும் மார்புகளும் தழும்ப!

நான் நிதானமாய் சிரித்துக்கொண்டே பாதி சிகரெட்டை அவளிடம் கொடுத்தேன்...

சிகரெட்டை வாங்குவதற்கு முன்னே குனிந்தவள்
"உனக்கொன்று தெரியுமா..நான் எந்தவொரு ஆம்பிளைட்டையும் சிகரெட் வாயங்கியது கிடையாது நீதான் முதல் ஆள்"என்று உதடுகளைக்குவித்து சிரித்தாள்,சிரிக்கும்பொழுதில் அதிர்கிற அவளை கவனிக்காமல் இருக்க முடிவதில்லை.

நானும் யாருக்கும் சிகரெட்டை கொடுத்தில்லை உனக்குத்தான் கொடுத்திருக்கிறேன் என்றேன்.

"இந்தப்பொய்யை என்னட்டை சொல்லலாதை கள்ளா, நீ ஆரெண்டு எனக்கு தெரியும்"

சரி நான் யாரென்பது அவளுக்கு தெரியும் உங்களுக்கு தெரியுமா...

சில இரவுகளை என்னோடு கொண்டாடிய அவளுக்கே என்னை முழுவதும் தெரியாதெனும்பொழுது உங்களுக்கெப்படி தெரியும்?

அவளுக்கு என்னைப்பற்றி தெரியாது.

அவளைப்பற்றி எனக்கு தெரியும்.

பெயர்:பிரிஜ்ஜெட் கிருபாநந்தினி (Bridget Kirubananthini)

இடம்:திருகோணமலை..

வயது:என்னை விட ஏழுவயது அதிகம்

தொழில்: அழகான தொழில்.

கொஞ்சம் திரண்ட தேகம், திணறடிக்கிற அழகு, குறைந்த பட்ச போலித்தனம்,எதுவும் செய்கிற தைரியம், இயல்பாய் நிகழ்த்துகிற காமம் எனக்கே கற்றுக்கொடுப்பாள் என்பதாக முயங்குவாள்.கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன் என்றால் போடா சின்னப்பெடியா என்று சிரிப்பாள்.

நினைவில் நிக்கிற அழகி
கனவில் வருகிற கண்கள்
கருஞ்சந்தன தேகநிறம்
மனோவசியம் செய்கிற வாசனை
என எனது மொழியில் தேவதையாயிருந்தாள்.

இவ்வளவும் போதுமானதாயிருக்கிறது இவளைப்பற்றி!

இப்பொழுது இரண்டாவது போத்தலின் முடிவுக்கு முன்னேறிக்கொண்டிருக்கிற இவளும் நானும் இருப்பது St.Andrews Hotel- Nuwara Eliya,Sri Lanka.இந்த விடுதி எனக்கு மிக பிடித்தமானதாய் இருந்தது, மிருணாளினி என்கிற முதல் தேவதையையும் இங்கே வந்துதான் அவளது மலைக்கு அனுப்பி வைத்திருந்தேன்.இது பிரிட்டிஷ் காலத்து பங்களாக்களில் ஒன்று, ஜெட்விங்(Jetwing)நிறுவனம் இதனை விடுதியாக்கி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது. ஆவி பறக்க தருகிற கறுப்புத்தேநீரும்(Black Tea), உலகத்து வைன் வகையெல்லாம் கிடைக்கிற வசதியும் இந்த விடுதியில் என்னைக்கவர்ந்தவை.

Bridget போதையில் என்னை கிறங்கடிக்கத்தொடங்கினாள்...போதும் என்பதாய் தோன்றியது-தேவதைகள் அதிகம் குடிக்கக்கூடாது.

லேசான ஆட்டத்தோடு அழகுகள் வழிய நின்றவளை கைத்தாங்கலாய் அணைத்துக்கொண்டேன்.
மெதுமெதுவென்கிற தேகம் தளைய " ஹே சின்னப்பெடியா என்னைக்கொண்டு போடா" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள்.

நான் பீதுருதாலகாலவில் ஏறத்தொடங்கினேன்.

"ஏய் என்னைக்கொண்டு போடா" சிணுங்கினாள்...

வெளிச்சமே விழாத மரங்களில் மறைவிலிருந்த பாறையில் அவளை அமரவைத்தேன்

அப்படியே படுத்தவள் "ஒன்றா ரெண்டா ஆசைகள்..." என ராகமாய் முணுமுணுத்தாள். இந்தப்பாடல் தனக்கு பிடிக்கும் என்பதாய் பதினொரு நாட்களில் எழுபத்தொன்பது முறை சொல்லியிருந்தாள்.

பாறையில் அவளொரு தேவதையாய் கிடந்தாள்!

எனக்கு மழை விட்ட இரவில் நதியில் மிதக்கிற தேவதைகள் நினவுக்கு வந்து போயினர்.

நான் நுழைந்து வெளியேறுகிற கலையில் அவள் மீது பரவ ஆரம்பித்தேன்...

விடிகையில் Bridget காணாமல் போயிருந்தாள்.

அவள் விட்டுப்போன அவளது மார்புகளுக்கு நடுவில் ஆடிய நீல நிறக்கண்கள் இப்பொழுது என் கழுத்திலிருக்கிறது.நான் பீதுருதாலகாலவிலிருந்து இறங்கத்தொடங்கினேன்.




உரையாடல் அமைப்பின் சிறுகதைப்போட்டிக்காக இணைக்கப்டுள்ளது.

Friday, June 12, 2009

32 பதில்கள்- எனக்கு பதில் சொல்லத்தெரியாது!



எழுத மறந்த குறிப்பு:
உண்மையில் எனக்கு பதில் சொல்லத்தெரியாது,எனக்குள்ளே இருக்கிற கேள்விகள் போதாதென்று 32 கேள்விகைள அனுப்பி என்னையும் இந்த கேள்விக்கடலில் தத்தளிக்கவைத்த தல தமிழ்பிரியனுக்கு நன்றிகள்.



01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
புனை பெயர் என்பதையும் தாண்டி சின்ன வயதிலிருந்து நெடுநாட்களாய் என்னோடு இருக்கிற பெயர்தான் தமிழ், எனக்குள் இருக்கிற இன்னொரு பரிமாணத்தை அதனோடு சேர்த்திருக்கிறேன் தமிழுக்கும் கறுப்பிக்கும் நெருக்கமான தொடர்பிருக்கிறது.எனக்கு பிடித்தமான பெயர்தான்.

தேவதைகள் கறுப்பு நிறத்தில்தான் இருப்பார்கள் அல்லது நீல நிறத்தில் இருக்கலாம் வெள்ளை நிறத்தில் ஆடைகள்தான் அணிந்திருப்பார்கள்.

கறுப்பி - என்னை ஆக்கிரமித்திருக்கிற தேவதை அல்லது மிக நெருக்கமானதொரு புனைவு இணயத்தில் ஏற்கனவே இன்னொரு கறுப்பி இருப்பதில் தமிழன் என்ற பெயரில் உள்ளே நுழைந்து கொண்டேன் எனக்கு பிடித்த அல்லது எனக்குள் இருக்கிற பெண்மைய(கறுப்பியை) இப்பொழுது பிரகடனப்படுத்தியிருக்கிறேன் நீங்கள் என்னை கறுப்பி என்றே அழைக்கலாம்.


