"
ஒன்றினுக்காய் உருகுவது
ஒன்றினுக்காய் இன்னொன்றினை
விட்டுக்கொடுப்பது
சதா அதே நினைப்பாய் இருப்பது
எங்கு சென்றாலும் பின் தொடர்வது
கேர் கேரிங்
வித் லவ்
பிரியங்களுடன்
முத்தங்களுடன்
இதையெல்லாம் விட ஆபாசமான சொற்கள்
வேறெதுவும் இருக்க முடியாது... "
- அய்யனார்.
நீ எனக்கு ஏதோ ஒரு நினைவில்லாத நாளில் அறிமுகமாகியிருந்தாய் ஆனால் உன் அறிமுகம் எனக்கு நினைவிருக்கிறது.'நீ யார்' என்கிற கேள்விகளோடு நம் உரையாடல் தொடங்கியிருந்தது,கூடவேஅந்த புகைப்படத்தை எனக்கு அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.
தமிழ் சினிமாவின் தாக்கம் அதிகமாய் உள்ள உரையாடல் உன்னிடமிருந்தது. நீயும் உன் தோழிகளும் எப்பொழுதும் அப்படித்தான் என்றாலும் உன்னிடம் குறைந்த பட்டசமெனினும் உண்மைகள் இருந்தன அது இந்த உண்மையற்ற உலகின் அதிகபட்சமாய் இருந்தது. அது எனக்கு பிடித்திருக்கிறது இப்பொழுதும் நீ உண்மைத்தன்மைகளோடு இருக்கிறாய் என நம்புகிறேன். முழுவதுமாய் உண்மையாய் யாராலும் இருக்க முடிவதில்லை. யாராலும் என பொதுமைப்படுத்துவதில் எனக்கு உடன் பாடில்லை எனக்கு முடிவதில்லை.ஆனால் முடிந்தவரை உண்மையாய் இருக்கிறேன் என நம்புகிறேன் இல்லையெனில் என்னால் குடிக்காமல் இத்தனை நாட்கள் இருக்க முடியாது. உண்மைகளை பேசுதலும், உண்மையாய் இருத்தலும் ஒருவகையில் போதையானது. உண்மை விரைவில் சலிக்கும் என்றாலும் அதன் நகர்வுகள் அதிசாத்தியமானவை.
ஒரு உண்மை முடியத்தொடங்கும்பொழுதே அது அடுத்த நகர்வை தந்து விடுகிறது.குற்றவுணர்வுகளின் வஞ்சனைகள் எதுவுமில்லாமல் விலகிவிட உண்மைகளுக்கு சாத்தியம் அதிகமாய் இருக்கிறது. உடல் தனக்கான பசியை எப்பொழுதும் தக்க வைத்திருக்கிறது. ஒரே உடல்தான் பாவம் என்று நீ நம்புகிறவைகளையும் புனிதம் என நீ நம்புகிறவைகளையும் செய்கிறது.பாவமும் புனிதமும் உடல் சார்ந்தே கட்டமைக்கப்படுகிற உனக்கும் எனக்கும் தெரிந்த இந்த சூழல் போலிகளின் குரூரபிம்பங்களை மறைப்பதற்கான மேடையாகவிருக்கிறது உள்ளேயிருக்கிற குப்பைகளை தெளிவாக தவிர்த்து ஒழுக்கம் பேசுகிற சூழல்தானே நம்முடையது. மூடிவைத்தாலும் பாவம் பாவம்தான்.
உனக்கு முன்பொரு முறை சொல்லியிருப்பதைப்போல உன் குரல்களை என்னிடம் அனுப்பு உண்வுகளோடு உயாடப்பழகு குரல்களால் ஒரு கட்டத்துக்கு பிறகு பொய் பேச முடிவதில்லை. தன்முனைப்புகள் அறுந்து போக அவை தம் உடல்களை பேச தொடங்கிவிடுகிறன்றன நிர்வாணமான சொற்கள் உன்மத்தமாய் இருக்கக்கூடும் அவை பொய் பேசுவதில்லை என்பதாலேயே அது சலித்துப்போக்கூடும். மற்றுமொரு தருணம் வரும் வரைக்கும் உண்மைகள் காத்திருக்கின்றன எந்த குற்றவுணர்வும் உண்மைகளுக்கு இருப்பதில்லை பிரிவுகளுக்கு பிறகும் அவைகளால் நிகழுக்கு பொருந்த நெருங்க முடியும்.
இந்த உரையாடலுக்கு சற்றும் சம்பந்தமில்லாதவை என்று நான் நம்புகிற சில விசயங்களை இங்கே தட்டச்ச வேண்டியிருக்கிறது.முன் பின் அறியாத முகம் தெரியாத இரு உடல்களின் தொலைபேசி வழியான புணர்வுகளின் பரவல் குறித்து நீ அறிந்திருப்பாய், அந்த குரல்கள் உண்மையாய் இருக்கக்கூடும். அவை வெறுமனே பேசப்படுகிற வார்த்தைகளை அலங்காரம் செய்யப்பட்ட வெறும் சொற்களை உடல்கள் கண்டு கொண்ட பிறகு அவை தமக்கான பசியை தீர்த்துக்கொள்வதில் தீவிரமாய் இயங்க ஆரம்பிக்கின்றன. அவை மூடி வைக்கப்பட்டிருக்கற உனக்கும் எனக்கும் தெரிந்த இந்த சூழலின் போலித்தனங்களின் தடைகளை தமக்குத்தெரிந்த வழிகளினல் மீறுகின்றன. அவை ஆபத்தானவையாய் இருப்பினும் கூட திடீரென கிடைக்கிற உண்மையின் கிளர்வு மற்றும் உடலின் வேட்கைக்கான தற்காலிக தீர்வும் அசந்தர்ப்பங்களாக கசப்பான இந்த விசயங்களை நடத்தி விடுகின்றன.திறந்து விடப்பட்ட யாழப்பாணத்தின் இந்தப்பூனைகளா என்கிறதைப் போலானவர்களின் அந்தரங்கங்கள் குறித்து இவை பேசினாலும் உண்மை மிக மோசமான நிலையில் இருக்கிறது.
