மற்றுமொரு வரலாற்றுத் துயரம் நிரம்பிய
நாளின்
மீதமிருக்கிற பொழுதில்
அன்றே கொல்லும் உன் அரசா்களையும்
கைவிட்டுப்போன கடவுளா்களையும்
சபிப்பதில் ஆறிவிடுவதில்லை மனம்
கைவிடப்பட்டவா்களின் புலம்பலை கேட்பதற்கு
காலம் ஒரு நாளும் நிற்பதில்லை
குவளை மதுவை கவிழ்த்து விழுங்கியபடி
கேவலமான வார்த்தைகளால் ஆயுதங்களை
காறி உமிழ்வேன்
அகாலமொன்றில் இனங்தெரியாதவா்களை
அனுப்பும்
உங்கள் ரட்சிப்பின் துவக்குகளை
என் குறி மீது வையுங்கள்
அடுத்த வார்த்தையை நான் எழுதாமல்
விடுகிறேன்
கொடுத்த கூலிக்கு சுட வரும் உங்கள்
முகத்தில் உமிழ்வதற்காக.
_____________________________ .
_____________________________ .
நுாற்றாண்டுகளின் துயரத்துக்கு...
தேவநம்பிய திஸ்ஸனை குறைசொல்லி
திரும்ப நடக்கப்போவது எதுவுமில்லை.
1 comment:
Same feelings
Post a Comment