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அழுதது என்று எதைக்கேட்கிறீர்கள் மனம் விட்டு சத்தமாகவா? அல்லது எனையறியாது கண்களில் ஈரம்துளிர்த்து விழுவதையா? வாய்விட்டு அழுததென்றால் சில மாதங்களுக்கு முன்பொரு மிதமான போதையின் இரவில்.

மற்றயது என்றால் அது கடந்த புதன்கிழமை நிகழ்ந்த ஒரு வாசிப்பனுபவம்.அதே புதன்கிழமை இந்த எழுத்தாளரைப்பற்றி சுபவீர பாண்டியன் கூட ஒன்றேசொல் நன்றே சொல் நிகழ்ச்சியில் சொல்லியிருப்பார் அது த.அகிலனைப்பற்றியது! இதைப்பற்றி பின்னர் எழுதுகிறேன்..

அகிலனின் மரணத்தின் வாசனை புத்தகத்தை மூன்றாவுது முறையாக இன்னுமொரு சென்னைவாசியிடம் சொல்லியனுப்பியிருக்கிறேன் இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

அம்மப்பாவின் கையெழுத்தைப்போலிருக்கிற என்னுடைய கையெழுத்து எனக்கு பிடிக்கும் ஆனால் இப்பொழுது பேனை பிடித்து தமிழில் எழுதுகிற சந்தர்ப்பங்கள் குறைவென்பதால் பழைய வடிவத்தை பெறுவது சிரமமானதாகத்தான் இருக்கிறது.

ஆங்கிலம் எழுதத்தெரிந்தால்தானே பிடிக்கும் பிடிக்காதென்பதெல்லாம். :)


4).பிடித்த மதிய உணவு என்ன?

பலது இருக்கு..
மீன் குழம்பும், நெத்தலிப்பொரியலும் கூடவே றால் பொரியலோடும கொஞ்சம் தடிப்பா வச்ச சொதியும் வெள்ளை அல்லது சம்பா அரிசி சோறும் இருந்தால் போதும் ஒரு பிடி பிடிச்சுட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிடலாம்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நான் வேறுயாரேனுமாக இருந்து இப்பொழுது இருக்கிற என்னோடு நட்புவைத்துக் கொள்வேனா என்கிற கருத்துப்படத்தான் இந்தக்கேள்வி ஆரம்பத்தில் இருந்திருக்கிறது ஆக; நிச்சயமாய் எனக்கு என்னை விட்டால் வேறு யார் நல்ல நட்பாக இருக்க முடியும் சொல்லுங்க.


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அனுபவிக்க என்றால் கடலோடு கொஞ்சம் பயம் இருக்கிறது அருவியில் குளித்த அனுபவம் அவ்வளவாக இல்லை மழை நிறையப்பிடிக்கும்.குளிப்பதற்கு என்றால் எனக்கு நெருக்கமான குளியலைறதான்; இங்கே நான் பாடுவேன்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அப்படியெல்லாம் கவனிக்கிற ஆள் கிடையாது, முதலில் பார்க்கும் பொழுது தோற்றம்தான் கண்ணுக்கு தெரிந்தாலும் அவர் எப்படி பேசுகிறார் என்பதைத்தான் நான் கவனிப்பதாக இப்பொழுது தோன்றுகிறது.பெண்களாக இருந்தால் பாதங்களை அழுத்தமாக பார்த்து பின்னர் கண்களை ஊடறுப்பேன்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

முதல் பகுதிக்கு- நானொரு போலி என்கிற தெளிவு எனக்கிருக்கு இருப்பது
இரண்டாம் பகுதிக்கு- பதில் சொல்லத்தெரியவில்லை அலட்சியமான வாழ்க்கை,கனவுகள்,பலவீனங்கள், தேவைகள்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

என்ன கேள்வி இது?
அவளை எனக்கு முழுவதுமாகப்பிடிக்கும் - என்ன செய்தாலும் அவளோடு வாழ்வது பிடித்திருக்கிறது.நிர்ப்பந்தங்களுக்காக அவள் போடுகிற நாடகத்தனம் பிடிக்காதது.

குறிப்பு: எனக்கு இன்னமும் கல்யாணமாகவில்லை.


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

இப்போதைக்கு - புரிதல்கள் நிரம்பிய கறுப்பு நிற தேவதை ஒருத்தி.
புரிதல்களும் சமாதானமும்- ஊரில் இல்லாமல் போனதற்காக.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

இது கேள்வி என்கிறீர்களா..?கறுப்பு நிற நீளக்காற்சட்டையும் மஞ்சள் நீல நிற கோடுகளோடான நீளக்கை சட்டையும் அலுவலகத்தில் இருக்கிறேன்.
கொலைவெறி- ஆடைகள் இல்லாமல் உலகின் அதிசிறந்த மதுரசத்தை (வைன்) பருகிக்கொண்டு ஒரு புனைவெழுதவேண்டும் என்பது கனவில் வந்த பூனைகள் கொடுத்த பல நாள் ஆசை.


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

உனக்குள் நானே உருகும் இரவில் - வேறெங்கோ அழைத்துப்போகிற தன்மை கொண்டது இந்தப்பாடல்.இன்றைக்கு இந்தப்பாடல்தான் ஏழாவது முறையாக கேட்டும் பார்த்தும் கொண்டிருக்கிறேன்.(ஜோதிகா இன்னும் கொஞ்ச நாள் நடித்திருக்கலாம் )




சமீபத்தில் ஒலிக்க விட்ட பாடல்கள் என்றால்

அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
மூக்குத்திப்பூமேலே காத்து
பனித்துளி பனித்தளி பனித்துளி
மேற்கே மேற்கே மேற்கேதான்
சின்னப்பொண்ணு சேலை
பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
எங்கெங்கே எங்கெங்கே
மானம் ஒன்றே வாழ்வெனக்கூறி - ஈழத்து எழுச்சி கீதம்
இன்னும் சில இடைக்காலப்பாடல்கள்!


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

இதெல்லாம் கேள்வி- பல நேரங்களில் எது பிடித்த நிறம் என்று முடிவெடுக்கமுடியாமலிருக்கும்.பொதுவாக கறுப்பு,கறுப்பு-வெள்ளை,மனதை கொள்ளை கொள்கிற விசயங்களில் இருக்கிற எந்த நிறமென்றாலும்.கறுப்பு நிறத்தில் எழுதுகிற பேனைகளைத்தான் விரும்பி உபயோகித்திருக்கிறேன்.

14.பிடித்த மணம்?

நிறைய இருக்கிறது- தனி பதிவாக எழுத முயற்சிக்கிறேன்.இப்பொழுது குறிப்புகளாக.