இந்த வெறும் விளக்கமற்ற குரல்களிலும் எனக்கு கோபமிருப்பதனால் இதை பின்பொரு விரிவான தளத்தில் உரையாடுவதற்காக விட்டுவிடலாம்.
________________________________________
காதல் குறித்த உன் அத்தனை கேள்விகளும் என்னிடமும் இருக்கிறது ஆனால் குறைந்த பட்டசமேனும் உண்மையான பதில்கள் என்னிடம் இருக்கிறது அவை உன்னிடம் இல்லாமல் போகலாம்.
தனக்கான ஒரு பொருந்தலை, உடலை, மொழியை ஒரு உயிர் கண்டு கொள்கிற கணங்கள் காதல் என்பதாய் இருக்கக்கூடும். உடலை தவிர்த்து மொழி தனியேயும் மொழியை தவிர்த்து உடல் தனியேயும் இயங்குவது நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு உறவாக இருக்கலாம்.மொழி என்பது சத்தங்களால் ஆனது மட்டுமல்ல பேசாதிருத்தலும் ஒரு வகையில் பேசுதலே.
உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்பதற்கான முழுமையை நீ கண்டு கொள்வதற்கு நீயும் நானும் இன்னும் பேச வேண்டியிருக்கலாம். அதை சொல்வதன் தயக்கம் உன் உண்மைத்தன்மைகளின் மீதான கேள்விளை எழுப்புகிறது. உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்பது ஒற்றைத்தன்மையுடையதாய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தனியே என்னைச்சார்ந்து மட்டும் இருக்க முடியாது.
அடிப்படையில் நீடித்த அன்பென்ற எதுவும் இருக்க முடியாது என்பதை நீ ஏற்றுக்கொள்கிறாய்தானே. எப்பொழுதும் காதல் நிரம்பிய வார்த்தைகளை என்னால் பேச முடியாது. எல்லா சமயங்களிலும் நம்பிக்கை தருகிற சொற்களை பேசுவது மிக மோசமான முகமூடிகளில் ஒன்றாய் இக்கலாம். வெறுமனே காத்திருப்புகளும் புனிதக்கதைகளும் கொண்டு காதல் பேச முடியாது. பசித்த உடல்கள் தோற்றுப்போய்விடுகின்றன; இதற்கு எனக்குதெரிந்து பத்து வருடங்கள் காதலித்த சயந்தனையும் சுனிதாவையும் குறித்த கதைகளை உதாரணமாக கொள்ளலாம் (எழுதப்படாத நாவல் ஒன்றில் நீளமான காதல் கதையிலிருந்து சில பகுதிகள் என்கிற கதையிலிருக்கிறது) சந்திக்க முடியாத தூரங்களில் இருக்கும் உறவில் (long distance relationship) எனக்கு பிடிப்பிருப்பதில்லை. அது வெறும் நிர்ப்பந்தங்களின் திணிப்பு, ஒரு வகையில் தன்னைத்தானே ஏமாற்றுதல். ஏற்கனவே இருந்த காதலையும் அன்பையும் கூட காத்திருப்பின் நிகழ் கலைத்துப்போட்டுவிடுகிறது என்பதே உண்மையாயக இருக்கலாம். காதல் தனித்திருக்கிற இரண்டு உடல்களின் மொழி, புரிதலின் வெளிப்பாடு. புனிதங்களும் ஒப்பனை செய்யப்பட்ட கதைகளும் அவற்றின் போதாமையை விரைவிலேயே நிரூபிக்கின்றன. அவை நம் சாதிய, மற்றும் கலாச்சார சமுதாய கட்டமைப்பின் சுதந்திரமற்ற தன்மையினால் வெளியே தெரியாமல் மூடப்படுகின்றன. அன்பு எப்பொழுதும் விறைத்த குறிகளைப்போல துருத்திக்கொண்டிருப்பதில்லை அது இயல்பாக வெளிப்படுகிற ஒன்று அதன் தருணங்களை கண்டடைதலும் நீட்டித்திருப்பதிலுமே பெரும்பாலான உறவுகள் வெற்றியடையக்கூடும் அவளை அவளாகவும் அவனை அவனாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது பொருந்துகிற உயிர்கள் ஒன்றை ஒன்று அதனதன் இயல்பு மாறாமல் ஏற்றக்கொள்தலே சிக்கலற்ற உறவு முறைக்கு சாத்தியமாயிருக்கலாம்.
காதல் எதிர்பார்ப்புகளின்பால் உருவாகிறது என்றாலும் திணித்தல் அதன் ஆயுளை குறைக்கிறது. புரிதல் என்கிற ஒன்றை குறித்து பேசாமல் எந்த உறவும் இருக்கவே முடியாது.
