Sunday, February 17, 2008

காதல் வாரம்...




*உன்
கூந்தல் கலைத்த
காற்றை
சிறையெடுக்கிறது
என் சுவாசம்...

*உன்
துப்பட்டாவை பிடித்து நடந்த
குழைந்தையிடம்
கெஞ்சுகிறது(கொஞ்சுகிறது)
என் காதல்


*உன்
கன்னம் நனைத்த
மழைத்துளிகளில்
பொறாமைப்படுகிறது
என் முத்தங்கள்...


*உன்
கைகளில் ஊர்ந்த
எறும்பை
கைது செய்கின்றன
என் காதலின் விரல்கள்

*உன்
கொலுசுகள் நனைத்த
கடலலைகளை
குடித்துவிட தவிக்கிறது
என் தாகம்...


(இது நேற்று போட வேண்டிய பதிவு இணைய வசதி கிடைக்காததால் இன்று- என்னிடம் கோபம் இல்லையே காதலர்களே...)

2 comments:

Divya said...

\\*உன்
கைகளில் ஊர்ந்த
எறும்பை
கைது செய்கின்றன
என் காதலின் விரல்கள்\

ஹா ஹா! பாவம் அந்த எறும்பு!

அழகான கவிதை...ரசித்தேன் மிகவும்!

தமிழன்-கறுப்பி... said...

நன்றி திவ்யா...

"ஹா ஹா! பாவம் அந்த எறும்பு!"

எறும்புலதான் அக்கறை...