அம்மாவின் வாசனை.
கடவுள் இருக்கிறாரோ இல்லையோ கோவிலில் வருகிற வாசனை
புதுப்புடைவை
அவள் - அவளது- அவளுடைய அருகாமை.
புது,பழைய புத்தகத்தின் வாசனை.
சில பூக்கள்-
தேவதைகள் சூடிய பூக்களும், பூக்கள் சூடிய கூந்தலும்.
என்னுடைய படுக்கையில் இருப்பது(எனக்கிது வாசனைதான்)
அவளுடைய அறை
என்னுடைய வீடு, ஊர்- இது ஊரைப்பிரிந்திருப்பதற்காக மட்டுமல்ல.
பனங்காய் பணியாரம் சுடுகிற வாசனை.
வைன்.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
நான் அழைக்க விரும்பியருக்கிற இவருக்கு இந்த கேள்விகள் சினத்தை வரவழைக்ககூடும் என்றாலும் அவரை அழைக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன் தொந்தரவுக்கு மன்னிப்பாராக.முடிவற்ற அன்பின் தேடல் எழுதுகிற முபாரக் அண்னதான். இவருடைய கவிதைகளை வாசித்துப்பாருங்கள்.

அடுத்தது தமிழ்நதி ஏற்கனவே அழைத்திருக்கிற அய்யனார்தான் - இவரை மறுபடியும் அழைக்கிறேன் கிறங்கடிக்கிற எழுத்துக்கு சொந்தக்காரன். மகன் பிறந்திருக்கிற சந்தோசத்தில் இருக்கிற இவரிடம் இருந்து கட்டுடைக்கிற பதில்களை எதிர்பார்க்கலாம்.வாழ்த்துக்கள் அய்யானர் மற்றும் குடும்பத்தினருக்கு.

அடுத்தது நிறைய வாசிக்கிற அருண்மொழிவர்மன் நானும் கனடாக்கு வரலாமெண்டு இருக்கிறன் அண்ணன். இவருடைய நினைவுப்பகிர்வுகளும் சில எதிர்வினைகளும் முன்வைத்தல்களும் கவர்கிறது.நல்ல கவனித்தல் இருக்கிற இவர் வீச்சுள்ள எழுத்துகளில் முன்னேறிக்கொண்டிருப்வர்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
சிறுகதை மற்றும் புகழ் பெற்ற மொக்கைகள்- இவர் பதிவுகளை விட இவரைப்பிடிக்கும் ('தல'க்கு மெல்லிய மனசென்று அவரே சொல்லுகிற இவரது தாடிக்குள் இருப்பது மெய்யாலுமே குழந்தை மனசுதான் நம்பிடுங்க :)


17. பிடித்த விளையாட்டு?
ஊரில் அதிகம் விளையாடியது கிரிக்கெட்தான் என்றாலும் வொலிபோல்தான் பிடித்த விளையாட்டு
நெட்போல் - இது அவளுக்காக.
Tennis, foot ball (பார்ப்பதற்கு)
பேணிப்பந்து - ஒரு காலத்தில் கலக்கினோம்.

18.கண்ணாடி அணிபவரா?
போற போக்கைப்பார்த்தல் கெதியில போடவேண்டி வரும்போலகிடக்கு...

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
எனக்கிருக்கிற மனோ நிலையைப்பொறுத்து அமையும் நான் பார்க்கிற திரைப்படங்கள். பெரும்பாலும் உண்மைத்தன்மைக்கு நெருக்கமாக உணர்வோடு எடுக்கப்பட்ட படங்கள்.

*எந்த மனோ நிலையிலும் விஜயகாந்து படம் பார்க்கப்பிடிப்பதில்லை நரசிம்மா என்கிற ஒன்றை பார்த்தபிறகு.

20.கடைசியாகப் பார்த்த படம்?

Perfume- The story of a murderer.
படம் கலைவடிவம்- பழக்காரியின் மார்புக்குள் பதுங்கிக்கொண்டது அந்த இரவு.
கேட்டுக்கொண்டதை ஏற்று மறக்காமல் வாங்கி வந்து கொடுத்த போல்(paul) என்கிற இங்கிலாந்து நண்பருக்கு நன்றி.


21.பிடித்த பருவ காலம் எது?
கோடையும் கோடைகாலத்து அடைமழை நாட்களும், வெளியே செய்வதற்கு எந்த வேலையுமில்லாதிருந்தால் மழைகாலமும். வசப்படுகிற தருணங்கள் இருந்தால் எந்தக்காலமும் பிடித்துப்போய்விடலாம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

இணையக்கோப்பாக - கொரில்லா மற்றுமொரு முறையாக படிக்கிறேன்.

புத்தகமாக -

தெற்கு பார்த்த வீடு - ஜி.சரவணன் சிறுகதைத்தொகுப்பு.

உலகமயமாக்கலும் மார்க்சியமும்-
கோச்சடையும் க.செ பாலசுப்பிரமணியனும் தொகுத்த கட்டுரைத்தொகுப்பு.(சின்ன புத்தகம்தான் ஆனா ரொம்ப நோகடிக்கிறாங்க படித்து முடிக்காமல் விடுவதில்லை)

நன்றி-எழுத்தாளர் ஜமாலன் புத்தகங்கள் பகிர்தலுக்கு.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இதெல்லாம் ஒரு கேள்வி வேறை வேலை இல்லையாப்பா உங்களுக்கு!! ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிப்பேன் என்றாவது கேட்டிருக்கலாம்.
நாள் கணக்கெல்லாம் கிடையாது அனால் தோன்றும் பொழுது மாற்றுவேன்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்- எதை சொல்ல எதை தவிர்க்க
கொலுச்சத்தம், பெண்களின்சிணுங்ககல்கள் , ரகசியக்குரல்களும் பின்னிரவு கிசுகிசுப்புகளும், நரம்புகளை அதிரவைக்கிற பறை,இரவின் நிசப்தம்(இதுவும் ஒரு வகை சத்தம்தான் இரவுகளில்) இங்கே சொல்ல விரும்பாத சிலவை,இன்னும் இருக்கிறது.

பிடிக்காதது - தரையில் கிரீச்சிடுகிற ஓசைகள் இயந்திரங்களின் இரைச்சல்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சவுதி அரேபியா

26.உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

தெரியவில்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

புரிதல் இல்லாத மற்றவர்களை மட்டுமே பார்க்கிற சமுதாயம்.இந்தக்கேள்வியும் அதற்கு பதில் சொல்கிற நானும்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சட்டென்று உணர்ச்சி வசப்படுகிற மனது, கட்டுக்கடங்காத உடல், கோபம் இது பெரும்பாலும் நெருக்கமானவர்களிடமே வெளிப்படுகிறது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

என்னுடைய ஊர்(யாழ்ப்பாணம்),அவளுடைய ஊர்.
நயாகரா(கனடா),இந்தியா,எகிப்து,ரோம்,மாலைதீவுகள்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

என்னை திருப்தி செய்கிற நானாக.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

இதெல்லாம் ஒரு கேள்வி?!!
அவளை தொந்தரவு செய்கிற என்னுடைய வேலைகள் அனைத்தும்.முடிந்தால் நான் செய்யக்கூடிய அவளுடைய வேலைகள்.