பரஸ்பரம் பயன் படுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிற எந்த உறவும் தெரிந்தே சொல்கிற நேர்முக நிகழ்வுகளின் பொய்களைப்போலானவை, வெறும் மேடைகளுக்கானவை திரைக்குப்பின்னால் அவை ரகசிய விசாரணை அறைகளின் மூலையில் இருக்கிற இருளைப்போல அழுத்தமாய் உணரக்கூடியவை.
போதும் மாயா... சோர்வாயிருக்கிறது இப்போதிருக்கிற மனோநிலையில் அன்பை எவ்வளவு மறுதலித்தாலும் அது தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை.
இதை நான் உன்னோடு பேசவேண்டும் என நினைத்திருக்கவில்லை.ஆனால் யாருடனாவது பேசினால் தீரும் என்றிருந்திருக்கிறேன் வழக்கம்போல 'வேற பிராக்கில்லை' என்றே இதையும் சகித்துக்கொள்வாயாக.
உனக்கு பிடிக்காத சொற்களை
நான் எழுதாமலிருந்திருக்கலாம்
எனக்கு பிடித்தமான சொற்களை
நீ பேசாமலிருந்திருக்கலாம்
என்னை நீ அறிவாய் என்பதில்
எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது மாயா
உனது நெருக்கம்
எனக்கு நம்பிக்கை தருவதாய் இருக்கிறது
ஒப்பனை செய்யப்பட்ட வார்த்தைகளை
இனிமலும் உன்னோடு பேசப்போவதில்லை
நேரடியான சொற்களைக்கொண்டு இந்த
கசப்பான உரையாடலை மறந்து விடுவோம்
என்னை சகிக்கிற உன் திமிரை
மதுக்கோப்பைகளில் வழிய விட்டபடி
முத்தங்களுக்கான இடைவெளிகளில் அமர்ந்தபடி
இரவு முழுவதும் பேசலாம்.
ஏதோ ஒரு கணத்திலேனும்
காதல் நிகழும் படிக்கு நானும்
நிகழாதிருக்கும் படிக்கு நீயும்
பிடித்தமான பூனைக்குட்டிகளாய் மாறிவிடலாம்.
____________________________________________
பின் குறிப்பு:
//
இந்த பகிர்வை சாத்தியப்படுத்துகிற மாயா- 'ரகசியங்கள் உலாவுகிற அறையில் உறங்குபவள் பற்றிய குறிப்புகளுக்கு' சொந்தக்காரி இவளைக்குறித்து பின்னர் பேசலாம். இதுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் என்னை சகிக்கிற அவளுடைய கோபங்களுக்கு நன்றி.
//
அய்யனாரை துணைக்களைத்தபடி நிலைதகவல்களில் உரையாடுதல் என்பது இந்த குழம்பலின் தொடக்கப்புள்ளி, நன்றி அய்யனார்.
Showing posts with label எழுத்து வெளிக்குறிப்புகள்.... Show all posts
Showing posts with label எழுத்து வெளிக்குறிப்புகள்.... Show all posts
Friday, March 4, 2011
Sunday, January 10, 2010
புதிய நாட்களின் ஆரம்பம்.
புதிய நாட்களின் ஆரம்பம் - தாமதமான சில குறிப்புகள்.
சென்றவருடத்தைப்போலல்லாது இலேசான போதையும் மிகுந்த கொண்டாட்டமானதுமான ஒரு மனோ நிலையோடே தொடங்கியிருக்கிறது இந்த வருடம்.இருந்தாலும் இந்த வருடம் பெரிய மாற்றங்களைக்கொண்டு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் இருந்ததோ என்னவோ ஒரு மாதிரி அழுத்தமாகத்தான் ஆரம்பித்திருக்கிறது.கொண்டாட்டத்துக்குரிய மனோ நிலையை கொண்டு வருவதற்கு நிறையவே முயன்றிருக்கிறேன் என்பதாய் ஒரு உணர்வு எனக்கு உறுத்திக்கொண்டிருக்கிறது.அழுத்தம் நிறைந்த ஆரம்பமாக தோன்றுவதற்கான காரணம் அதுவாக இருக்கக்கூடும்.முத்தங்களோடு ஆரம்பித்த பழைய சில வருடங்கள் பற்றிய நினைவுகளும் கூடச் சேர்ந்து கொள்கின்றது.
இரண்டாயிரத்து ஒன்பது நினைத்ததை விட வேகமாக கடந்திருக்கிறது நினைக்காத பல விசயங்களையும் நிகழ்த்திக்கொண்டு. போர் துரத்துகிற மனிதர்கள் பற்றியதொரு துயரக்கதையை இந்த வருடம் முழுவதும் பேசிக்கொண்டே இருந்தது எனக்குத்தெரிந்த உலகம். வாழ்க்கை இன்னமும் மீதமிருப்பதாய் நம்பியிருக்கிறார்கள் மிகச்சொற்பமான என் மனிதர்கள்.
இதுவரையும் தொடர்பிலிருந்த தேவதை ஒருத்தியின் தொடர்பு கடந்த வருடத்தின் கடைசிகளில் இல்லாமல் போயிருக்கிறது.இரண்டாயிரத்து ஒன்பதின் தனிப்பட்டவலிகளில் ஆகக்க கடினமானது இதுவாயிருக்கலாம்.