அவளுக்கு பிடிக்காத எனக்கு தெரிந்த பெண்களுடன் பேசுவது- :))

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

உலகம் போதுமானதாயிருக்கிறது.


உதிரிப்பதில்கள்:

அட போங்கப்பா வயித்தெரிச்லை கிளப்பிக்கிட்டு!!

நல்லா இருங்கப்பா!

Saturday, June 6, 2009

பூனைகளுக்கு இல்லாத நிர்பந்தம்...




மின்சாரம் தடைப்பட்ட இரவுப்பொழுதில்
உன்னுடைய நினைவுகள் வருவதற்கு,
ஞாயிற்றுக்கிழமையின் மத்தியானமொன்றில் பெருக்கெடுத்த
வியவர்வையோடு முயங்கிய பொழுதுகள் காரணமாயிருக்கலாம்,
கதவுக்கு வெளியில் ஆயத்தமாகிற பூனைகளை சபிப்பதில்
என்ன நியாயம் இருக்கமுடியும் சொல்
சொல்லிக்கொண்டு பிரிந்து போனபிறகு,

வேகமாய் இயங்கிய சாம்பல் நிறப்பூனை புதியதாய் இருந்தது
இந்த சிகரெட் முடியும்வரை பூனைகள் இயங்கக்கூடும்,
அடுத்த கோடைக்கு இந்தப்பூனைகள் எங்கேயிருக்கக்கூடும்,
பூனைகள் இயங்குதலை நிறுத்தி நீளமாய் சப்பதமிட்டன...
இவள் எழுந்து வெளியே வருவதற்குள் போய்விடவேண்டும்

நான் அறிந்து கொள்ள விரும்பாவிட்டாலும்
அவளுக்கும் பூனைகளை தெரிந்திருக்கலாம்,
கோடையின் கசகசப்புகள்...
வெறுமனே வெளிப்புழுக்கம் மட்டுமல்ல.

picture:gattinapaintings

Thursday, June 4, 2009

ஆறாவது உலகம்...

ஒரு பேனை அதன்மூடியை காணவில்லை,
சிகரெட்டுகளின் பெட்டி அதைப்பற்றவைக்கிற சாதனம்,
தலைமாட்டில் இருக்கிற புத்தகங்கள்,
வரிசை மாறியிருக்கிற சிறுகதையொன்றின் பிரதிகள்,
எழுதி குறையிலிருக்கிற கடிதத்தின் தாள்கள்,
கழுவ வேண்டிய நிலையில் எப்பொழுதும் இருக்கிற தலையணை உறையில்
எழுதியிருப்பது இல்லாத அவளுடைய பெயராய் இருக்கலாம்,
கிறுக்கல்களோடு இருக்கிற படுக்கை விரிப்பு
கலைந்து கிடக்கிற போர்வை,
கழற்றிப்போட்ட இரவு உடை,
மூட்டைப்பூச்சிகள் குடியிருக்கிற மெத்தையின் இடுக்குகள்,
மெத்தைக்கடியில் பரவியிருக்கிற...
கோபிகிருஷ்ணன் பேட்டி,
டிசேயின் பின்நவீனம்,
அய்யனாரின் உரையாடிலினி,
எஸ்ராவின் துயர்மிகு பொழுது,
ஷேபாசக்கதியன் தமிழ்,
ஓஷோ சில குறிப்புகள்,
தமிழ்நதியின் அழைத்துக்கொண்டிருக்கிறது வெளி,
அகிலனின் வீடெனப்படுவது யாதெனில்,
எழுதியவர் பெயர் மறந்து போன
ஈழத்தமிழர்களும் இலக்கியப்புடுங்கிகளும்,
அனுப்பப்படாத சில கடிதங்கள்...

கனவில் வருகிற பூனைகள்,
நடு இரவில் அழைக்கிற அரேபியப்பெண்கள்,
படுத்ததும் உறங்கிவிடுகிற நெருக்கம்,
பழக்கப்பட்ட வாசனை என...
ஐந்து பேர் கொண்ட அறைக்குள் இருக்கிற
ஆறாவது உலகம் அது எனக்கானது.

Friday, May 15, 2009

மழைக்கு எழுதிய சொற்கள்...





இங்கே எழுதிய சொற்களை இவ்விடத்திலும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அந்த வார்த்தைகளை எழுதுவதற்கு அழைத்த சென்ஷிக்கும், பேசும் கவிதைகளுக்கான ஏற்பாடுகள் செய்கிற நண்பர்களுக்கும் நன்றி.

\\
நேற்று பெய்த மழையில்
இன்னமும் நனைந்து கொண்டிருக்கிறது உயிர்
சொட்டுச்சொட்டாய்
உன் நினைவுகள்...


\\
மூன்று வருடங்களுக்கு பிறகு
நினைவு படுத்தியிருக்கிறது இந்தமழை,
நீ பிரிவறிவித்த மழை நாளின் இரவையும் கூடவே
உன்னோடு கழிந்த விடு முறை நாட்களின்
மழை நேரப் பின்மதியங்களையும்...
மழை எப்பொழுதும்
மழையாகவே இருக்கிறது!


\\
எப்பொழுதாவது ரசிக்கக்கிடைக்கிற
தாழ்வாரத் தூவானங்களில்
தெறித்தலைகிறது
உன் முகம்,
யாருமற்ற பகல்களில்
வருகிற மழையை
நீயும் ரசிக்கிறாயா?


\\
வாசனைகளோடு வந்து
ஜன்னல் நனைக்கிற சாரல்களுக்கு தெரிவதில்லை
நீ இப்பொழுதெல்லாம் அறைக்கு வருவதில்லை என்பதும்
மழைக்கும் உனக்குமான சினேகம்
மறக்கப்பட்டு விட்டதையும்..


\\
வாசனைகளோடு வருகிற மழைக்கு தெரிவதில்லை
நீயற்ற இரவுகளின் நீளம்,
தனியே அருந்துகிற தேநீருக்கு தெரிவதில்லை
முத்தங்களுக்கு பின்னரான தேநீரைப்பற்றி,
அணைத்துக்கொள்கிற உன் தலையணகைள்
தூக்கம் கலைகிற இரவுகளில் கிசுகிசுப்பாய் பேசுவதில்லை,
நீ ஊருக்கு போன நேரத்தில் வருகிற மழைக்கு தெரியாது
போர்வையை சரிசெய்ய நீயில்லாத இரவுகள் பற்றி,

வந்து விடு அல்லது
மழையை கூட்டிப்போய்விடு!

\\
நனைந்து கொண்டே
பேசி வந்த புதன் கிழமை,
ஈரம் காயும்வரை இருந்துவிட்டுப்போன
ஞானசம்பந்தர் நூல்நிலையம்,
நூல் நிலையத்து விகடனில்
வாசித்த மழைக்கவிதை,
தகரக்கூரையில் விழுகிற
துளிச் சப்தங்கங்கள்,
விடைபெறும்வரை பிரியாமலிருந்த
இடது கைகளின் வெப்பம்,
விடைபெறும் தருணத்தில்
நிகழ்ந்த குளிர்விட்ட முத்தம்,

இங்கே எப்பொழுதாவது வருகிற மழை
இவ்வளவும் கொண்டு வருகிறது
உன் கடிதங்களை தவிர!