புலம்புதல் என்பதிலும் வாசித்துக்கரைதல் என்பதை அதிகமாக உணர்ந்திருக்கிறேன். இப்பொழுதே வாசிக்க வேண்டும் என்கிற புத்தகங்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் கூடிக்கொண்டேயிருக்கிறது. கடந்த வருட இணைய வாழ்வின் இன்னொரு முக்கியமான விசயம் பலரது நெடுநாள் நச்சரிப்புக்கு பிறகு முகபுத்தக(facebook) ஜோதியில் ஐக்கியமாகியது.பெரும்பங்கான பேர்கள் பொழுது போக்காய் இயங்கினாலும். facebook செய்திருக்கிற முக்கியமன விசயங்களில் ஒன்று மீண்டும் புதுப்பிக்கப்டுகிற தொடர்புகளும் தேடித்தந்திருக்கிற பழைய உறவுகளும்.இது பற்றி மற்றொரு பகிர்வில் சொல்கிறேன்.
எவ்வளவுதான் குரூரங்களும் நம்பிக்கையின்மைகளும் சுற்றிக்கிடந்தாலும் வாழ்வின் நகர்தலுக்கான நம்பிக்கைகள் எங்கேயிருந்தாவது கிடைத்துக்கோண்டேயிருக்கிறது.அழுத்தம் மிகுந்த பல இரவுகளை கொடுத்திருக்கிறது 2009! நானாகவே வெளியேறி வந்திருக்கிறேன் என்பதாகத்தான் இப்பொழுது தோன்றுகிறது. இன்னமும் கொஞ்சம் தெளிவு வந்திருப்பதாய் நம்புகிறேன். அதற்கு என் தனிமையை தோள்செய்த புத்தகங்ளுக்கும்,பார்க்கக்கிடைத்த திரைப்படங்களுக்கும் என்னை மீட்டெடுத்த சொற்களை எழுதியவர்களுக்கும் நன்றி.
அருகிலிருந்தவர்களோடு பகிர்ந்து கொண்டதை தவிர்த்து ஓரிருவரை தவிர யாருக்கும் அழைப்பை ஏற்படுத்தாத இந்த வருடத்தின் தொடக்கம் எனக்கு எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறது. நான் எதிர்பார்க்கிற எதிர்பாராவின்மைகள் அப்பொழுதே தொடங்கியிருக்கலாம்.
எப்போதும் போல எழுதாத சொற்களின் திணறல் குறைவதாக தெரியவில்லை! உள்ளிருக்கும் சாத்தான் விழிக்கும்வரை நான் புலம்பலாம்.முன்னிலும் தீவிரமாக பணம் என்னை துரத்த ஆரம்பித்திருக்கிறது.வேறெதுவும் சொல்லத் தோன்றாவிட்டாலும், நம்பிக்கையோடிருக்கிறார்கள் சில மனிதர்கள்; மீதமிருக்கிற கண்ணிவெடிகளை உழுது விதைக்கிற நிலமும் விளையத்தான் போகிறது.
சென்றவருடத்தைப்போலல்லாது இலேசான போதையும் மிகுந்த கொண்டாட்டமானதுமான ஒரு மனோ நிலையோடே தொடங்கியிருக்கிறது இந்த வருடம்.இருந்தாலும் இந்த வருடம் பெரிய மாற்றங்களைக்கொண்டு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் இருந்ததோ என்னவோ ஒரு மாதிரி அழுத்தமாகத்தான் ஆரம்பித்திருக்கிறது.கொண்டாட்டத்துக்குரிய மனோ நிலையை கொண்டு வருவதற்கு நிறையவே முயன்றிருக்கிறேன் என்பதாய் ஒரு உணர்வு எனக்கு உறுத்திக்கொண்டிருக்கிறது.அழுத்தம் நிறைந்த ஆரம்பமாக தோன்றுவதற்கான காரணம் அதுவாக இருக்கக்கூடும்.முத்தங்களோடு ஆரம்பித்த பழைய சில வருடங்கள் பற்றிய நினைவுகளும் கூடச் சேர்ந்து கொள்கின்றது.
இரண்டாயிரத்து ஒன்பது நினைத்ததை விட வேகமாக கடந்திருக்கிறது நினைக்காத பல விசயங்களையும் நிகழ்த்திக்கொண்டு. போர் துரத்துகிற மனிதர்கள் பற்றியதொரு துயரக்கதையை இந்த வருடம் முழுவதும் பேசிக்கொண்டே இருந்தது எனக்குத்தெரிந்த உலகம். வாழ்க்கை இன்னமும் மீதமிருப்பதாய் நம்பியிருக்கிறார்கள் மிகச்சொற்பமான என் மனிதர்கள்.
இதுவரையும் தொடர்பிலிருந்த தேவதை ஒருத்தியின் தொடர்பு கடந்த வருடத்தின் கடைசிகளில் இல்லாமல் போயிருக்கிறது.இரண்டாயிரத்து ஒன்பதின் தனிப்பட்டவலிகளில் ஆகக்க கடினமானது இதுவாயிருக்கலாம்.
புலம்புதல் என்பதிலும் வாசித்துக்கரைதல் என்பதை அதிகமாக உணர்ந்திருக்கிறேன். இப்பொழுதே வாசிக்க வேண்டும் என்கிற புத்தகங்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் கூடிக்கொண்டேயிருக்கிறது. கடந்த வருட இணைய வாழ்வின் இன்னொரு முக்கியமான விசயம் பலரது நெடுநாள் நச்சரிப்புக்கு பிறகு முகபுத்தக(facebook) ஜோதியில் ஐக்கியமாகியது.பெரும்பங்கான பேர்கள் பொழுது போக்காய் இயங்கினாலும். facebook செய்திருக்கிற முக்கியமன விசயங்களில் ஒன்று மீண்டும் புதுப்பிக்கப்டுகிற தொடர்புகளும் தேடித்தந்திருக்கிற பழைய உறவுகளும்.இது பற்றி மற்றொரு பகிர்வில் சொல்கிறேன்.
எவ்வளவுதான் குரூரங்களும் நம்பிக்கையின்மைகளும் சுற்றிக்கிடந்தாலும் வாழ்வின் நகர்தலுக்கான நம்பிக்கைகள் எங்கேயிருந்தாவது கிடைத்துக்கோண்டேயிருக்கிறது.அழுத்தம் மிகுந்த பல இரவுகளை கொடுத்திருக்கிறது 2009! நானாகவே வெளியேறி வந்திருக்கிறேன் என்பதாகத்தான் இப்பொழுது தோன்றுகிறது. இன்னமும் கொஞ்சம் தெளிவு வந்திருப்பதாய் நம்புகிறேன். அதற்கு என் தனிமையை தோள்செய்த புத்தகங்ளுக்கும்,பார்க்கக்கிடைத்த திரைப்படங்களுக்கும் என்னை மீட்டெடுத்த சொற்களை எழுதியவர்களுக்கும் நன்றி.
அருகிலிருந்தவர்களோடு பகிர்ந்து கொண்டதை தவிர்த்து ஓரிருவரை தவிர யாருக்கும் அழைப்பை ஏற்படுத்தாத இந்த வருடத்தின் தொடக்கம் எனக்கு எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறது. நான் எதிர்பார்க்கிற எதிர்பாராவின்மைகள் அப்பொழுதே தொடங்கியிருக்கலாம்.
எப்போதும் போல எழுதாத சொற்களின் திணறல் குறைவதாக தெரியவில்லை! உள்ளிருக்கும் சாத்தான் விழிக்கும்வரை நான் புலம்பலாம்.முன்னிலும் தீவிரமாக பணம் என்னை துரத்த ஆரம்பித்திருக்கிறது.வேறெதுவும் சொல்லத் தோன்றாவிட்டாலும், நம்பிக்கையோடிருக்கிறார்கள் சில மனிதர்கள்; மீதமிருக்கிற கண்ணிவெடிகளை உழுது விதைக்கிற நிலமும் விளையத்தான் போகிறது.
Labels:
எழுத்து வெளிக்குறிப்புகள்...
Wednesday, November 18, 2009
ஊதா நிறப்பூவைச்சூடியவளும் வேற்றுகிரகத்தின் இளவரசனும்...
போலி எல்லைக்கோடுகள் போடாத தோழிகள் கிடைப்பது வரம் என்பது மிகையல்ல. கொஞ்சம் இலக்கியம் கொஞ்சம் திமிர் நிறைய தைரியம் என அமைகிற தோழிகள் நான் நம்பாத என் முன்வினைகளின் பயன் - புனைவின் சாத்தியக்கூறு.
பல முறையான என் அழைப்புகளுக்கு பதில் சொல்லாமல் இருந்த தோழி ஒருத்தியின் பெரியதொரு ஊடலுக்கு பிறகு பேசக்கிடைத்த; எனக்கு பின்னிரவைப்போன்ற காலைப்பொழுதொன்றில்.

என்னடா பிறழ்வு கிறழ்வெண்டு விளங்காத மாதிரி எழுதியிருக்கிறாய்..
நானே விளங்காமத்தான் இருக்கிறன் அதான் உப்பிடி.. :)
நீ சும்மா கனக்க யோசிக்காத அதென்ன படம் into the wild.
அந்தமாரி படம் முடிஞ்சா பார், எனக்கு நெருக்கமான ஒரு மனிசன் கிரிஸ்!உள்ளுக்க இருந்த ஆசைகளை தூண்டி விட்டிருக்கிறான். படம் பாத்த அண்டைக்கு குடிக்கோணும் போலயே இருந்திச்சு.
நீ சொல்லுற படங்கள் எல்லாம் பாத்தா நித்திரை கொள்ளேலாது பாப்பம் try பண்ணுறன்.
உண்மைல என்னடி வாழ்க்கை இது போலித்தனமா செஞ்சு வச்சமாதிரி கொஞ்சம் கூட உண்மை இல்லாத மனிசர்களோடை சீ...
கனக்க யோசிக்கிறா போல இருக்கு ஊருக்கு போயிட்டுவா...
ச்சா அப்படியெண்டில்லை ம்ம்.. ஓமடி ஊருக்கு போனா நல்லதுதான்.. wanna get a break.
ம்ம் போட்டு வா..
போறதுக்கு காசில்லை நீ தந்தா போயிடுவன்..
என்ன செய்யுற காசையெல்லாம்?!
என்னைப்பற்றி தெரியும்தானே காசை சேமிக்கிறதெண்டுறது எனக்கு தெரியாத விசயம்...நாளைக்கெண்டெல்லாம் நான் நினைக்கிறதே கிடையாது.
என்னால முடிஞ்சதை தருவன் கவனமா போட்டு வா.