Friday, May 8, 2009

தீராத சொற்களும் நினைவுகளும்...

பெருமெண்ணிக்கையில் புறப்பட்டலைகிற சொற்களும், உள்ளேயிருந்து தெறித்து அலைகிற சொற்களின் திமிறல்களுமென திணறிக்கொண்டிருக்கிறது மூளை. புதிய சொற்களின் அழுத்தம் பெரும் பாடாய் படுத்துகிறது.சொல்லிப் புலம்புவதற்கு யாருமில்லாத பொழுதுகள் மிகக் கொடுமையானதாய் இருக்கிறது...

கலவையான சொற்களும் அதன் அமுக்கங்களும் குலுக்கிவைத்த பியர் போத்தலென பொங்கி நுரைத்துக் கொண்டிருக்க எதை எழுதுவேன்? சிதிறிக்கிடக்கிற சொற்களை அப்படியே எழுதிவிடலாம் என்றால் அவற்றை எங்கே இருந்து தொடங்குவது, எப்படி நிறைவு செய்வது என்று தெரியாமல் ஆக்கிரமிக்கிற சொற்களை அவற்றின் போக்கிலேயே விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

எவ்வளவு தூரம் வாழ முடியுமோ அவ்வளவு தூரம் வாழ்ந்து விடவேண்டும் என்பது என் பிரயத்தனமாக இருக்கிறது பால்யம் முதலே. நான் ஆசைப்பட எதுவும் கிடைக்காது போகிற சோகம் அனுபவித்து பழகியதில் சுகமாய் தெரிகிறது. பழக்கப்பட்ட வலிகள் திடீரென்று இல்லாமல் போனாலும் எதையோ இழந்தது போலத்தான் தேன்றுகிறது இல்லையா? அவளிடம் கூட நான் அடிக்கடி சொல்லி இருப்பேன் சிறு வயது முதலே நான் மிக விரும்பிய விசயங்கள் எதுவும் எனக்கு கிடைப்பதில்லை எனவும் நீ எனக்கு கிடைத்திருக்கிறாய் உன்னை இழந்து போக மாடடேன் என்பதாயும் இழந்தால் என்ன நிகழும் என்பது சொல்ல முடியாதென்றும். இப்பொழுது அவள் என்னோடு இருக்கிறாளா இல்லையா என்பதை பின்பொரு நாளில் பேசிக்கொள்வோம்.

என்னை அடையாளம் காட்டத்தொடங்குகிற சொற்களை அரங்கேறறம் செய்வதில் இருக்கிற குழப்பம் என்னை பிரதிபலிக்கிற சொற்களை வாசிப்பதில் இருப்பதில்லை சொல்லப்போனால் அவற்றை திரும்பத்திரும்ப வாசித்துக்கொள்வேன். நீங்கள் என்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்கான உறுதி நிலைகள் தகர்ந்து கொண்டிருக்கிறது உள்ளேயிருக்கிற சொற்கள் செய்கிற ஆக்கினைகளில்,இந்தப் புலம்பல் என் சொற்களுக்கான திருப்திப் படுத்தலாய் கூட இருக்கலாம்.

படபடப்பாய் இருக்கிற பொழுதுகளை பகிர்வதற்கு வெகு நிதானமாய் தண்ணியடிக்க வேண்டுமென்பதாயும் அது ஒரு புரிதல் நிரம்பிய பெண்ணோடு நிகழ வேண்டும் ஏங்கிக்கொண்டிருக்கிறது. நாட்கள் சொல்லவும் கேட்கவும் மறுதலிக்கவும் விவாதிக்கவும் பின் முத்தங்கள் செய்யவும் என அவளோடு பொழுதுகள் கழியவேண்டும் என்பதாய் இந்த இடத்திலிருந்து வெளியேறி விடு என கதறிக்கொண்டிருக்கிறது மனம்.

மனம் விட்டுச்சொல்லி விடுகிறேன் நிறையப்பேசவும், முழுவதும் பகிரவும் மூச்சுத்திணறக் காதல் செய்வும் கறுப்பு நிற தேவதை ஒருத்தியை தேடிக்கொண்டிருக்கிறேன்



பின் குறிப்பு அல்லது எழுதிப்பார்த்த சொற்கள்:

மூளை என்கிற ஒன்றை
செயலிழக்கச்செய்கிற வேகத்தோடு
புறப்பட்டலைந்து கொண்டிருக்கின்ற சொற்களை
கொலை செய்து விடுவதென முடிவெடுத்து
ஒவ்வொன்றாய் அழிக்கத் தொடங்கினேன்
இரத்தமும் சதையுமாய் வெட்டுண்டு
புழுக்களென நெளியத்தொடங்கிற்று
நினைவுப்பெருவெளி
நினைவுகளை அழிக்க வேண்டிய
நிர்ப்பந்தம் வந்துவிட மூளையை
வெளியே எடுத்துவிடலாம் என முடிவெடுத்தேன்.

அறுக்கத்தொடங்குகிற தருவாயில்
சன்மாய் ஒலிக்கிறது குரல்
"நீங்கள் நல்லா இருக்கோணும்... நான் போறன்"

அறுத்துக்கொள்வதை சட்டென்று நிறுத்தி
ஒரே மூச்சில் குடித்து முடித்தேன்
இருபத்தேழாவது குவளையையும்

சுவரோடு சாய்ந்து
கால் மேல் கால் போட்படி
சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டேன்

இப்பொழுது...

கறுப்பு நிறத்தாள்களில்
இரத்த நிறச்சொற்கைள
எழுதிக்கொண்டிருக்கிறேன்!


\\
எழுதிக்கொண்டே இருப்பதற்கு போதுமானதாய் தீராமல் இருக்கின்றன சொற்கள் இருந்தும் எதை எழுத என்று தெரியாமல் திணறுகிறது மனம்.சொற்களை எழுதி விடுவது தான் நல்லது என்பதாய் கற்பிதம் உருவாக்கி வைத்து விட்டபிறகு அதனை மீறுவதென்பது முடியாத காரியமாய் இருக்கிறது.

\\
எல்லாமே அழிந்து போனதாய் இயங்க மறுத்துக்கொண்டிருக்கிறது மூளை இன்னமும் எங்கே இருக்கிறாய் நீ.என்னை எழுத விடு இல்லையேல் வந்து விடு.

Monday, April 20, 2009

இழந்து போன நாட்களும் ஈழமும்...





நானென்ன கவிதை எழுத வேண்டுமா அல்லது எனக்கு இல்லாத அறிவை இருப்பதாய் ஏதாவது எழுதிக்காட்ட வேண்டுமா, தேடிப்படித்தலும் வாசித்தலும் எனக்கு இயைபான சூழலில் மட்டுமே நிகழ்கிறது. கட்டாயமாய் சில பின்னூட்டங்கள் அதுவும் எனக்கு நேரமிருந்தால் மட்டுமே பதிவுகளென்று நானெழுதுகிற புலம்பல்கள்.