ம்ம் தேவைப்பட்டா சொல்லுறன் ஏப்ரல்ல போகலாம் எண்டிருக்கிறன்..
போகேக்க சொல்லு.
மம்ம்...நேரமென்னடி கதைக்கிறது பிரச்சனை இல்லையோ?
சாமத்துல கதைக்கிறது பிரச்சினை இல்லாம? சரி சொல்லு!
நீ ஏன் உப்பிடி எழுதுற காதல் கவிதையெல்லாம் எழுத மாட்டியளோ?
எழுதுறதோ? நான் புலம்புறதை "எழுதுற" எண்டு சொல்லி எழுதுறவங்களை கேவலப்படுத்தாத
அச்ச்சச்சோ... தாங்கேலாதாம்...அடக்கம் இருக்கத்தான் வேணும், அதுக்காக உப்பிடியோ...அவனவன் செய்யுற அலம்பல்களைவிட நீ எழுதுறது நல்லாத்தான் இருக்கு.
thanks thanks.. thanks...
சரி சரி...காதல்,கறுப்பி எண்டு ஒண்டையும் காணேல்லை காதல் கவிதை ஒண்டு சொல்லு பாப்பம்..
ஹாஹஹஹாஹாஹ :))
ஏன்டா சிரிக்கிற...
நீ காதல் கவிதை கேக்குற?
"light purple color blouse and white pijama"
என்ன குடும்பி கட்டியிருக்கிறாயோ, அல்லது..?
உதைவிழும் கவிதையும் வேண்டாம் நீயும் வேண்டாம் போடா..
சொல்லெண்டுறன்... எடுத்தவுடன கவிதை சொல்லுறக்கு நானொண்டும் மெட்டுக்கெழுதுற ஆள் இல்லை.
சரி சரி ரெண்டு "hair clip" மட்டும் போட்டிருக்கிறன் சிக்குப்படாம இருக்க..
ம்ம்ம்....
ம்ம்...
என்ன சொல்ல...
ஹாஆ...கதை சொல்லு!
கதையோ...?
உன்னைக்கேட்டன் பார்!!
ஒரு..பாட்டுப்பாடு.
உனக்கென்னத்துக்கடா இந்த றிஸ்க்கெல்லாம்?
சரி பிடிச்ச பாட்டென்ன?
நீ கவிதை சொல்லெண்டா பாட்டுக்கேக்கிற?
பிடிச்ச பாட்டுத்தான் பச்சைக்கிளி முத்துச்சரம் அதுவும் நீ சொன்ன பாட்டுத்தான் போய்கொண்டிருக்கு இந்தா கேள்...
செம பாட்டு என...?
இதை ஏன் இப்ப போட்டன் எண்டிருக்கு
ஏ..னடி?
தாமரை என்னமாதிரி எழுதியிருக்கிறாள்,பாம்பே ஜெயஸ்ரீ என்ன குரலடா அவளுக்கு...
என்ன இருந்தாலும் பெண்மை காதல் சொல்கிற விதமே தனி! தமிழ் சினிமான்ரை சாபவிமோசனங்கள்ள தாமரையும் ஒராள்.
ம்ம்..
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா...
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திக்கைப் பார்த்திடவா...
சிறுகச் சிறுக..உன்னில்... என்னை
தொலைத்த மொழி சொல்லவா..
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா.
ரணமும் தேன் அல்லவா..
ரணமும் தேன் அல்லவா...
ம்ம்...
என்னடா...
ம்ம்...
நான் கட் பண்ணுறன் ok...
கொஞ்சம் பொறடி..!
ம்ம்...
.....
சொல்லு...
ம்ம்....
சட்டென்று வருகிற மழையைப்போல
எந்த விதமான ஆயத்தங்களுமில்லாமல்
இயல்பாய் எதிர்ப்படுகிறாய் நீ
ஒதுங்க இடமில்லாத நெடுஞ்சாலையில்
தனியே அகப்பட்டவனைப்போல
திணறிப்போகிறேன் நான்.
அட! முந்தின கவிதைகள் போல இருக்கு,நல்ல சிம்பிளா..பண்டிதத்தனம் இல்லாம.
அப்ப இப்ப பண்டிதர் மாதிரி எழுதறனோ..
அப்பிடியெண்டில்லை சிலபேர் வேணுமெண்டே திணிக்கிறது வித்தியாசமான சொல்லுகளை..அது ஒட்டுறதே இல்லை..அதான்.
அதான் நானிப்ப புளொக் பக்கமே போறல்லை.
அதுவும் நல்லதுக்குத்தான் ஹா..ஹா..ஹ. ;)
போடி குண்டம்மா!
சரி இன்னொண்டிருக்கு கேக்கிறியோ.. ;)
சொல்லு...
மெல்லிய ஊதா நிற மேலாடையில்
வாசல்களே இல்லை என்றாள்
திறக்க முடியாத மேலாடையின் உள்ளே மிகுந்திருந்து
எனக்கான அவளது ரகசியங்களும் பிரியங்களும்.
உதை விழும் நாயே...!
கவிதை சொல்லெண்டா நக்கல் என உனக்கு..
சரி சரி முடிஞ்சா குட் நைட் சொல்லிட்டு படு...
ஏன் பின்ன உங்களோட உருகி வழிவம் எண்டு நினைச்சியளோ?!
நீங்கள் உருகோணும் எண்டெல்லாம் நாங்கள் கவிதை சொல்லுறேல்லை...சரியோ!!!
சரி சரி கோவிக்காதை...நான் நாளைக்கு எடுக்கிறன்..இப்ப குட்நைட்.
ஓ.கே குட்நைட்.
பல முறையான என் அழைப்புகளுக்கு பதில் சொல்லாமல் இருந்த தோழி ஒருத்தியின் பெரியதொரு ஊடலுக்கு பிறகு பேசக்கிடைத்த; எனக்கு பின்னிரவைப்போன்ற காலைப்பொழுதொன்றில்.

என்னடா பிறழ்வு கிறழ்வெண்டு விளங்காத மாதிரி எழுதியிருக்கிறாய்..
நானே விளங்காமத்தான் இருக்கிறன் அதான் உப்பிடி.. :)
நீ சும்மா கனக்க யோசிக்காத அதென்ன படம் into the wild.
அந்தமாரி படம் முடிஞ்சா பார், எனக்கு நெருக்கமான ஒரு மனிசன் கிரிஸ்!உள்ளுக்க இருந்த ஆசைகளை தூண்டி விட்டிருக்கிறான். படம் பாத்த அண்டைக்கு குடிக்கோணும் போலயே இருந்திச்சு.
நீ சொல்லுற படங்கள் எல்லாம் பாத்தா நித்திரை கொள்ளேலாது பாப்பம் try பண்ணுறன்.
உண்மைல என்னடி வாழ்க்கை இது போலித்தனமா செஞ்சு வச்சமாதிரி கொஞ்சம் கூட உண்மை இல்லாத மனிசர்களோடை சீ...
கனக்க யோசிக்கிறா போல இருக்கு ஊருக்கு போயிட்டுவா...
ச்சா அப்படியெண்டில்லை ம்ம்.. ஓமடி ஊருக்கு போனா நல்லதுதான்.. wanna get a break.
ம்ம் போட்டு வா..
போறதுக்கு காசில்லை நீ தந்தா போயிடுவன்..
என்ன செய்யுற காசையெல்லாம்?!
என்னைப்பற்றி தெரியும்தானே காசை சேமிக்கிறதெண்டுறது எனக்கு தெரியாத விசயம்...நாளைக்கெண்டெல்லாம் நான் நினைக்கிறதே கிடையாது.
என்னால முடிஞ்சதை தருவன் கவனமா போட்டு வா.
ம்ம் தேவைப்பட்டா சொல்லுறன் ஏப்ரல்ல போகலாம் எண்டிருக்கிறன்..
போகேக்க சொல்லு.
மம்ம்...நேரமென்னடி கதைக்கிறது பிரச்சனை இல்லையோ?
சாமத்துல கதைக்கிறது பிரச்சினை இல்லாம? சரி சொல்லு!
நீ ஏன் உப்பிடி எழுதுற காதல் கவிதையெல்லாம் எழுத மாட்டியளோ?
எழுதுறதோ? நான் புலம்புறதை "எழுதுற" எண்டு சொல்லி எழுதுறவங்களை கேவலப்படுத்தாத
அச்ச்சச்சோ... தாங்கேலாதாம்...அடக்கம் இருக்கத்தான் வேணும், அதுக்காக உப்பிடியோ...அவனவன் செய்யுற அலம்பல்களைவிட நீ எழுதுறது நல்லாத்தான் இருக்கு.
thanks thanks.. thanks...
சரி சரி...காதல்,கறுப்பி எண்டு ஒண்டையும் காணேல்லை காதல் கவிதை ஒண்டு சொல்லு பாப்பம்..
ஹாஹஹஹாஹாஹ :))
ஏன்டா சிரிக்கிற...
நீ காதல் கவிதை கேக்குற?
ஏன் நான் காதல் கவிதை கேக்கக்கூடாதெண்டு எழுதியிருக்கோ...
காதல்கவிதையை நினைச்சா எனக்கு இயலாச்சமன்தான் ஞாபகத்துக்கு வருது. :)
ஒரே ஆக்கள்தானே நீங்கள்...உங்களை திருத்தேலாது!
காதல் கவிதைகளெல்லாம் தாண்டி கன நாளாயிட்டுது காதல் கவிதைகளை படிச்சா சிரிப்புத்தான் வருது...அதாலதான் பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகளை அப்பிடியே விட்டுட்டன்.
சரி நீ எழுத வேண்டாம் எனக்கு சொல்லு
ம்ம் காதல்,கவிதை..கவிதையாவே வேணுமோ?
பரவால்ல எப்பிடியெண்டாலும் சொல்லு நீ அடிக்குரல்ல சொல்லுறதே ஒரு மாதிரிதான் இருக்கும்..
என்னத்தையடி சொல்லுறது
ஏதாவது சொல்லு கெதியில குட்நைட் சொல்லுறதுக்கு...நேரம் ஒண்டரை.
சரி நீ என்ன செய்து கொண்டிருக்கிற,என்ன கலர் உடுப்பு போட்டிருக்கிற?
டேய் என்னத்துக்கு கேக்குற
சொல்லடி...
காதல்கவிதையை நினைச்சா எனக்கு இயலாச்சமன்தான் ஞாபகத்துக்கு வருது. :)
ஒரே ஆக்கள்தானே நீங்கள்...உங்களை திருத்தேலாது!