போங்கடா நீங்களும் உங்கடை வியாக்கியானங்களும்... என்னிடம் புரிதல் இருக்கிறது அது உங்களை விட சற்று அதிகமாயும் இருக்கலாம். இருந்தும் எனன செய்வது புலம்பல் இருந்து கொண்டுதான் இருக்கிறது இந்தக் கண்களையும் குழந்தைகளையும் படிம்பிடித்தவனுக்கு என்ன மனோ நிலை இருக்கிறதோ எனக்கு தெரியவில்லை..என்னை கடினப்படுத்துகிறதாய் இருக்கிறது நிஜங்கள் உங்களையும் உலகத்தையும் மிகக்கேவலமாகன வார்த்தைகளில் திட்டிக்கொள்வேன் சமயங்களில் பலமாக சிரிக்கவும் செய்கிறேன் நிச்சயம் அது உங்களுக்கு பிடிக்காத சிரிப்பாகத்தான் இருக்கும்.


ஏதோ அந்தக்கண்கள் என்னைத்தான் பார்ப்பது போலவும் அவை என்னிடம் பேச முயல்கிறதைப்போலவும் இன்னும் கொஞ்சம் போய் என்னை பல கேள்விகள் கேட்பதாயும் மிக தீர்மானமான குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்துவதாயும் உணர்கிறேன் அந்தக்கேள்விகள் என்னை தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாயும் எப்பொழுதும் என் காதுகளுக்குள் கேட்டக்கொண்டிருப்பதாயும் இருக்கிறது. எப்பொழுது இந்த புகைப்படங்களை பார்த்தேனோ அப்பொழுதிலிருந்து அடச்சே என்கிறமாதிரி இருக்கிறது பொழுதுகள்...

எழுதி அழித்து எழுதி அழித்து எழுதிக்கொண்டிருக்கிறேன் ஒரே வரிகளை... சமயங்களில் ஈழம் வேண்டாம் அவர்களை விட்டுவிடுங்கள் என்பதாய் தோன்றுகிறது எதையும் யோசிக்காமல் எதிர்படுகிறவர்களை கொலை செய்யத்தோன்றுகிறது சில நேரங்களில் திடீர் தீடீரென்று கேபமாய் வருகிறது மிகச்சத்தமாக கெட்டவார்தைகளில்(கெட்ட வார்த்தைகள் என்று இருக்கிறதா)) கத்துகிறேன் தமிழ் சிங்களம் ஆங்கிலம் என அது கலவையாய் இருக்கிறது எப்பொழுதும் என்னுடைய மொழி என் ஊருக்கான சாயல்களில் இருக்காது வட்டார இயல்புகளற்று கலவையானதாய் இருக்கும்.பின் அறை முழுவதும் அதிரும் படியாக கதறுவதுமாதரியாக பாடலை ஒலிக்கவிட்டு அதை மீறுகிற சத்தத்தோடு கத்துவேன் அல்லது பாடுவேன்.

what the hell is going on your country...fuckers...

உங்கள் காதுகளை பொத்திக்கொள்ளுங்கள் அல்லது நீங்களும் என்னைப்போலொரு போலி என்றால் கேட்டும் கேளாமல் விட்டுவிடலாம் உண்மை நான் திட்டுவது உங்களைத்தான் கூடவே இல்லாத கடவுளர்களையும்...


என்னுடைய நாட்டு மக்கள் மீதான வெறுப்புகளும் தேசம் பற்றிய சிந்தனைகளில் விரக்தியும் என்னை துன்புறுதுத்துவதாய் இருக்கிறது. இருந்தும் என்ன எல்லா வயிறும் பசிக்கத்தான் செய்கிறது, புணர்கிற இரவுகள் அதனையும் செய்து கொண்டுதான் இருக்கிறது.

தமிழர் வாழ்கிற இடங்களெங்கும் பரவியிருக்கிற எழுச்சியும், புலம் பெயர் நாடுகளில் நிகழ்கிற எழுச்சியும் தியாகங்களும் போராட்டங்களும் காலம் மிகப்பிந்தியதாய் இருந்தாலும் இந்தக் கண்கள் கொடுத்த சக்தி என்பதாய்யதான் எனக்குப்படுகிறது...

நல்லதொரு தீர்வு வந்து விடும்போல் தெரிகிறது நம்பிக்கைகள் முளைவிட்டிருக்கிறது அந்த நம்பிக்கையில் தானே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது .இயல்பு மாறிப்போன வாழ்வில் இருக்கிற கடைசி நம்பிக்கைகளில்தானே ஈழத்து மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இப்படி சொல்லிக்கொண்டாலும் உலகம் அதன் நிர்ப்பந்தங்களோடு சுழன்று கொண்டிருப்பதில் வாழ்நாட்கள் தீர்ந்து கொண்டிருக்கின்றது...

இந்த சித்திரை வருடப்பிறப்பென்பது வெறுமைகள் சூழ்ந்த நாளாகத்தான் இருந்தது மூக்கு முட்டக்குடித்துவிட்டு புலம்பவேண்டுபோலத்தான் இப்போதைய நாட்களின் மனோநிலை இருக்கிறது...


"we should do some thing for our land" என்கிற பால்ய காலத்து நண்பனொருவனின் வார்த்தைகளை சார்ந்து பல கேள்விகள் உழன்று கொண்டிருக்கிறது. என் மீதான குற்றவுணர்ச்சியும் சேர்ந்து கொள்கிறது. அந்தக்கேள்வியை ஒன்லைனுக்கு வரும் பொழுதெல்லாம் சொல்லும் அவனிடம் பெரும் கோபமும் வருகிறது . இத்தனைக்கும் பேரின்ப நாயகியில் வருகிற நண்பனொருவன் என்பது இவனைக் குறிக்கிற சொல்லாகத்தான் எழுதியிருந்தேன் இவனெப்பொழுது இப்படி மாறிப்போனான்.வாழ்க்கை சில இடங்களில் எதிர்பாராத திசைகளில் திரும்பி விடுகிறது.


நான் முற்றிலும் எதிர்பார்க்காத ஒருவன் உண்ணாவிரதத்தில் அமர்ந்திருக்கிறான் அவனை ஒரு கலைஞனாக எனக்கு தெரியும். ஆனால் ஈழம்சார்ந்த உணர்வாளனாய் அவனை நான் சமீப காலமாகத்தாக்ன அறிந்து கொண்டேன் தீடீரென அவனும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மேடையிலமர்ந்திருக்கிறான் என்பதாக அறிந்த புகைப்படங்கள் என்னை என்னவோ செய்கிறது.காலம் கொடுத்த மாற்றங்கள் அல்லது நான் இழந்தவைகள் என்னை சுயநலக்காரனாய் ஆக்கிவிட்டதோ, இது என்னுடைய வாழ்க்கை நான் வாழவேண்டும் என்பதாய் எப்பொழுது சிந்திக்க தொடங்கினேன்? இப்பொழுதேன் புலம்புகிறேன்?கட்டுகளை மீறிய இயல்புகளைக் கொண்ட நான் எதையும் கடந்து விடுபவன் என்று தம்பட்டம் அடித்த போலிதானோ...?