காதல் கவிதைகளெல்லாம் தாண்டி கன நாளாயிட்டுது காதல் கவிதைகளை படிச்சா சிரிப்புத்தான் வருது...அதாலதான் பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகளை அப்பிடியே விட்டுட்டன்.
சரி நீ எழுத வேண்டாம் எனக்கு சொல்லு
ம்ம் காதல்,கவிதை..கவிதையாவே வேணுமோ?
பரவால்ல எப்பிடியெண்டாலும் சொல்லு நீ அடிக்குரல்ல சொல்லுறதே ஒரு மாதிரிதான் இருக்கும்..
என்னத்தையடி சொல்லுறது
ஏதாவது சொல்லு கெதியில குட்நைட் சொல்லுறதுக்கு...நேரம் ஒண்டரை.
சரி நீ என்ன செய்து கொண்டிருக்கிற,என்ன கலர் உடுப்பு போட்டிருக்கிற?
டேய் என்னத்துக்கு கேக்குற
சொல்லடி...
"light purple color blouse and white pijama"
என்ன குடும்பி கட்டியிருக்கிறாயோ, அல்லது..?
உதைவிழும் கவிதையும் வேண்டாம் நீயும் வேண்டாம் போடா..
சொல்லெண்டுறன்... எடுத்தவுடன கவிதை சொல்லுறக்கு நானொண்டும் மெட்டுக்கெழுதுற ஆள் இல்லை.
சரி சரி ரெண்டு "hair clip" மட்டும் போட்டிருக்கிறன் சிக்குப்படாம இருக்க..
ம்ம்ம்....
ம்ம்...
என்ன சொல்ல...
ஹாஆ...கதை சொல்லு!
கதையோ...?
உன்னைக்கேட்டன் பார்!!
ஒரு..பாட்டுப்பாடு.
உனக்கென்னத்துக்கடா இந்த றிஸ்க்கெல்லாம்?
சரி பிடிச்ச பாட்டென்ன?
நீ கவிதை சொல்லெண்டா பாட்டுக்கேக்கிற?
பிடிச்ச பாட்டுத்தான் பச்சைக்கிளி முத்துச்சரம் அதுவும் நீ சொன்ன பாட்டுத்தான் போய்கொண்டிருக்கு இந்தா கேள்...
செம பாட்டு என...?
இதை ஏன் இப்ப போட்டன் எண்டிருக்கு
ஏ..னடி?
தாமரை என்னமாதிரி எழுதியிருக்கிறாள்,பாம்பே ஜெயஸ்ரீ என்ன குரலடா அவளுக்கு...
என்ன இருந்தாலும் பெண்மை காதல் சொல்கிற விதமே தனி! தமிழ் சினிமான்ரை சாபவிமோசனங்கள்ள தாமரையும் ஒராள்.
ம்ம்..
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா...
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திக்கைப் பார்த்திடவா...
சிறுகச் சிறுக..உன்னில்... என்னை
தொலைத்த மொழி சொல்லவா..
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா.
ரணமும் தேன் அல்லவா..
ரணமும் தேன் அல்லவா...
ம்ம்...
என்னடா...
ம்ம்...
நான் கட் பண்ணுறன் ok...
கொஞ்சம் பொறடி..!
ம்ம்...
.....
சொல்லு...
ம்ம்....
சட்டென்று வருகிற மழையைப்போல
எந்த விதமான ஆயத்தங்களுமில்லாமல்
இயல்பாய் எதிர்ப்படுகிறாய் நீ
ஒதுங்க இடமில்லாத நெடுஞ்சாலையில்
தனியே அகப்பட்டவனைப்போல
திணறிப்போகிறேன் நான்.
அட! முந்தின கவிதைகள் போல இருக்கு,நல்ல சிம்பிளா..பண்டிதத்தனம் இல்லாம.
அப்ப இப்ப பண்டிதர் மாதிரி எழுதறனோ..
அப்பிடியெண்டில்லை சிலபேர் வேணுமெண்டே திணிக்கிறது வித்தியாசமான சொல்லுகளை..அது ஒட்டுறதே இல்லை..அதான்.
அதான் நானிப்ப புளொக் பக்கமே போறல்லை.
அதுவும் நல்லதுக்குத்தான் ஹா..ஹா..ஹ. ;)
போடி குண்டம்மா!
சரி இன்னொண்டிருக்கு கேக்கிறியோ.. ;)
சொல்லு...
மெல்லிய ஊதா நிற மேலாடையில்
வாசல்களே இல்லை என்றாள்
திறக்க முடியாத மேலாடையின் உள்ளே மிகுந்திருந்து
எனக்கான அவளது ரகசியங்களும் பிரியங்களும்.
உதை விழும் நாயே...!
கவிதை சொல்லெண்டா நக்கல் என உனக்கு..
சரி சரி முடிஞ்சா குட் நைட் சொல்லிட்டு படு...
ஏன் பின்ன உங்களோட உருகி வழிவம் எண்டு நினைச்சியளோ?!
நீங்கள் உருகோணும் எண்டெல்லாம் நாங்கள் கவிதை சொல்லுறேல்லை...சரியோ!!!
சரி சரி கோவிக்காதை...நான் நாளைக்கு எடுக்கிறன்..இப்ப குட்நைட்.
ஓ.கே குட்நைட்.
Labels:
எழுத்து வெளிக்குறிப்புகள்...,
தேவதைகள்...
Subscribe to:
Posts (Atom)