இல்லை நானொரு போலி இல்லை! என்னிடம் புரிதல்கள் இருக்கிறது சே...!! எவ்வளவு பார்த்திருக்கிறேன் ஐந்து வயதில் பசியைக்கடந்து பத்து வயதில் பிணங்களைக்கடந்தவன் நான். வாழ்க்கையை வாழவேணடும் வாழ்வதற்கு எவ்வளவோ இருக்கிறது என்பதாக கணந்தோறும் அனுபவிப்பவன்.உலகம் போதுமானதாய் இருக்கிறது மனிதர்கள்தான் திருப்பதிப்படுவதில்லை என்று உலக்ததை பளிக்கிற நான் எதற்கிப்பொழுது புலம்புகிறேன்.

நிப்பாட்டு என்ன சொல்ல வருகிறாய் நீ...?

முடியல்லை மச்சான் ஒரு மாதிரி உண்மையற்ற நாட்களாய் இருக்கிறது பெரும்பாலும் அப்படித்தான் என்றாலும் இப்போதைய நாட்கள் ஒரு விதமாய் தொடர்ந்து தொல்லைப்படுத்துகிறது.

இலங்கையில் எல்லோரும் புரிதல் என்கிற விசயத்தை மறந்து விட்டார்களா யாருக்குமே அந்த சிந்தனை வரவில்லையா பல்கலைக்கழகங்களும் படிக்கிற இளைய சமுதாயம் ஏனிப்படி இருக்கிறது அவர்களிடம் புரிதல்களே இல்லையா அல்லது அப்படியே சரி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் நாம் நம்முடையவேலைகளை பார்த்து விடுவோம் என்கிறது போல போய்கொண்டே இருக்கிறார்களா வலி என்பதை யாரும் உணர்வதே இல்லையா...


மக்கள் படுகிற வேதனைகள் பார்க்கையில் ஏனிப்படி நிகழ்கிறது மீதமிருக்கிற வாழ்நாட்களைத்தானும் உலகம் இனம், மொழி, மதங்களை கடந்து வாழ்ந்து விட முடியாதா அதில் உள்ள சுகமும் சுதந்திரமும் ஏனிவர்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது. அவர்களுடைய நிலம் அதனை கொடுத்து விடுங்கள். ஏனிப்படி அடித்துக்கொண்டு சாகிறார்கள் அவரவர் வாழ்வை கொண்டாடுவதில் எவ்வளவு சுகம் இருக்கிறது தெரியுமா? என்பது என் எண்ணப்பாடாக இருந்தாலும்...


இழந்து போன நாட்களும்,ஏற்பட்டிருக்கிற வடுக்களும்,வரலாற்றிலிருக்கிற பிழைகளும், இன்னமும் தெளிவு பெறாமல் இருக்கிற மூளைச்சலவை செய்யப்பட்ட சிங்கள சமுதாயமும், அரசியல் சுயநலவாதிகளும் என மொத்தமாகப் பார்க்கையில் ஈழம் கிடைத்தே ஆகவேண்டும் என்றுதான் முடிவாகிறது. இது வரை நிகழ்ந்த தியாகங்களும், போராட்டங்களும், இழப்புகளும் கூட ஆதிக்குடிகள் என்கிற இனத்திற்கு சுமுகமான தீர்வை பெற்றுத்தர முடியவில்லை எனில் ஈழம் என்கிற தேசம் அமைவது அவர்களுக்கான வாழ்க்கையை கொண்டாடுவதற்கு வழி செய்யக்கூடும். ஏன் சிங்களவர்களுக்கு கூட தேவையற்ற இழப்புகளையும் காழ்ப்பபுகளையும் சுமந்தலையத்தேவையில்லை இந்தப்பிரச்சனையை சொல்லியே பிழைப்பு நடத்துபவர்களை இனம் கண்டு கொள்ளவும், திரிக்கப்பட்ட மஹாவம்சத்தையும் அறிந்து கொள்ளவும் முடியும்.

கடந்த சில நாட்களில் மட்டும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயிர்களை காவுகொண்டிருக்கிறது குண்டுகள். எழுச்சிகள் தீவிரமாகிக்கொண்டிக்க தீர்வு நெருங்கி விட்டதாக பயம் கொள்ளுகிற அரசு, முடிந்தவரை அழித்து விட முயல்கிற குரூரம் தானே இது. இதனை அனுமதிக்கிற நீங்கள் புரிதல்களற்ற,நாகரிகவளர்ச்சி என்று கழிவுகளை சுமக்கிற மனிதர்கள்தானே.


திசைகள் தீர்மானிக்காமல் பயணங்கள் போகிற நாட்கள் எப்பொழுது கூடுகிறதோ அப்பொழுது உங்கள் தேசம் கொண்டாட்டங்கள் நிரம்பியதாய் இருக்கும். அப்பொழுது உங்கள் புற அடையாளங்கள் உங்களிலிருந்து வெளியேறி ஆனந்தம் உங்கள் ஆத்மாக்களில் நிரம்பியிருக்கும்.

உங்கள் தேசமும் அதற்குரிய அடையாளங்களை இழக்காது அதன் முக்கியத்துவங்களோடு மிளிர்ந்து கொண்டிருக்கும்.

சமாதானம் உங்களிலிருந்து தொடங்கட்டும்.


பின்குறிப்புகள்:

\\
தீராத சொற்களும் தொடர்ந்து செல்கிற உரையாடலும் என்று புலம்பிய பெருமெண்ணிக்கையான சொற்களில் இது ஒரு பகுதி மட்டுமே.

\\
எழுதி மூன்று நாட்களாகிறது என்றாலும் பதிவாக்க விருப்பமில்லாமல் அப்படியே வைத்திருந்தேன். இதனை இப்பொழுது பதிவாக்கி முடிக்கையில் இன்னும் பல மனிதர்களை குண்டுகள் காவுகொண்டிருக்கும்...

\\
கேள்விகள்! கேள்விகள்!! கேள்விகள்...

Friday, April 17, 2009

தலைப்புகளற்ற குறிப்புகள் - 17-04-2009

\\
படபடப்பாய் இருக்கிறது நாட்கள் இதுக்கு என்ன தீர்வென்று அய்யனாரைத்தான் கேட்கவேண்டும்.அவரே சந்தோஷின் குறுந்தகவலைப்பற்றி இனிமேல்தான் யோசிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ஆனால் எனக்கென்னமோ அய்யனார் எழுதுவது மயக்கம் தருவதாய்தான் இருக்கிறது. அய்னாரோடு சேர்ந்து தண்ணி அடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது சந்தர்ப்பம் கிடைகுமென்று நினைக்கிறேன்(கிடைக்குமா?) அந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமான மொட்டை மாடி அமைவதுதான் நிச்சயமில்லாத விசயம். தல நாவல் எழுத ஆரம்பிச்சிட்டதா சொல்லியிருக்கு சீக்கிரமே பதிவுலகை புரட்டிப்போடப்போகிற நான் திரும்பத்திரும்ப வாசிக்கப்போகிற நாவலை எதிர்பார்க்கலாம். சீக்கிரம் எழுதுங்க அய்யனார். தாமதமான பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துக்களையும் இங்கே சொல்லிக்கொள்வது மகிழ்சிக்குரிய விசயம்.

\\
பதிவுலகம் பேசப்போகிற இன்னுமொரு நாவலும் விரைவில் வரும் போலத்தெரிகிறது அது கவித்துவ மொழிதலுக்கு சொந்தக்காரியான தோழி தமிழ்நதியிடமிருந்து.உணர்வுகளை அதிக பட்சம் கடத்துகிற மொழியும், மொழி வசப்படுகிற எழுதுதலும் இருக்கிற ஒரு கவிஞரிடமிருந்து வருகிற தன்னைத்தான் எழுதிச்செல்கிற நாவல் மாதிரியான ஒன்று சுவாரஸ்யங்கள் நிரம்பியதாய் இருக்கும் என்பதில் ஐயப்பாடுகள் இருக்க வாய்புக்ககளே இல்லை.

இரண்டு நாவல்களுக்குமான முன்கூட்டிய வாழ்த்துக்களை இப்பொழுதே பகிர்ந்து கொண்டு நாவலை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை மிக அழுத்தமாக பதிவு செய்கிறேன்.


\\
கடந்த பதிவில் எழுதியவரிகளை நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்களோ எனக்கு தெரியவில்லை. என்னைப்பொறுத்த வரையில் அவை பெரியதொரு புலம்பலில் சிதறிக்கிடந்த சில சொற்கள் தான் இந்தப் புலம்பலை அல்லது சொற்களை கட்டுக்குள் கொண்டு வருவது கொஞ்சம் சிரமமானதாய்தான் இருக்கிறது. புலம்புதலை நிறுத்தினால் சிதறிவிடக்கூடும் கபாலம்.வாழ்வதற்ககு இன்னும் நிறைய இருக்கிறது அதனால் சொற்களை எழுதுதல் என்கிற புலம்பல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இது அடுத்த பதிவுக்கான பின்குறிப்பாகவும் இருக்கலாம்.


\\

கையில கிடைச்சது செல்போன்தான்... :)


*
காணும்,
காணும்... வைக்கிறேன்
எனக்கிற சிணுங்கல்களுடன்
என்னுடைய சம்மதங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிற
மௌனங்களின் பொழுதுகளில் கேட்கிற
மூச்சுவிடும் ஓசைககளில் இருக்கிற
கனம் நிரம்பிய காதலை
சுமக்க முடியாமல் தவிக்கிறதென் தொலைபேசி

*
உரையாடல்கள் நின்றுபோன
உறவொன்றின் அழைப்புக்காய்
ஏங்கிக் கொண்டிருக்கிறதென்
தொலைபேசியும்
மாலைப்பொழுதுகளும்.


*
எழுத்துகள் அழிந்து போன
விசைப்பலகையோடு இருக்கிற
தொலைபேசி திணறிக்கொண்டிருக்கிறது
நிரம்பிப்போயிருக்கிற பிரியங்களோடு வழிகிற
உன் குறுந்தகவல் விசாரிப்புகளில்...

*
அழைப்புகள் தீர்ந்து போன பிறகும்
அழிக்கப்படாமலிருக்கிற
உன் இலக்கமும் குறுந்தகவல்களும்
தனித்திருக்கிற இரவுகளின்
சில கவிதைகளுக்கு வழி செய்கிறது அல்லது
தனிமைக்கு துணையிருக்கிருக்கிறது

*
நாள் முழுவதும் தொடர்கிற
குறுந்தகவல் பரிமாற்றங்களில்
சேர்ந்திருந்த பொழுதுகளை
ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது
பிரிவுக்கு பின்னரும் அழிக்கப்டாமலிருக்கிற உன்
பிரியம் நிறைந்த சொற்கள்..

*
உயிர் நிரப்புகிற உரையாடல்களை
என்னோடு சுமந்தலைகிற
என் தொலைபேசிக்கு தெரியாது
அவள் பிரிவறித்த செய்தி
கடிதமொன்றில் வந்திருக்கிறதென.

*கிட்டத்தட்ட இரண்டரை வருடமாய் என்னோடிருக்கிற செல்போனுக்கு சமர்ப்பணம் இவ்வரிகள்.



\\
அரபு நாடுகளின் வெள்ளிக்கிழமை என்பது அனுபவிக்க விரும்புகிற வியாழக்கிழமை இரவுகளுக்கடுத்த தூக்கம் நிரம்பிய பகல்களாகத்தான் அனேகம் பேருக்கு இருக்கும் எனக்கு அவை தூக்கமற்ற வியாழக் கிழமைகளுக்கு பின்பான பணி நேரப் பகல் பொழுதுகளை தந்துகொண்டிருக்கிறது ஏதாவது எழுதலாம் என்கிற நினைப்பில்லதான் பணிக்கே வருவேன் எதை எழுதுவது முட்டி மோதுகிற சொற்களை எப்படி கோர்வையாக்குவது என்பது தெரியாமல் வாசிக்க கிடைக்கிற பதிவுகளுடன் முடிந்து போய்விடுகின்றன் அவை.

Thursday, April 16, 2009

சாபம்...!








வேறெதுவும் சொல்ல முடியாத வேளைகளில் புரிகிறது
வாழ்வு மீதான பிடிப்பென்பதும் இருத்தலென்பதும்

நானென்பது
எனக்கு இலக்கியமும் தெரியாது,
தத்துவமும் தெரியாது,

வாழ்தல் என்பதென் தப்பித்தல்களும்
இருத்தல் என்பதென் பிரயத்தனங்களும்
என் மறைவுக்கு பின்னர் எழுதப்படும்
எதுவுமில்லாத பின்குறிப்புகளும்.

நீங்கள்...
விதிக்கப்படாது தொடர்கிற சாபமென
தேடிப்படித்தெழுதுவீர்கள்
திரிக்கப்பட்ட வரலாறுகளையும்,
இன்ன பிறவைகளையும்.

இப்பொழுது எழுதிக்கொள்ளுங்கள்
ஆதிக்குடிகளின் அழிவும்
அரிதார(அதிகார) புருஷர்களின் வலியுறுத்தல்களும்
காணாமல் போன கடவுளர்களும் என்பதாக!



பின்குறிப்பு:

\\
நானொரு போலி,பின்குறிப்புகள் தேவைப்படுகிற நீங்களும்.

\\
மிகத்தாமதமானதொரு பிரதிபலிப்பும் சொல்ல விரும்பாத குறிப்புகளும்.

\\
காலம் நல்ல மாற்றங்களை கொண்டு வரும்போல் தெரிகிறது,இரண்டு தலைமுறைகளின் வாழ்நாட்கள் இப்படித்தான் தீர்ந்து போயிருக்கிறது.


*படங்கள் தமிழ்வின் இணையத்தளம்